சிதிலமடைந்த மனுநீதிச்சோழன் சிலை சீரமைக்கப்படுமா?

புற்கள், செடி கொடிகள் மண்டிக் கிடக்கும் கல் தேர் மண்டபம்.

புற்கள், செடி கொடிகள் மண்டிக் கிடக்கும் கல் தேர் மண்டபம்.

திருவாரூர் தியாகராஜ சுவாமிகோயிலில் உள்ள கல் தேரில் சிதிலமடைந்துள்ள மனுநீதிச்சோழன் சிலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் தியாகராஜர் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தின் வெளிப்புற திருவீதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்தேர் உள்ளது. இந்தத் தேர் மனுநீதிச்சோழனின் வரலாற்றைக் கூறும் சிற்பங்கள் அடங்கிய ஒரு கலைக்கூடமாக திகழ்கிறது. தேர் நான்கு சக்கரங்களும், குதிரைகளும் பூட்டிய நிலையில் மண்டபத்தின் உபபீடம் அழகிய சிற்பங்களால் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது குதிரைகள் சுதை சிற்பங்களாக உள்ளன. மனுநீதிச்சோழனின் மகன் வீதிவிடங்கன் (ப்ரியவிருத்தன்),தேர் சக்கரத்தில் சிக்கிக் கிடப்பது போல் கல் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

Continue reading

Posted in சோழன் | Tagged , | Leave a comment

மனுநீதிச்சோழன்

மனுநீதிச்சோழன்

மெட்ராஸ் ஐகோர்ட் வளாகத்தில் உள்ள பல்வேறு சிலைகளில் கம்பீரமாக இருப்பது மனு நீதி சோழ சிலையாகும். இந்த சிலை பின்னணியில் உள்ள வரலாறு வருமாறு:
மனு நீதிச்சோழன் அல்லது மனுநீதி கண்டசோழன் என்பவன் நீதி தவறாது ஆட்சி செய்தலுக்கு உதாரணமாக கூறப்படும் ஒரு சோழ மன்னன்   ஆவான். வரலாற்றில் இவ்வாறு ஒரு மன்னன்  இருந்ததற்கான சான்று கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

எனினும் மிகப்பழமையான  மனுநீதிச்சோழன் கதை பெரும்பாலான தமிழ் மக்களுக்கு தெரிந்த கதை யாகும்.இக்கதை பள்ளிப்பாடப் புத்தங்களிலும் இடம் பெற்றுள்ளது. மனுநீதிச்சோழனது மகன் ஒரு நாள் தேரேறி ஊர் சுற்றக் கிளம்பினான்.அவனை அறியாமல் தேரின் சக்கரங்கள் ஏறி ஒரு பசுவின் கன்று இறந்து விட்டது.

Continue reading

Posted in சோழன் | Tagged , | Leave a comment

உடுமலை அருகே 800 ஆண்டு பழமையான கல்வெட்டு!

 

உடுமலை அமராவதி அணை அருகே கல்லாபுரம் பகுதியில் கிடைத்த சுமார் 800 ஆண்டு பழமையான கல்வெட்டு மூலம் பல்வேறு தகவல்கள் தெரிய வந்துள்ளன.

கல்லாபுரத்தில் உள்ள வீதியொன்றில் கேட்பாரற்றுக் கிடந்த இந்தக் கல்வெட்டு குறித்து இந்த ஊரைச் சேர்ந்த ஜான்சன், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரத்துக்குத்  தகவல் கொடுத்தார். சுந்தரத்தின் மூலம் கிடைத்த கல்வெட்டு தகவல்கள்:

கல்வெட்டுத் தூணின் மேற்புற சதுரப் பகுதியில் 5 வரிகளில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. ஸ்வஸ்திஸ்ரீ எனும் மங்கலச் சொல்லுடன் துவங்குகிறது.  சோழ அரசனான வீரராசேந்திரன் பெயரும், அவரது ஆட்சி ஆண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசனின் ஆட்சி ஆண்டு 11 என தமிழ்க் குறியீட்டு எண்களால் குறிக்கப்பட்டுள்ளது. வீரராசேந்திரன் கி.பி. 1207-1256 காலகட்டத்தில் 49 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளான். வட மற்றும் தென் கொங்கு பகுதிகளை இவன் ஆண்டதாகக் கல்வெட்டுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

Continue reading

Posted in கல்வெட்டு, சோழன் | Tagged , , | Leave a comment

முதலாம் ராசாதிராசன் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

அடஞ்சூர் அனந்தீஸ்வரர் கோவில், கர்ப்பக்கிரக கதவு அருகில், கருங்கல்லில், முதலாம் ராஜேந்திர சோழனின் மூத்த மகன், முதலாம் ராசாதிராசன் செதுக்கிய அரிய கல்வெட்டை, தஞ்சை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். தஞ்சையிலிருந்து, 35 கி.மீ. தூரத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே அடஞ்சூர் கிராமம் உள்ளது. இங்குள்ள, அனந்தீஸ்வரர் கோவிலில், முதலாம் ராஜேந்திர சோழனின், மூத்த மகனான ராசாதிராசனின் கல்வெட்டு, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை கல்வெட்டு ஆய்வாளர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய குழு, அனந்தீஸ்வரர் கோவிலுக்கு சென்று, அங்குள்ள கர்ப்ப கிரக கதவின் கருங்கல் நிலையில் காணப்படும் கல்வெட்டை பிரதி எடுத்து ஆய்வு செய்தனர். அந்த கல்வெட்டு, முதலாம் ராஜேந்திர சோழனின் மூத்த மகன், முதலாம் ராசாதிராசன் கல்வெட்டு, என்பது ஆய்வில் உறுதியானது.

Continue reading

Posted in கல்வெட்டு, சோழன் | Tagged , | Leave a comment

சோழமன்னர்கள் வரலாறு கூறும் கல்வெட்டு

cholan-copy

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் மூலம் தெய்வ வழிபாட்டிலும், கோவில்கள் மீதும் சோழமன்னர்கள் கொண்டிருந்த ஈடுபாட்டை பறைசாற்றுகிறது. தமிழகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மாவட்டங்களில் ஒன்று புதுக்கோட்டை. இங்குள்ள குடவறை கோவில்கள், சமணர் படுக்கைகள், மூவர் கோவில்கள் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் அதை சுற்றியுள்ள சிற்றூர்களில் புதையுண்டு கிடக்கும் வரலாற்றுத் தகவல்களை வெளிக்கொணரும் விதமாக ஆராய்ச்சியாளர்கள் இன்றளவும் தொடர்ந்து அகழ்வாராய்ச்சிகள் மற்றும் கள ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்று புதுக்கோட்டை வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையம் சார்பில், அதன் தலைவர் ராஜா முகம்மது, செயலாளர் ராஜேந்திரன் ஆகியோரும் மாவட்டத்தின் பல பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Continue reading

Posted in கல்வெட்டு, சோழன் | Tagged , , | Leave a comment

தமிழகத்திலிருந்து சீனாவுக்கு வணிகத்தொடர்பு அவிநாசி கோவிலில் கல்வெட்டு கண்டுபிடிப்பு

அவிநாசி : “”தமிழகத்தில் இருந்து சீனாவுக்கு வணிகத்தொடர்பு இருந்துள்ள செய்தி பற்றி, அவிநாசியில் புதிதாக கண்டுபிடிக்கபட்ட கல்வெட்டில் குறிப்புகள் காணப்படுகின்றன,” என கல்வெட்டு ஆராய்ச்சியா ளர் கணேசன் தெரிவித்து உள்ளார்.அவிநாசி, வ.உ.சி., குடியிருப்பை சேர்ந்தவர் கணேசன். ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியான இவர், கொங்கு மண்டல கோவில்களில் உள்ள கல்வெட்டுகளை, 40 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறார்.

பல புதிய கல்வெட்டுகளை கண்டறிந்து, தொல்பொருள் துறைக்கு தெரியப்படுத்தி வரும் இவர், சில நாட்களுக்கு முன், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் ஒரு புதிய கல்வெட்டை கண்டுபிடித்தார். அதிலுள்ள செய்திகள் குறித்து, அவர் கூறியதாவது: சோழநாட்டு அரசர்கள், தம்முடைய ஆட்சிக்காலத்தில் சமுதாய வளர்ச்சிக்கு பெரிதும் உழைத்த குடிமக்களுக்குப் பல்வேறு உரிமைகளை வழங்கி சிறப்பித்துள்ளனர்.

Continue reading

Posted in கல்வெட்டு | Tagged , , | Leave a comment

குளித்தலை அருகே ராஜராஜசோழன் கால கோவில் கல்வெட்டுகள் கண்டெடுப்பு

கரூர்: குளித்தலை அருகே மேட்டு மருதூரில் உள்ள ஆறாஅமுதீஸ்வரர் கோவில் என்றழைக்கப்படும் சிவன் கோவில், முதலாம் ராஜராஜன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோவிலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குளித்தலை அருகே மருதூர் காவிரி தென்கரையில் பழமையான சிவன் கோயில் உள்ளது. சோழ மன்னன் முதலாம் ராஜராஜன் (கி.பி. 985-1014)ல் கட்டப்பட்டது.

தொல்லியல் துறையின் கல்வெட்டு முனைப்பு திட்டத்தில் கரூர் சேரர் அகழ்வைப்பக காப்பாட்சியர் நாக கணேசன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. காப்பாட்சியர் நாக கணேசன் வெளியிட்ட அறிக்கை: ஆயிரம் ஆண்டு கடந்த மேட்டு மருதூர் சிவன் கோவிலில் கருவறை, அர்த்தமண்டபம், கருங்களால் ஆன ஜகதி, பட்டி, குமுதவரி, கால் பிரஸ்தரம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. விமானம் மட்டும் செங்கற்களால் அமைந்துள்ளது.

Continue reading

Posted in சோழன் | Tagged , , , | Leave a comment

யார் இந்த சோழர்கள் ?

 

சோழர் காலம் :

தென் இந்திய வரலாற்றின் உயர்விற்கு சோழ அரசர்கள் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். முற்கால சோழர்கள் சங்ககாலத்தில் ஆட்சிபுரிந்தனர். சங்க கால சோழ அரசர்களில் தலைச்சிறந்த அரசர் கரிகாலன் ஆவார். வெகு காலத்திற்குப் பிறகு பல்லவர்கள் ஆட்சி வீழ்ச்சியுற்ற போது சோழ அரசு மறுபடியும் தலைதூக்க ஆரம்பித்தது. விஜயாலயன் எனும் சோழ மன்னரால் மீண்டும் புதுப்பொலிவுடன் சோழர் ஆட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டடது. பிற்கால சோழமன்னர்கள் கி.பி. 850 முதல் கி.பி.1279 வரை சுமார் 430 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர்.

 

சான்றுகள் :

கிடைக்கக் கூடிய பொருத்தமான சான்றுகளின் அடிப்படையில்தான் எந்தவொரு சமூகம் அல்லது அரசாட்சியின் வரலாற்றையும் எழுத முடியும். சோழர்களைப் பற்றி அறிய ஏராளமான கல்வெட்டு, தொல்பொருள், மற்றும் இலக்கியச் சான்றுகள் கிடைக்கின்றன. மகாவம்சம் போன்ற இலக்கியச் சான்றுகளும், மெகஸ்தனிஸ் போன்ற வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகளும் முற்கால சோழர்கள் பற்றி சிறந்த சான்றுகளாக உள்ளன.

Continue reading

Posted in சோழன் | Tagged , , , | Leave a comment

குடுமியான்மலை -1

Kudumiamalai_gopuram

குடுமியான்மலை, புதுக்கோட்டையிலிருந்து ( தமிழ் நாடு, இந்தியா) 20 கி.மீ. தொலைவில் உள்ள சிற்றூர். இங்குள்ள குகைகளில், பல்லவர் கால (கி.பி.ஏழாம் நூற்றாண்டு) இசைக் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் கிரந்த எழுத்தில் காணக்கிடைக்கின்றன. இங்குள்ள கோயிலின் ஆயிரம் கால் மண்டபமும் புகழ் பெற்றது ஆகும். தமிழ் நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பண்ணையும் (அண்ணா பண்ணை, குடுமியான் மலையில் இருந்து ஐந்து கிலோமீட்டர்கள்) இங்கு அமைந்துள்ளது.

வரலாறு :

தற்பொழுதும் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழங்கால நகர அமைப்புகளில், குடுமியான்மலையும் ஒன்று. முற்காலக் குறிப்புகளில் திருநாலக்குன்றம் என்றும், பின்னர் சிகாநல்லூர் என்றும் குடுமியான்மலை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊர் முழுதும் ஒரு மலைக்குன்றைச் சுற்றி அமைந்துள்ளது. அந்தக் குன்றின் அடிவாரத்தின் கிழக்குப் பகுதியில்தான் புகழ் பெற்ற குடுமியான்மலை கோயில்வளாகம் அமைந்துள்ளது.

Continue reading

Posted in கல்வெட்டு | Tagged | Leave a comment

பச்சையப்ப அகமுடைய முதலியார் கல்வெட்டு

காஞ்சீபுரம் விசுவநாத முதலியாருக்கும் பூச்சியம்மாள் என்பவருக்கும் பெரியபாளையத்தில் 1754 ஆம் ஆண்டு பச்சையப்பர் பிறந்தார். பிறக்கு முன்னரே தந்தையாரை இழந்தார். ஆர்க்காடு சுபேதாரின் காரியக்காரராக இருந்த ரெட்டிராயரிடம் ஐந்து வயது வரை வளர்ந்தார். இராயர் மரணமடைந்தவுடன் பூச்சியம்மாள் ஐந்து வயது பச்சையப்பரையும், இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்து சென்னைக் கோட்டைக்கு மேற்கே ஒற்றைவாடை சாமிமேஸ்திரி தெருவில் உள்ள ஒரு சிறு சந்து வீட்டில் குடியேறினார்.

பூச்சியம்மாள் நெய்த வாயல் பெளனி நாராயண பிள்ளையிடம் சென்று ஆதரிக்க வேண்டினார். துவிபாஷியான அவரிடம் ஆங்கிலம் கற்ற பச்சையப்பர் பீங்கான் கடையில் வேலைக்குச் சேர்ந்து பொருள் வாங்கவரும் ஐரோப்பியர்கட்குத் துவிபாஷியானார். பின் நிக்கல்ஸ் என்ற ஆங்கில அதிகாரியிடம் துவிபாஷியாக இருந்தார். பின் கிழக்கிந்தியக் கம்பெனியாருக்கு துவிபாஷியானார்.

Continue reading

Posted in கல்வெட்டு | Tagged , , | Leave a comment