
திருவாரூர் தியாகராஜ சுவாமிகோயிலில் உள்ள கல் தேரில் சிதிலமடைந்துள்ள மனுநீதிச்சோழன் சிலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் தியாகராஜர் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தின் வெளிப்புற திருவீதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்தேர் உள்ளது. இந்தத் தேர் மனுநீதிச்சோழனின் வரலாற்றைக் கூறும் சிற்பங்கள் அடங்கிய ஒரு கலைக்கூடமாக திகழ்கிறது. தேர் நான்கு சக்கரங்களும், குதிரைகளும் பூட்டிய நிலையில் மண்டபத்தின் உபபீடம் அழகிய சிற்பங்களால் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது குதிரைகள் சுதை சிற்பங்களாக உள்ளன. மனுநீதிச்சோழனின் மகன் வீதிவிடங்கன் (ப்ரியவிருத்தன்),தேர் சக்கரத்தில் சிக்கிக் கிடப்பது போல் கல் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.


