கீழமங்கலம் கல்வெட்டு

இடம்: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டத்திலுள்ள ஓசனூத்திலிருந்து பசுவந்தனை செல்லும் சாலையிலுள்ள கீழமங்கலத்தின் வடபுறத்தில், தொடக்கப் பள்ளிக்கு அருகிலுள்ள கிணற்றங்கரையில் உள்ள கல்வெட்டுத் தூண்.

காலம்: கி.பி. 1162 முதல் கி.பி. 1177 வரை திருநெல்வேலி, கன்னியாகுமரிப் பகுதிகளை ஆண்ட சடையவர்மன் குலசேகர பாண்டியராகலாம்.

செய்தி: முதுகுடி நாட்டு மங்கலமான உத்தமபாண்டியநல்லூரில் முதுகுடி நாட்டீச்சுவரமுடைய நாயனார் பூசைக்குரிய தர்ப்பைப்புல் பறித்துக் கொள்வதற்காக இவ்வூரின் நிலங்களுக்கு உரியவர்கள் வசம் அல்லது ஊர் நிர்வாக சபையார் வசம் காசு (அச்சு) வழங்கப்பட்டது. கல்வெட்டின் பிற்பகுதி சிதைந்துள்ளது.



குறிப்பு: * – குறியிடப்பட்டால் அந்த எழுத்து கல்வெட்டு பொறித்தவரின் அவசரத்தால் அல்லது பிழையால் பொறிக்காமல் விடப்பட்ட எழுத்து எனப் பொருள்படும்.

“…” – இவ்வாறு புள்ளிகள் வைக்கப்பட்டால் எழுத்துகள் படித்தறிய இயலாவண்ணம் சிதைந்துவிட்டன எனப் புரிந்துகொள்க.

கல்வெட்டு வரிகள்

1 ஸ்வஸ்திஸ்ரீ கோற்சடை

2 யபந்மரான

3 திரிபுவனச் சக்கர

4 வ[ர்*]த்திகள்[ஸ்ரீ]குலை

5 சேகரதேவற்[கு*] யா

6 ண்டு இரண்டாவது முது

7 குடிநாட்டு மங்க

8 லமான [உ]த்தமப

9 [¡]ண்டிய[ந]ல்லூர்

10 நாயனார் முதுகுடி ந

11 ¡ட்டீச்சுரமுடைய

12 நாயன[¡*]ற்கு இவ்

13 வூரில் புல்லுப் ப

14 ரித்து கொள்ள வீ

15 … தேசித் திருவ

16 … நல்லூர் அச்சு ஒ

17 [ன்று]க்கு மூன்று….

thanks: எஸ். இராமச்சந்திரன்

This entry was posted in பாண்டியன் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *