கவுரியர்

pandian012

கவுரியர் என்னும் சொல் பாண்டியரைக் குறிக்கும்.

கவவு என்னும் உரிச்சொல்லுக்கு அகத்திடுதல் என்பது பொருள். இந்த உரிச்சொல் கவர் என்னும் வினைச்சொல்லாக மாறி, கடல்கோளுக்குப் பின்னர் புதிய நிலப்பகுதியைக் கவவு செய்துகொண்ட (தனதாக்கிக்கொண்ட) அரசர்குடி கவுரியர் எனப்பட்டது.

இராமன் இலங்கை வெற்றிக்குப் பின் ஆலமரத்தடியில் அமர்ந்துகொண்டு மறை ஓதி வழிபட்ட கோடி (தனுஷ்கோடி) கவுரியர் எனப் பெயர் பூண்ட பாண்டியரின் தலைமை இடமாகும்.

கவுரியர் நன்னாடு என்பது பாண்டியநாடு. அந்நாட்டிலுள்ளது அருவி கொட்டும் மலைப்பிளவு. (குற்றாலம்). அப்பகுதி அரசன் தென்னன்.

கவுரியர் மதி போன்ற வெண்கொற்றக் குடையின் நிழலில் நிலப்பரப்பை யெல்லாம் காப்பேன் என முரசு முழக்கிக்கொண்டு தன் ஆணைச் சக்கரத்தை உருட்டுகையில் ஈகைப் பாங்கைத் தவிராது கடைப்பிடித்து வந்தார்களாம். இவர்களின் மரபு வழியில் வந்தவனாம் பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி.

அடிக்குறிப்பு :

  1.  வெல்போர்க் கவுரியர் தொன்முது கோடி … வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த பல்வீழ் ஆலம் – அகநானூறு 70
  2.  அகநானூறு 342
  3.  இரும்பிடர்த்தலையார் பாட்டு புறநானூறு 3
Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

தென்னவன்

pandian012

தென்னர், தென்னன், தென்னவர், தென்னவன், தென்னம் பொருப்பன், தென்னவன் மறவன், தென்பரதவர் போன்ற தொடர்கள் சங்கத்தொகை நூல்களில் தென்னாடு எனப்பட்ட பாண்டிய நாட்டை ஆண்ட பாண்டியரைக் குறிப்பனவாகவும், அவரோடு தொடர்புடைய மக்களைக் குறிப்பனவாகவும் அமைந்துள்ளன.

பாண்டிய மன்னர்கள் செழியன், சேய், பஞ்சவன், மாறன், வழுதி என்னும் பெயர்களாலும் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

‘தென்’ என்னும் சொல் தென்-திசையைக் குறிப்பதோடு மட்டுமல்லாமல் இனிமை என்னும் பொருளையும் உணர்த்தும். :தேங்காய் = இனிய காய். தேங்காய் உள்ளது தென்னை. இதில் ‘தென்’ என்பது இனிமைப் பொருளைத் தருவதைக் காணலாம். இந்த வகையில் தென்னவர் என்னும் சொல் இனியவர் என்னும் பொருளையும் தரும்.

தென் திசையிலிருந்து வடக்கு நோக்கித், தென்மதுரை, கபாடபுரம், வடமதுரை எனக் குடிபெயர்ந்தவர் ஆதலால் இவர்களைத் தென்னவர் என்றனர்.

குடநாடு எனப்பட்ட மேற்குத்திசை சேரநாட்டை ஆண்ட மன்னன் குடவர் கோமான் என்று பெயர் கொண்டது போன்றது இது.

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

சூரக்குடி பொன்னரசு கண்ட விஜயாலயத்தேவர்

நேம நாட்டு கொண்டையன் கோட்டை மறவர் பேரவை
=========================================================

சூரைக்குடி விஜயாலயத்தேவரின் வம்சத்தை சேர்ந்த
https://www.facebook.com/groups/532904683520538/
கொண்டையன் கோட்டை தலைவன் வம்சம் திருநெல்வேலியில் காணும் தலைவனார் வம்சத்தோடு தொடர்புடையவர்கள் வாலும்,வேலும் கொண்டு
வீரம் மனதில் கொண்டு
சிரம் நிமிர்ந்து நின்று
எதிர்த்து நிற்கும் எப்படையும் அழித்து நிற்கும் இப்படையும் கொண்ட எம்குடி கேரள சிங்கவள  மது நேம நாட்டு கொண்டையன் கோட்டை தலவான்களே ….
அவ்வுலகமானாலும் இக்கலியுகம் ஆனால் நம் வீரம் மாறாது… நம் சிறப்பு அழிந்து போகாது…
எத்தொழிநுட்பம் வந்தாலும் அதிலும் நம் பெயர் பொறிக்கபட வேண்டும் என்பதற்காக நம் நாட்டிற்காக நான் உருவாக்கி ஒரு சிறு காட்சி தொகுப்பு

காரைக்குடி அருகே வ.சூரக்குடி என்ற ஊர் உள்ளது இது இன்று சிற்றூராக இருப்பினும் 13-ஆம் நூற்றாண்டு முதல் 16-ஆம் நூற்றாண்டு வரை காணாடு,சூரக்குடி,இராஜேந்திரமங்கலம்கோட்டையூர், மேலூர், கண்ணனூர், தெற்காட்டூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சோழர் மற்றும் பாண்டியருக்கு கீழ் சிற்றரசாக விளங்கியுள்ளது.இதை ஆண்டவர்.இதை மறவர் இனத்தை சார்ந்த பொன்னரசு கண்ட விஜயாலயத்தேவர் என்பவர் ஆண்டு வந்துள்ளார்.

 

[திரு எஸ்.இராமச்சந்திர ஐயர்(நாடார் சரித்திர ஆய்வாளர்) அவர்கள் கவனத்திற்கு தேவகோட்டை அருகிலுள்ள சூரைக்குடியில் கள்ளர் குலத்தைச் சேர்ந்த விசயாலத் தேவன் என்பவருக்கு வன்னியர் என்ற சாதிப்பட்டம் உண்டு. இவ்விசயாலத் தேவ வம்சத்தவர்கள் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் வலங்கை வாழவந்த விசயாலயத் தேவர் என்றே பட்டம் புனைந்தனர்.சாத்தூர்ப் பகுதியிலுள்ள ஏழாயிரம் பண்ணை வன்னியர் (கள்ளர்) வரலாறு பாளையப்பட்டு வம்சாவளியில் பதிவாகியுள்ளது.இதைப்போல் அழகாபுரி ஜமீன் பள்ளி(வன்னியர்) இனத்தை சார்ந்தது என்று பாளையப்பட்டு வம்சாவளியில் பதிவாகியுள்ளது. வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும். எஸ். இராமச்சந்திரன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை – 600113

திரு இராமச்சந்திரன் அவர்களுக்கு தாங்கள் மறவர் இணத்தவர் சிற்றரசுகளான சூரைக்குடி,ஏழாயிரம் பன்னை முதலிய இனத்தவர்களை வன்னியர் கள்ளர் இனத்தவர்கள் என்றும்.அழகாபுரி ஜமீனை பள்ளி(வன்னியர்) என தங்கள் வலங்கைமாலை கட்டுரையில் கூறியிருந்தீர்கள்.மறவர் இனத்தவரை கள்ளர் என்று கூறுவதில் தவறில்லை ஏனெனில் கள்ளர்கள் சகோதர இனமே.மாற்றாரை பற்றி வரலாறு எழுதினால் முதலில் வரலாறை புரிந்து எழுத வேண்டும்.ஒரு வரலாறை பொய்யாக கூட கதை விடலாம் திரித்து கூறக்குடாது என்பதில் கவனம் தேவை. உதாரனமாக “புழுக்கை சானார்” எண்ற பிரிவினரை “புலி கை சான்றோர் வீரர்கள்” என்று எழுதிகிறீர்கள் அது கூட நியாம் தான் தங்கள் இனத்தை எப்படி வேண்டுமானாலும் புகழலாம்.ஆனால் மாற்றாரை பற்றி கூறும் போதும் தாங்கள் இப்படி செய்கிறீர்கள்.உதாரனமாக கள்ளர் சான்றார்,பள்ளி சான்றார்,பார்ப்பான சான்றார் என்று கூறுகிறீர்கள்.கள்ளர் இனத்தவருக்கு 2000-க்கு மேல் பட்டங்கள் இருப்பதாக தெரிகிறது.அவர்கள் ஏன் உங்களை தேடி வந்து இந்த சான்றார் பட்டத்தை சூடவேண்டும் என தெரியவில்லை.இதைப்போல் பிராமனர்கள் தான் ஜாதிய அடுக்கில் உயர்ந்தவர்கள் என கூறுகின்றார்கள்.அவர்கள் ஏன் இந்த சான்றார்பட்டத்தை சூட வேண்டும் மனநோயா?.பாண்டிய வன்னான்,பாண்டிய அம்பட்டர் போன்ற ஜாதியர்கள் உண்டு.பாண்டிய என்ற அடைமொழியை வைத்து அவர்கள் பாண்டியர்கள் என கூற முடியுமா.அதைப்போல் தான் கள்ளசான்றார்,பள்ளி சான்றார்,பார்ப்பானசான்றார் என்பது கள்ளர்,பள்ளி,பிராமனரிடம் பனிபுரிந்த சான்றார்கள் நன்றியின் பேரில் வைத்துகொண்ட முன்பட்டமே தவிர இவர்கள் கள்ளர்,பள்ளி,பிராமன இனத்தவர்கள் கிடையாது.அவர்கள் சான்றார் இனத்தவரே.இதைப்போலத்தான் பாண்டிய சான்றான்,மலையமான் சான்றான்,நாடாள்வ சான்றான்,தளவாய் சான்றான் என்பது அவர்களிடம் உதவிக்கு பனியமர்ந்த சான்றார்களே தவிர அவர்கள் வேறு இனத்தவர்கள் கிடையாது சுத்தமான சான்றார் இனத்தவர்களே.சான்றார் என்ற பெருமைக்குரிய?பட்டம் உங்கள் இனத்தை தவிர யாருக்கும் இருக்காது.அதை வேறு இனத்தவருக்கு சூட்டி மகிழ வேண்டாம்.

IMG-20160125-WA0096 unnamed unnamed (1)

எனவே மாற்று இனத்தவரை பற்றிய அரைவேக்காட்டு தனமான் ஆராய்ச்சி ஆபத்தை தரும் என எச்சரிக்கிறேன்.”சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே (புறம்:312)” என புறநானூறு கூறுகிறது.ஆனால் “சானார்களை சான்றோர் ஆக்குவது எனது கடனே” எனக்கூறும் உங்களை உங்கள் கடமையை செவ்வனே செய்யுமாறு கூறிவிட்டு நமது வரலாறை கான்போம்.]

 


நீண்ட நெடிய ஆய்விக்கு பின்னே நாம் கூறுவது இது தான். வன்னியர் என்பது பட்டமோ சாதியோ அல்லது அரசரால் வழங்கும் விருதோ கிடையாது. இது ஒரு காடு சூழ்ந்த  பகுதியை குறிக்கும் காரண பெயராகும். எடுத்துகாட்டாக கொங்கு என எடுத்து கொள்வோம். கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினருக்கும் கொங்கு என பெயர் இருக்கும். சோழிய என எடுத்து கொள்வோம் அது சோழநாட்டில் வாழும் சகல் பிரிவினருக்கும் ஏன் இசுலாமியருக்கும் மறாட்டியருக்கும் உள்ள பகுதி பேராகும். கொங்கு,சோழிய,பாண்டிய,நாஞ்சில்,கேரள,தொண்டை என்பது போல தான் வன்னி என்னும்  பகுதியை குறிக்கும் பெயர். அதே போலத்தான் வன்னியர் என்பது தொண்டை மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினரையும்  குறிக்கும்.


தொண்டை மண்டலத்தை கச்சி வன நாடு (அ) வன்னிய நாடு என கூறுவர். இதில் குடியிருக்கும் இறைவனை கச்சி வனராசர் இறைவியை கச்சி வனத்தில் தவமிருக்கும் காமாச்சி என கூறுவர். காமாட்சி கோவில் தொண்டை மண்டல உட்பட எல்லா இடங்களிலும் காடுகளில் தான் அமைந்திருக்கும். காமாட்சியை வனக்காமாட்சி,வனப்பேச்சி அல்லது வன்னிய பேச்சி என கூறுவர். எனவே தொண்டை மண்டலத்தை பொருத்தவரை வன்னியராஜன் மற்றும் வன்னிய பேச்சி என்பது தொண்டை மண்டலத்தை ஆளும் ஏகாம்பரேஸ்வரர்-காமாட்சி அம்மனையே குறிக்கும். 


எனவே தொண்டை மண்டலம் மட்டுமல்ல காடுகள் எங்கல்லாம் உள்ளதோ அந்த பகுதியில் வாழும் அனைவருக்கும் உள்ள காரண பெயரே வன்னியர் (அ) காடுவாழ்னர்.

 

அரைவேக்காட்டு தற்க்குறித்தனமான வரலாற்று ஆய்வாளர்களின் சுயநல ஆய்வுகள் கூறுவது போல் ஏழாயிரம் பன்னை,அழகாபுரி,வ.சூரக்குடி(காரைக்குடி அருகில்) ஜமீண்கள் வேறு இணத்தவர்கள் ஜமீனல்ல. அவர்கள் தூய மறவர் பரம்பரை சார்ந்த தொல்குடி மன்னர்கள்.இதற்க்கு பல ஆதாரங்கள் உள்ளன.

உதாரனமாக எழாயிரம்பன்னை,அழகாபுரி ஜமீனகள் வன்னியர் பட்டம் உள்ள மறவர் இனம் என நிக்கோலஸ் டிரிக்க்சும்,கால்டுவெல்லும் திருநெல்வேலி மானுவலில் கூறுகிறார்கள்.

 

 

unnamed (2) 14051722_1750204411915242_4744839600014965811_n 14045633_1750204721915211_844362885978924857_n

இதைப்போல் வ.சூரக்குடி என்ற சிற்றரசு வன்னியர் பட்டம் கொண்ட மறவர் இனத்தவரான விஜயாலத்தேவர் என்பர் ஆண்டது.இவர்கள் மறவர் இனத்தின் உட்பிரிவான வன்னிய மறவர் என்ற இனத்தை சார்ந்தவர்கள். இது 12-16ஆம் நூற்றாண்டு காலத்தில் புதுக்கோட்டைக்கு தெற்கு மற்றும் தென்மேற்கு பிரதேசமான் கானாடு,ஒளிநாடு,இராஜேந்திரமங்கலம்,ஒளிநாடுக்கு தலைநகராக இருந்துள்ளது.இது கானாடு,கோனாடு மறவர் அரையர்களையும் வெள்ளாளர்களையும் குடிமக்களாய் கொண்டது.இவரை பற்றி 40-க்கும் மேற்ப்பட்ட கல்வெட்டுகள் திருமயம்,விராச்சிலை பகுதியில் உள்ளதாக 40-கல்வெட்டையும் ஆராய்ந்த சுப்புராயுலு மற்றும் “புதுக்கோட்டை வரலாறு எழுதிய வீ.மானிக்கம். தம் நூலில் கூறுகிறார்.

கி.பி(1219)

I.P.S.(505) குளத்தூர் தாலுகா அரியூர் ஈஸ்வரன் கோவில் வாசற்படிக்கு தென்புறம்

ஸ்வஸ்தி ஸ்ரீ சோனாடு கொண்ட சுந்தரபாண்டியத் தேவர்க்கு யாண்டு…….திருவகந்தீஸ்வரமுடைய நாயனர் திருக்கோவில் மகாதேவரையும் நாச்சியாரையும் எழுந்தருவித்தால் மாங்குடி மறவன் அவையன் சாத்தன்  (அதளையூர் நாட்டுப்) பேரரையன்………………………. 

 

 

இது இன்றைய சிவகங்கை மாவட்டம் அருகில் உள்ளது. இவர் இன்னும் இவ்வூரிலே வாழ்கிறார் ஊரின் பெரியதனக்காரராகவும் (அம்பலம்) ஆக உள்ளார். இவரது முன்னோர்களில் ஒருவரான பொன்னன் விஜயாலத்தேவர் மதுரை மீனாட்சி அம்மன் மேல் பக்தி கொண்டவர் தினமும் மதுரைக்கு குதிரையில் சென்று வழிபடுவானாம். தன் வயதான காலத்தில் சென்று வழிபட இயலாததால் வ.சூரக்குடியிலும்,முறையூரிலும் மீனாட்சி அம்மன் கோயில் கட்டி வழிபட்டான். இன்றும் அந்த கோயிலும் முதல் மரியாதை பெறும் குடும்பமாக வாழ்கின்றனர்.இந்த கோயில் சிவகங்கை சமஸ்தானத்திற்கு உட்பட்ட கோயிலாகும்.

இவரை பற்றி கல்வெட்டு செய்திகளில் சில,

திருமையம் கல்வெட்டுகள்

சூரைக்குடி அரசு விசயாலத்தேவர்:

 

 

அதலையூர் நாட்டு சூரைக்குடி அரசு விஜயாலயத்தேவர்கள் அகஸ்தீஸ்வரர் கோவில் கல்வெட்டில் சூரைக்குடி தொண்டைமானார் என தன்னை குறிப்பிட்டுள்ளான். இவன் ஆண்ட பிரதேசம் அதலையூர் நாடு சூரைக்குடி பின்னாளில் வன்னியன் சூரைக்குடி என பெயர் வந்தது. மேலும் இவரது இனத்தை பற்றிய குறிப்புகளில்:

” மாங்குடி மறவன் அவையன் சாத்தன் அதலையூர் நாட்டு பெரைய்நு(பேரரையன்” என குறித்துள்ளான் அதலையூர் நாடாள்வான்(நாட்டுபேரரயன்).

மேலும் அறந்தாங்கி தொண்டைமான்,அன்பில் அஞ்சுகுடி அரையர்,சூரைக்குடி அரையர் இம்மூவருமே தொண்டைமான் வம்சமே.

 

சொரி வன்னிய சூரியன்: விஜயாலயன் தன்னை கடம்பன் எட்டி(வியாபாரி) எனவும் சாத்தன் எனவும் குறிப்பிட்டு கொள்கிறான். மேலும் சொரி வன்னிய சூரியன் என பெயர் கொண்டுள்ளான். பதினெட்டு வன்னியரை புறம் கண்டான் எனவும் பட்டம் உள்ளது.

“சொரி வன்னிய சூரியன்” என்ற இதே பட்டம் “சொரி முத்து வன்னியன்” என்ற பட்டம் சேதுபதிகளுக்கும் உள்ளது. இதற்க்கு இராகவ அய்யங்கார் “சொரி முத்து வன்னியர்” என்றால் கடலில் தோன்றும் சூரியன் என திரையன் என அர்த்தம்.

இப்போது புதிதாக விஜயாலையனை கோறும் கூட்டத்தினர் வன்னியர் என்ற வார்த்தை வைத்து கோறுகின்றனர். அவர்களுக்கு ஒரே ஒரு ஆதாரம் மட்டும் கேட்கிறோம். “சொரி வன்னியன்” என்ற பெயர் அவர்களிடம் எந்த பட்டயத்திலாவது அல்லது கல்வெட்டுகளில் இருந்தால் நாங்கள் விஜயாலத்தேவரை கோரவே இல்லை. நெடு நாளைக்கு முன்னரே இந்த கருத்தை எதிர்பார்த்தோம் அப்போது வைத்தூர் பல்லவராயரை கோரி விஜயாலத்தேவனின் மீது பழியை போட்டு பல்லவராயரை கோரிய கூட்டம் இன்று சூரைக்குடி அரையனை கோறுவது வினோதம்.

 

சொரிமுத்து வன்னியர்,18 வன்னியர் கண்டன் என்னும் பெயர் சேதுபதிகள்,விஜயாலயத் தேவர்,அறந்தாங்கி தொண்டைமான் மூவருக்குமே இந்த பட்டம் உள்ளது. அறந்தாங்கி தொண்டைமானும் தங்களை செயதுங்கராயன் என குறிப்பிடுகிறார் ஆக சேதுபதி விஜ்யாலயத் தேவர் தொண்டைமான் மூவரும் மறவரே.

 

விஷ்ணுகோயில் வளாகத்திலிருந்து முப்பது கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பதினான்கு கல்வெட்டுகள் புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுகள் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. அதில் இடம்பெறாத ஒரு கல்வெட்டு தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 22ன் இரண்டாம் பிரிவில் பதிவாகியுள்ளது. நான்கு கல்வெட்டுகள் திருமதி நா. வள்ளியால் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பதினொரு கல்வெட்டுகள் கள ஆய்வின்போது இக்கட்டுரையாசிரியர்களால் கண்டறியப்பட்டவை. சுப்புராயுலு 36 திருமையம் கல்வெட்டுகளை கண்டுபிடித்துள்ளார்.

 

இதே கோயில் வளாகத்திலிருந்து புதிதாகக் கண்டறியப்பட்ட வீரவிருப்பண்ண உடையாரின் கி. பி. 1399ம் ஆண்டுக் கல்வெட்டு28 சூரைக்குடித் திருமேனி அழகியாரான நாயினார் விசையாலயதேவர், இவ்வளாகத்தில் பெருமாளைப் புதிதாக எழுந்தருளச் செய்தமை பற்றிக் குறிப்பிடுவதால், அக்கால கட்டத்தில் நின்றருளியதேவரின் திருமுன் படிக்கட்டின் புறச்சுவராக இருந்த பெருந்தேவிக் கல்வெட்டு அகற்றப்பட்டிருக்கலாம் என்று கருத இடமுண்டு.

அதே சுவரிலிருந்து கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டு, சொக்கநாராயண நல்லூர் எனும் பெயரிலமைந்த ஊரைச் சொக்க நாராயணரான விசையாலயதேவர் மெய்யத்து இறைவனுக்குத் தேவதானத் திருவிடையாட்டமாகத் தந்ததாகக் கூறுகிறது. பெருமளவிற்குச் சிதைந்தும் தொடர்பற்றும் காணப்படும் இக்கல்வெட்டின் காலத்தைப் பதினைந்தாம் நூற்றாண்டாகக் கொள்ளலாம்.30

மண்டபத்தின் மேற்குச் சுவரில் வீரவிருப்பண்ண உடையார் ஆட்சிக்காலத்தே விபவ ஆண்டில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு,34 கானநாட்டு நாட்டார், கேரளசிங்க வளநாட்டு அதலையூர் நாட்டுத் தேனாற்றுப்போக்குச் சூரைக்குடியைச் சேர்ந்த திருமேனியழகியாரான விசையாலைய தேவரிடம் ஐந்தாயிரம் பணம் பெற்றுக்கொண்டு நிலம் விற்ற தகவலைத் தருகிறது. ‘மாக்கல விலைப் பிரமாணம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆவணத்தின் கையெழுத்தாளர்களின் ஊர்களாகக் கோட்டையூர், மேலூர், கண்ணனூர், தெற்காட்டூர் ஆகிய ஊர்களின் பெயர்கள் கிடைக்கின்றன. கானநாட்டுப் படைப்பற்றுகளுள் ஒன்றாகச் செங்குன்றநாடு விளங்கியதையும் நாட்டு மரியாதி எனும் வரியினத்தையும் இவ்ஆவணம் வழி அறியமுடிகிறது.

 

அதே சுவரில் கி. பி. 1452ல் வெட்டப்பட்டுள்ள அரசர் பெயரற்ற கல்வெட்டினால்35 கேரளசிங்க வளநாட்டு அதலையூர் நாட்டுச் சூரைக்குடிச் செண்பகப் பொன்னாயினாரான பராக்கிரம பாண்டிய விசையாலையதேவர், மெய்யத்து மலையாளரான விஷ்ணு பெருமானுக்குச் செண்பகப் பொன்னாயன் சந்தி அமைக்க வாய்ப்பாகப் புலிவலத்திருந்த தம் வயலான செண்பகப் பொன்னாயநல்லூரில், ஏற்கனவே தரப்பட்டிருந்த தேவதானத் திருவிடையாட்ட இறையிலி போக எஞ்சியிருந்த நிலப்பகுதியைக் கோயிலுக்குக் கொடையாகத் தந்த தகவலை அறியமுடிகிறது.

 

அதே சுவரில் கி. பி. 1669 தைத்திங்களில் வெட்டப்பட்டுள்ளஅரசர் பெயரற்ற மற்றொரு கல்வெட்டு,36 திருமலைச் சேதுபதி காத்த தளவாய் ரகுநாத நரேந்திரனுக்குப் புண்ணியமாக, அழகிய மெய்யருக்கு உதயகாலத்தில், ‘ரகுநாத அவசரம்’ என்னும் பெயரில் கட்டளையமைத்து, அதை நிறைவேற்ற வாய்ப்பாக ஊர் ஒன்றளித்த வானரவீரன் மதுரை சோலையப்பப் பிள்ளையான கங்கையராயர் பிள்ளையின் கொடையை எடுத்துரைக்கிறது.

கானநாட்டுக் கோட்டையூர்ப் புரவில் அநாதி தரிசாய்க் காடாக இருந்த புதுவயல், வலையன் வயல் உள்ளிட்ட நிலப்பகுதிகளை விலைக்குப் பெற்று அவற்றை வளமாக்கி, அந்தப் பகுதிக்கு ரகுநாதபுரமென்று பெயரிட்டுத் திருவாழிக்கல் நடுவித்துக் கோயிலுக்களித்த பிள்ளை, அறக்கட்டளையைக் காப்பாற்றும் பொறுப்பைக் கோட்டையூர் ஊரவரிடம் அளித்துள்ளார். சோதிடம், வைத்தியம் செய்வார்களுக்கு இந்நில வருவாயில் பங்கிருந்ததெனக் கருதுமாறு கல்வெட்டமைப்பிருந்த போதும், சிதைந்துள்ள வரிகள் தெளிவு காண இயலாது தடுக்கின்றன. குடிவாரம், மேல்வாரம், கடமை முதலிய வரியினங்களும் கல்வெட்டில் சுட்டப்பட்டுள்ளன.

 

அதே சுவரில் அதே ஆண்டுத் தைத்திங்களில் வெட்டப்பட்டுள்ள மற்றொரு கல்வெட்டு,37 பல சுவையான தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறது. விஷ்ணுகோயில் ஸ்ரீபண்டாரரும் நிருவாகமும் இணைந்து வானரவீரன் மதுரை சோலையப்பப் பிள்ளையான கங்கையராயருக்கு இக்கோயில் திருவிடையாட்டமான மலுக்கன் வயக்கலை, திருக்கோகர்ணம் மின்னல் என்று அழைக்கப்பட்ட பணம் முந்நூறுக்கு விற்றனர்.

இரகுநாத நரேந்திரனுக்குப் புண்ணியமாக அழகியமெய்யருக்கு உதயகாலத்தில் ரகுநாத அவசரக் கட்டளையைச் சோலையப்பப்பிள்ளை தொடர்ந்து நடத்திவர அநுமதிக்கும் இந்த ஆவணம், அவருடைய நிருவாகத்திற்குக் கட்டளையாகக் கோயிலில் மூன்று படிச் சோறு பெற்றுக்கொள்ள அநுமதித் திருப்பதுடன், மலையப்பெருமாள் வீட்டுக்குத் தெற்கிலும் வேங்கைக் குளக்கரைத் திருவீதிக்கு வடக்காகவும் உள்ள மனையைக் கொள்ளவும் வழியமைத்துள்ளது.

 

சூரைக்குடி அரையன் விஜயாலயத்தேவன் விஜயாலயன் என்னும் பெயர் சோழர்களை நினைவுபடுத்துவதால் சோழர் எனவே கருதுவோம். விஜயத்தேவன் என்பதும் விஜயராயர் என்பது வணிக குழுவை தலைமை தாங்குபவன் என பொருள் படும். மேலும் அவையன் சாத்தன் நாட்டான் என்பது சாத்து வணிகர் தலைவன் என்பதேயாகும். மேலும் விஜாயலத்தேவனை பற்றி மறைக்கப்பட்ட கல்வெட்டும் அவன் வம்சமும் இது தான்.

I.P.S.(452) திருமய்யம்,நெய்வாசல் அகஸ்தீஸ்வரமுடையார் கோவில் வீரபாண்டியத் தேவரின் கல்வெட்டு:

“தேனாற்று போக்கு ஆதளையூர் நாட்டு சூரைக்குடி அரையன் பெரியனான தொண்டைமானார்”

நன்றி:

அறந்தாங்கி தொண்டைமான் செப்பேடுகள்: புலவர் செ.இராசு

புதுக்கோட்டை வரலாறு: உயர்.திரு.ஐயா.வீ.மாணிக்கம் அவர்கள்

இதில் சூரைக்குடி அரையனான பெரியனான தொண்டைமானாருக்கு பாண்டியன் காவல் பொருப்புகளும் சில வரிகளையும் நிமித்தகளையும் வழங்குகிறார்.

 

அறந்தாங்கி தொண்டைமானும்,அன்பில் தொண்டைமானும் சூரைக்குடி தொண்டைமானும் மறவர்களே.

 

தொண்டைமானை புகழும் பெரும்பாணாற்றுபடை

“மறவர் மறவ தொண்டையோர் மருக”.

திரையனாகிய சோழரின் இளவலான தொண்டை வேந்தன் மறவனே.

கல்வெட்டு சகாப்தம் 1313க்கு (கி. பி. 1391) உரியது.39 பிரமாதி ஆண்டுக் கணக்குப்படி மெய்யம் கல்வெட்டு கி. பி. 1399ல் பொறிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தலாம். இக்கல்வெட்டு, சூரைக்குடித் திருமேனி அழகியாரான நாயினார் விசையாலயதேவரின் அறச்செயல்களைப் படம்பிடிக்கிறது. மெய்யம் சத்தியமூர்த்திப் பெருமாள் திருக்கோயிலில் கண் நிறைந்த பெருமாளைப் புதிதாக எழுந்தருளுவித்து மகிழ்ந்த விசையாலயதேவர், கோயில் சுற்றில் சர்வமான்ய அகரமாக, ‘ஓ ங்காரநாதத்து வேதமங்கலம்’ என்னும் அகரத்தை அமைத்தார்.

 

பன்னிருவரைக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட இவ்வகரத்தின் உறுப்பினர்களுக்கு சர்வமான்ய தன்மதானமாகத் தர நிலம் தேவைப்பட்டது. ஒருவருக்கு ஏழு மா நிலமெனப் பன்னிருவருக்கு எண்பத்து நாலு மா நிலந்தர விரும்பிய விசையாலய தேவர், அதற்கான நிலத்தைத் தமக்கு விலைக்குத் தர வேண்டும் என்று கானநாடான விருதராஜ பயங்கர வளநாட்டு நாட்டவரையும் அந்நாட்டுப் படைப்பற்றான செங்குன்றூர் நாட்டவரையும் கேட்க, கானநாட்டு நாலூர் நிலப்பகுதி இறையிலிக் காராண்மையாக விற்கப்பட்டது

 

கல்வெட்டு சகாப்தம் 1313க்கு (கி. பி. 1391) உரியது.39 பிரமாதி ஆண்டுக் கணக்குப்படி மெய்யம் கல்வெட்டு கி. பி. 1399ல் பொறிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தலாம். இக்கல்வெட்டு, சூரைக்குடித் திருமேனி அழகியாரான நாயினார் விசையாலயதேவரின் அறச்செயல்களைப் படம்பிடிக்கிறது. மெய்யம் சத்தியமூர்த்திப் பெருமாள் திருக்கோயிலில் கண் நிறைந்த பெருமாளைப் புதிதாக எழுந்தருளுவித்து மகிழ்ந்த விசையாலயதேவர், கோயில் சுற்றில் சர்வமான்ய அகரமாக, ‘ஓ ங்காரநாதத்து வேதமங்கலம்’ என்னும் அகரத்தை அமைத்தார்.

 

பன்னிருவரைக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட இவ்வகரத்தின் உறுப்பினர்களுக்கு சர்வமான்ய தன்மதானமாகத் தர நிலம் தேவைப்பட்டது. ஒருவருக்கு ஏழு மா நிலமெனப் பன்னிருவருக்கு எண்பத்து நாலு மா நிலந்தர விரும்பிய விசையாலய தேவர், அதற்கான நிலத்தைத் தமக்கு விலைக்குத் தர வேண்டும் என்று கானநாடான விருதராஜ பயங்கர வளநாட்டு நாட்டவரையும் அந்நாட்டுப் படைப்பற்றான செங்குன்றூர் நாட்டவரையும் கேட்க, கானநாட்டு நாலூர் நிலப்பகுதி இறையிலிக் காராண்மையாக விற்கப்பட்டது

 

இவ்ஆவணத்தில் கோட்டையூர் உலகளந்த சோழக் கானநாட்டு வேளார், மேலூர் முனையதரையர், கண்ணனூர் காலிங்கராயர், தெற்காட்டூர் வாணாதராயர், முனியந்தை உலகேந்திய வேளான், ஆதனூர் உகனையூர் சேதியராயர், யானூர் உடையார், மருங்கூர் சுந்தரபாண்டியக் கானநாட்டு வேளார், மெய்யம் சுந்தரத்தோள் நம்பி, இளஞ்சாற்குச் சேதியராயர் ஆகிய நாட்டார்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

 

இவர்களுடன் ஊர்க் கணக்குகளாக, விரையாச்சிலை ஊர்க் கணக்கு வைரக்கொழுந்து, செங்குன்றூர் நாட்டுக்குச் சமைந்த ஊர்க் கணக்குக் கானநாட்டுக் கணக்கு அழகியநாயன், மற்றோர் ஊர்க் கணக்கு அடைக்கலங்காத்தான் ஆகிய மூவர் கையெழுத்திட்டுள்ளனர். திருவரங்கம் கோயிலைச் சுற்றிப் பல அகரங்கள் உருவானமையைக் கல்வெட்டுகளால்  அறிகிறோம். அது போல் மெய்யத்து வளாகத்தில் கி. பி. 1399ல் ஓங்காரநாதத்து வேத மங்கலம் என்ற அகரம் சூரைக்குடித் திருமேனி அழகியாரான நாயினார் விசையாலயதேவரால் பன்னிருவரைக் கொண்டு உருவாக்கப்பட்டமை வரலாற்றிற்குப் புதிய வரவு.

 

புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுகளைக் கண்ணுற்றபோது, வீரவிருப்பண்ண உடையாரின் கல்வெட்டுகள் இந்தப் பகுதியில் பரவலாகக் காணப்படுவதை அறியமுடிந்தது. திருவிளாங்குடிக் கல்வெட்டில் அரியண உடையாரின் மகனாகக் குறிக்கப்படும் வீரவிருப்பண்ணரின் கி. பி. 1417ம் ஆண்டுக் கல்வெட்டு, மேலப்பனையூர் ஞானபுரீசுவரர் கோயிலில் உள்ளது.40 சூரைக்குடி விசையாலயதேவர் வீரவிருப்பண்ணரின் ஆட்சிக்குட்பட்ட சிற்றரசர் போலும்! மெய்யத்திலேயே அவரது வழித்தோன்றலான சொக்கநாராயண விசையாலயரின் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன.41 அவற்றுள் ஒன்று புதிதாகக் கண்டறியப்பட்டதாகும்

 

சுந்தரபாண்டியன் மண்டபத் தூணொன்றிலிருந்து படியெடுக்கப்பட்ட புதிய கல்வெட்டு, பாடல் கல்வெட்டாக அமைந்துள்ளது. இறைவனை, ‘மெய்யம் அமர்ந்த பெருமாள்’ என்றும் ‘மணஞ்சொல் செண்பக மெய்யர்’ என்றும் கொண்டாடும் இக்கல்வெட்டின் முழுப் பொருளை அறியக்கூடவில்லை. மண்டபத்தின் கிழக்குப் படிக்கட்டுகளுக்கான தென்புறப் பிடிச்சுவரில் உள்ள கல்வெட்டு, ‘இ ந்தப் படியும் சுருளும் வீரபாண்டியதரையர் தன்மம்’ என்கிறது. எழுத்தமைதி கொண்டு இக்கல்வெட்டுகளைப் பதினான்காம் நூற்றாண்டினவாகக் கொள்ளலாம்.42

 

 

 

கோயில் வளாகத்தின் கிழக்குச் சுற்றிலுள்ள சேனைமுதலியார் திருமுன்னில் இடம்பெற்றுள்ள கல்வெட்டுகளுள் ஒன்று, கேரளசிங்க வளநாட்டுச் சூரைக்குடிச் சொக்க நாராயணரான விசையாலயதேவரும் திருநெல்வேலிப் பெருமாளான சுந்தரபாண்டிய விசையாலயதேவரும்கானநாட்டுத் தேவதான பிரமதேயமான திருமெய்யத்தில் எழுந்தருளியிருக்கும் மெய்யத்து மலையாளரின் திருவிழாவிற்கு முதலாகப் ‘பச்சை வினியோகம்’ எனும் வரியினமாய் வந்த பணம் முந்நூற்று முப்பத்துமூன்றையும் வழங்கிய தகவலைத் தருகிறது.43

 

இவ்வாறு விஜயாலய்த்தேவரை பற்றி பல அரிய கல்வெட்டுகளும் அரசாண்ட வரலாறும் இங்கு நிறைய இருக்கின்றன.

 

அதே சுவரில் கி. பி. 1461ல் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டொன்றால்,44 அதலையூர் நாட்டு நியமப்பற்றுச் சூரைக்குடி அவையாண்டாரான சுந்தரபாண்டிய விசையாலய தேவர், மெய்யத்து மலையாளருக்கு, தம்முடைய பெயரால், தம்முடைய பிறந்த நாளில், ‘சுந்தரபாண்டிய விசையாலய தேவன் சந்தி’ என ஒன்றமைத்து, அது போழ்து தளிகை படைக்கவும் திருமாலை, திருப்பரிவட்டம் முதலாயின சாத்தவும் வாய்ப்பாக, கானநாட்டுப் படைப்பற்றான இளஞ்சார்ப் புரவில், சுந்தரபாண்டிய நல்லூரைத் திருவிடையாட்டமாக்கிக் கோயிலுக்கு சர்வமானியமாக அளித்த செய்தியைப் பெறமுடிகிறது.

 

திருமுன்னின் முகமண்டப உட்சுவரில் காணப்படும் பராக்கிரம பாண்டியரின் ஏழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு அவருடைய மெய்க்கீர்த்தியைத் தருவதுடன், இக்கோயிலில் அவர் பெயரால் உருவாக்கப்பட்ட பராக்கிரம பாண்டியன் சந்தியை வெளிச்சப்படுத்துகிறது. ‘திருமெய்ய மலையாளன்’ என்றழைக்கப்பட்ட நின்றருளிய தேவருக்கான சிறப்புப் பூசையாக அமைக்கப்பட்ட இச்சந்தியை நிறைவேற்ற வாய்ப்பாக மஞ்சக்குடிப் பற்றிலிருந்த சாத்தனூர், கோயிலுக்குக் கொடையாகத் தரப்பட்டது

 

நன்றி.புதுக்கோட்டை மாவட்ட வரலாறு:வீ.மானிக்கம்………….புதுக்கோட்டை கல்வெட்டுகள்..சுப்புராயலு குறிப்புகள் 27. கே. வி. செளந்தரராஜன், மு. கு. நூல், ப. 103; பெரும்பிடுகுப் பெருந்தேவி, கோயிலைப் புதுப்பித்துக் கொடையளித்த செய்திகளைக் குறிப்பிடும் கல்வெட்டு, என்று எழுதும் ஜெ. ராஜாமுகமது, அக்கல்வெட்டின் அடிப்படையில், ‘குகை இக்காலத்திற்கு முன்பே இருந்திருக்கவேண்டும்’ என்றும் எழுதியுள்ளார். மு. கு. நூல், ப. 240. சு. இராசவேல், அ. கி. சேஷாத்திரி இவர்கள் இக்கல்வெட்டு குடைவரைக் கோயிலிலேயே இருப்பதாகவும் பெருந்தேவியே குடைவரையைக் குடைந்து அமைத்ததாகவும் எழுதியுள்ளனர். மு. கு. நூல், ப. 186. 28. New Indian Eகpress, 30. 5. 2006. 29. IPS: 439; என். சேதுராமன், பாண்டியர் வரலாறு, ப. 154. 30. The Hindu, 17. 8. 2003. 31. IPS: 735. 32. IPS: 459; என். சேதுராமன், மு. கு. நூல், ப. 194. 33. IPS: 460. 34. IPS: 685. 35. IPS: 792. 36. IPS: 872. 37. IPS: 873. 38. IPS: 967. 39. IPS: 687. 40. IPS: 692. 41. IPS: 764. 42. தினமணி, 5. 8. 2003. 43. IPS: 764. 44. IPS: 800. 45. IPS: 893. 46. IPS: 923. 47. தினமணி, 5. 8. 2003. 48. The Hindu, 17. 8. 2003. 49. தினமணி, 5. 8. 2003. 50. மேற்படி. 51. இது திருமங்கையாழ்வாரின் பாடல் பெற்ற தலம் என்று குறிப்பிடும் ஜெ. ராஜாமுகமது, அடைப்புக்குறிகளுக்குள் பெரிய திருமொழி என்று வேறு எழுதியுள்ளார். மு. கு. நூல், ப. 240. திருமங்கையாழ்வார் தம் பெரிய திருமடலிலும் ஓரிடத்தில் இத்தலத்தைக் குறிப்பிடுவது இங்குக் கருதத்தக்கது. சு. இராசவேல், அ. கி. சேஷாத்திரி, ஆகியோர், ‘இ ச்சிற்பக் காட்சி இக்குடைவரையைப் பெரிதும் அழகு செய்கின்றது. இதனைத் திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார். இவ்விறைவனைத் ‘திருமேய மலையாளன் எனக் குறிக்கிறார்’ என்றெல்லாம் எழுதியுள்ளனர். மு. கு. நூல். ப. 240. 52. திருமங்கையாழ்வார் 1206, 1524, 1660, 1760, 1852, 2016, 2674 (126) நாலாயிர திவ்யப் பிரபந்தம், ப. 799.

 

 

Posted in சிவகிரி ஜமீன், மறவர், வரலாறு | Tagged , | 5 Comments

பாண்டிய மன்னர் நாணயம் கண்டுபிடிப்பு

coins

சங்க காலப் பாண்டிய மன்னன் “செழியன்’ நாணயத்தை தென்னிந்திய நாணயவியல் சங்கத்தின் தலைவரும், “தினமலர்’ நாளிதழின் ஆசிரியருமான இரா.கிருஷ்ணமூர்த்தி கண்டுபிடித்துள்ளார். அந்த நாணயத்தைக் கண்டறிந்தது தொடர்பாகவும், அதன் சிறப்பு குறித்தும் கிருஷ்ணமூர்த்தி கூறியது:

திருநெல்வேலி கீழ ரத வீதியில் உள்ள பாத்திரக் கடையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பழைய நாணயங்கள் வாங்கினேன். அந்த நாணயங்களை ஆய்வு செய்ய கடினமாக இருந்தது. அதனால் ஒரு கண்ணாடிக் குவளையில் போட்டு வைத்திருந்தேன். பத்து தினங்களுக்கு முன்பு அந்தக் குவளையைச் சுத்தம் செய்ய எடுத்தபோது, வடிவமைப்பில் வித்தியாசமான நாணயம் ஒன்றைக் கண்டேன்.

Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | 1 Comment

இளையன்புதூர் செப்பேடுகள்

இளையன்புதூர் செப்பேடுகள் எனப்படுபவை கி.பி.726 ஆம் ஆண்டு முற்கால பாண்டிய அரசனான அரிகேசரி பராங்குசன் மாறவர்மனின் 36 ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்ட செப்பேடுகள் ஆகும்.இந்த செப்பேடுகள் மதுரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இந்த செப்பேடுகள் மூலம் முற்கால பாண்டியர் வரலாறு குறித்த செய்திகள் கிடைத்துள்ளன.

மொழி மற்றும் வடிவமைப்பு :

கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளில் வட்டெழுத்துகள் காணப்படுகின்றன. தொடக்கத்திலும், முடிவிலும் வடமொழில் கிரந்த எழுத்துக்கள் காணப்படுகின்றன. மொத்தம் 65 வரிகளை உடையது.24 அங்குல நீளமும், 11.5அங்குல அகலமும் கொண்ட இச்செப்பேட்டின் எடை 2.7 கிலோ ஆகும்.

Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment

சோழர்கால கல்வெட்டில் எச்சரிக்கை.

திருவண்ணாமலை அருகே கண்டெடுக்கப்பட்ட சோழர்கால கல்வெட்டில் எச்சரிக்கை.
ஆயிரம் ஆண்டு பழமையான சோழர் கால கல்வெட்டுகள் மற்றும் நடுகல், திருவண்ணாமலை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில், “ஏரியை அழிப்பவர்கள் நரகத்துக்கு போவார்கள்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பெரியகோளாப்பாடி, சின்னகோளாப்பாடி, வாசுதேவன்பட்டு, படி அக்ரகாரம், ஓரந்தவாடி, நரசிங்கநல்லூர், சொ.நாச்சிப்பட்டு, கீழ்சிறுபாக்கம் கிராமங்களில் நடந்த ஆய்வில் சுவையான வரலாற்று பின்னணி கொண்ட சோழர்கால கல்வெட்டுகள் மற்றும் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை.
Posted in சோழன் | Tagged | Leave a comment

3,000 ஆண்டிற்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!

தூத்துக்குடி அருகே, பாண்டிய மன்னர் காலத்தில் துறைமுக பட்டணமாக திகழ்ந்த கொற்கை கிராமத்தில், 3,000 ஆண்டிற்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில், காயல்பட்டணம், வீரபாண்டியபட்டணம், குலசேகரன்பட்டணம், கொற்கை உள்ளிட்ட கிராமங்கள், துறைமுக பட்டணமாக திகழ்ந்தன. இவற்றிக்கு, தலைமையிடமாக கொற்கை இருந்தது. இங்கிருந்து கடல் வழியாக கப்பல், படகுகளில், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு முத்து, சிப்பி, பவளம் உள்ளிட்ட பொருட்களும், மற்ற அத்தியாவசிய பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதுபோல, இறக்குமதியும் நடந்தது. காலப்போக்கில், கொற்கை துறைமுகம் அழிந்து போனது. இந்நிலையில், பெங்களூரில் மத்திய அரசின் தொல்லியல் துறையில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வரும் அறவாழி, சில நாட்களுக்கு முன், சொந்த மாவட்டமான தூத்துக்குடி வந்தார். அவர், கொற்கையில், பொக்லைன் இயந்திரத்தால் தோண்டப்பட்ட குளத்தில், ஆய்வு மேற்கொண்டார். அங்கு, முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தார்.
Posted in பாண்டியன் | Tagged | 1 Comment

கொடுமணல்-ஒரு தொல் நகரம்

கொடு மணல்:

திருப்பூர்,ஈரோடு மாவட்டங்களின் எல்லை பகுதிக்கு அருகில் உள்ள கொடுமணல் கிராமம் ஒரு தொல் பழங்கால தகவல் சுரங்க கொத்து.இந்த தொல் நகரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வுகள்,ஆராய்ச்சிகள்,அதன் அடிப்படையிலான கருது கோள்கள்,முடிவுகள் நமக்கு ஒரு உவப்பான மேலும் தகவல்பூர்வமான பழந்தமிழர் நாகரீகம் பற்றிய சித்திரத்தை அளிக்கின்றன.இந்த தொல் நகரம் நமக்கு சொல்லும் செய்திகளையும்,அது வரலாற்றின் பக்கங்களில் பதிந்துள்ள அதன் தடங்களையும் நமக்காக மீள் உருவாக்கம் செய்து அதன் வரலாற்று பக்கங்களை நாம் தரிசிக்க அனுமதிக்கிறது.இங்கு மேலும் விரிவான தொல்லியல் துறையின் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டால் ஏராளமான புதிய வெளிச்சங்கள் நம் சங்க கால வரலாற்றில் கிடைக்கும்.

சங்க சித்திரங்களில் கொடுமணல் :

கொடுமணல் தொல்லியல் களம் இன்றைய கொடுமணல் என்னும் சிற்றூரில் இருந்து ஒன்றரைக் கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது தமிழ் நாட்டின் ஈரோடு மாவட்டத்தில், நொய்யல் ஆற்றின் வட கரையில், ஈரோடு நகரிலிருந்து சுமார் 40 கிமீ தூரத்தில் உள்ளது. இதன் அமைவிடம், சங்ககாலச் சேர நாட்டின் தலைநகரமான கரூரை, மேற்குக் கடற்கரையுடன் இணைக்கும் பண்டைய வணிகப் பாதையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கொடுமணம் என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட இவ்விடம் பற்றிப் பதிற்றுப்பத்து என்னும் சங்க நூலில் குறிப்புகள் உள்ளன. கிறிஸ்துவுக்கு முந்திய முதல் சில நூற்றாண்டுகளில் இப்பகுதி வணிகத்திலும், தொழிற் துறையிலும் சிறப்புற்று இருந்ததற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில்காணப்படுகின்றன.

Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment

பாண்டிநாட்டுத் துறைமுகம்

பாண்டியர் துறைமுகங்கள் சங்ககாலம் தொட்டே முத்துக்குளித்தலுக்கும் முத்து வணிகத்திற்கும் பெயர் பெற்றிருந்தது. அவற்றில் கொற்கை துறைமுகத்தின் முத்து வணிகச்சிறப்பை தாலமி, பெரிப்ளூசு, பிளைனி போன்ற வேற்று நாட்டவர் குறிப்புகளைக் கொண்டு அறியலாம். இடையே களப்பிரர் படையெடுப்பால் இருண்ட காலத்தைத் தழுவிய பாண்டியர்களின் கடல் வணிகம் முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியின் போது உச்சநிலை அடைந்தது.

இதற்கு முற்கால மற்றும் பிற்கால பாண்டியர்கள் காலத்தில் புதிதாக உருவாகிய 25க்கும் மேற்பட்ட துறைமுகப்பட்டினங்களே சாட்சி. இப்பட்டினங்களால் சங்ககாலப் பாண்டியர்த் துறைமுகங்களான கொற்கை, மருங்கூர், அழகன்குளம் போன்றவற்றின் புகழ் மங்கத் தொடங்கியது.

அதே நேரம் காயல்பட்டினம், குலசேகரபட்டினம், சுந்தரபாண்டியன் பட்டினம் போன்றவை மேன்மை அடைந்ததை மார்க்கோ போலோவின் காயல்பட்டினம் குதிரை வணிகக் குறிப்புகளை கொண்டும், இபின் பட்டுடாவின் பாண்டியர்-ஏமன் கப்பல்கள் குறிப்புகளைக் கொண்டும் அறியலாம். குலசேகர பாண்டியனின் ஆட்சியில் மதுரை உலகின் தலைசிறந்த செல்வச்செழிப்புள்ள நகரமாக இருந்ததாக மார்க்கோ போலோ குறித்ததைக் கொண்டு அக்காலத்தில் பாண்டியர் உலகிலேயே சிறந்த வணிகத் துறைமுகங்களை பெற்றிருந்தது தெரிகிறது.

Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

பூலித்தேவர் பூழியன்(பூழித்தேவர்) என்ற பாண்டிய மரபினரே

இந்தியாவிலேயே முதன் முதலில் கிழக்கிந்தியக் கம்பெனிப் படையை எதிர்த்துப் போர் செய்தவர் பூலித்தேவன்.வரி வசூலிக்க வந்த அலெக்சாண்டர் கெரான் என்பவனோடு 1755-ம் ஆண்டு பூலித்தேவன் செய்த போரே இந்தியாவில் கம்பெனிப் படையை எதிர்த்த ஒரு இந்தியனின் முதல் போராகும்.

பூலித்தேவர் பற்றிய பூர்வீகம்: 

பூலித்தேவர் பற்றிய பூர்வீகம் பற்றிய பல ஆய்வாளர்கள் முன்னுக்கும் பின்னுக்கும் முரனாக பல வரலாற்று ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர்.பூழி நாடு என்பது பாண்டிய நாட்டில் அமைந்த ஒன்று. 1378ஆம் ஆண்டு சேர நாட்டில் இருந்த ஒரு மன்னனால் ‘வரகுண ராமன் சிந்தாமணி காத்தப்ப பூழித்தேவர்’ என்ற தளபதிக்குத் தானமாக வழங்கப்பட்ட நாடே இந்த பூழிநாடு. ஆரம்ப காலத்தில் இதன் தலைநகரம் ஆவுடையார் புரம். ஆனால் ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர் ஸ்வெல்ஸ் ஆதாரப்பூர்வமான தனது கூற்றில்

தலைமுறை பெயர் ஆட்சியாண்டுகள்
1 வரகுண சிந்தாமணி பூலித்தேவன் 1378 – 1424
2 வடக்காத்தான் பூலித்தேவன் 1424 – 1458
3 வரகுண சிந்தாமணி வடக்காத்தான் பூலித்தேவன் 1513 -1548
4 சமசதி பூலித்தேவன் 1548 – 1572
5 முதலாம் காத்தப்ப பூலித்தேவன் 1572 – 1600
6 இரண்டாம் காத்தப்ப பூலித்தேவன் 1600 – 1610
7 முதலாம் சித்திரபுத்திரத்தேவன் 1610 – 1638
8 மூன்றாம் காத்தப்ப பூலித்தேவன் 1638 – 1663
9 இரண்டாம் சித்திரபுத்திரத்தேவன் 1663 – 1726
10 நான்காம் காத்தப்ப பூலித்தேவன் 1726 – 1767

“காத்தப்ப பூலிதுரை தேவர்”.இவரது முழு அபிஷேக பெயராக “வரகுனராம சிந்தாமனி ஆபத்துகாத்த பூலித்துரைப்பாண்டியன்”என்பது தான். இந்த 10-வது பூலித்தேவர் தான் நாம் கொண்டாடும் சுதந்திர முழக்கமிட்ட மாவீரன்.

Continue reading

Posted in பாண்டியன், பூலித்தேவன், மறவர் | Tagged | Leave a comment