இதுவரை வணக்கம் மும்பை என்னும் மும்பையில் இருந்து வெளிவரும் வார இதழலில் 146 வாரம் நட்டாத்தி, சாத்தான்குளம், குளத்தூர், சேத்தூர், இளையரசனேந்தல் ஜமீன்தார்கள் குறித்த வரலாறு எழுதி வந்தேன். தற்போது மணியாச்சி ஜமீன்தார் குறித்து எழுதப்போகிறேன். அந்த வரலாற்றை எனது வெப்சைட் மூலமாக உங்களோடு வாரம் வாரம் பகிர்ந்து கொள்ளப்போகிறேன். ஆதரவு தாருங்கள். நன்றி.
147. மறைந்த ஜமீன்களும் மறையாத நினைவுகளும்
&முத்தாலங்குறிச்சி காமராசு
மணியாச்சி ஜமீன்தார்
நான் பல ஆண்டுகளாகவே மணியாச்சி ஜமீன் வரலாற்றை பற்றி அறிவதற்காக பல முயற்சிகள் எடுத்து வந்தேன். வசந்த் தொலைக்காட்சியில் மணியாச்சி ஜமீன் வரலாறு படமெடுக்கும் போது நெல்லையில் வைத்து மணியாச்சி ஜமீன்தாரை சந்தித்தார்கள் நமது குழுவினர்.
அவர் நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் தான் ஜமீன்தார் வாரிசுதாரர் பணியாற்றுகிறார் என்ற தகவல் கிடைத்தது. நான் ஒருமுறை சென்ற போது அவரை நான் சந்திக்க முடியவில்லை Continue reading