முதலாம் இராஜேந்திர சோழன் கி.பி. 1012-1044

ஆட்சிக்காலம் கி.பி. 1012 – கி.பி. 1044

தலைநகரம் தஞ்சாவூர்
கங்கைகொண்ட சோழபுரம்

அரசி திருபுவன மகாதேவியார்
முக்கோக்கிலான்
பஞ்சவன் மாதேவியார்
வீரமாதேவி

பிள்ளைகள் இராஜாதிராஜ சோழன்
இராஜேந்திர சோழன் II
வீர ராஜேந்திர சோழன்
அருள்மொழிநங்கையார்
அம்மங்காதேவி

முன்னவன் இராஜராஜ சோழன்
பின்னவன் இராஜாதிராஜ சோழன்

தந்தை இராஜராஜ சோழன்

பிறப்பு தெரியவில்லை
இறப்பு கி.பி. 1044
Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

முதலாம் பராந்தக சோழன் கி.பி. 907-950

முதலாம் பராந்தக சோழன் (கி.பி 907-953) ஆதித்த சோழனின் மகனாவான். களப்பிரரை முறியடித்து கிபி 575 இல் ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசு இவன் காலத்தில் 915 இல் முறியடிக்கப்பட்டது . அச் சமயத்தில் பாண்டி நாட்டை ஆண்டவன் 2ம் இராசசிம்மன் ஆவான்.பல ஆண்டுகள் இடம் பெற்ற இப்போரில் இலங்கை மன்னன் 5ம் காசியப்பன்(913-923) பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டான் .முடிவில் பராந்தகன் மதுரையை கைக்கொண்டான்.போர் முடிவில் பாண்டி மன்னன் இலங்கை தப்பினான். பாண்டிய அரசை கைப்பற்றியதே இவன் காலத்தில் நிகழ்த்த முக்கிய சம்பவமாகும்.தன் தந்தை கட்டாது விட்ட பல கோயில்களை கட்டினான்.
Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

சேதுபதிகளின் தானங்கள்- சில வரலாற்றுக்குறிப்புகள்

கற்பக விநாயகம் ..

தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களின் என் சரித்திரம் நூலில், அவர் பிறந்த உத்தமதானபுரம் உருவான வரலாற்றைச் சொல்லி இருக்கிறார்.

தஞ்சையை ஆண்ட மகாராஜா, பல ஊர்களையும் சுற்றிப்பார்த்து வரி வசூல்களை சரி பார்த்து விட்டு, இந்த ஊரின் அருகில் ஒரு மரத்தடியில் தமது பரிவாரங்களுடன் தங்கினாராம். அப்போது நண்பகல். நல்ல வெய்யில். மதிய சாப்பாடு முடிந்து விட்டது. உண்ட உணவு சீரணமாக தாம்பூலம் தரித்துக் கொண்டாராம். அதன் பிறகுதான் நினைவுக்கு வந்தது.

இன்று என்ன திதி என வந்தவர்களிடம் கேட்டார். (சில நாட்களில் வெற்றிலை போடக்கூடாது. அவ்வாறு போட்டால் அது சாஸ்திர விரோதம் என்பது கருத்து) வந்தவர் எவரிடமும் சரியான பதிலைக்காணோம். அவ்வூரில் வேதம், சோதிடம் பழுதறக்கற்றவர்களை அழைத்து வருமாறு பணித்தார். இக்கலைகளில் வல்லவர்கள் வந்தனர். அவர்களிடம் இதைக் கேட்டார். அவர்கள் சொன்னார்கள் ‘ஆம் ராஜா! இன்று நீங்கள் தாம்பூலம் தரிக்க உகந்த நாளில்லை.

Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged | Leave a comment

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய ப தி ற் று ப் ப த் து

சேரர்களின் சிறப்பை பற்றி அறிய நமக்கு கிடைத்து ப தி ற் று ப் ப த் து மட்டும்தான் ….

மு த ற் ப த் து

(கிடைக்கவில்லை)

~~~~~~~~


இ ர ண் டா ம் ப த் து

பாடப்பட்டோ ன்: இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக்
பாடியவர்: குமட்டூர்க் கண்ணனார்

பாட்டு – 11
~~~~~~~~

வரைமருள் புணா஢ வான்பிசிர் உடைய
வளிபாய்ந்(து) அட்ட துளங்குஇருங் கமஞ்சூல்
நளிஇரும் பரப்பின் மாக்கடல் முன்னி
அணங்(கு)உடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூருடை முழுமுதல் தடிந்த போ஢சைக் 5

Continue reading

Posted in சேரர் | Tagged | Leave a comment

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவருலா-3

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்
இயற்றிய மூவருலா
(விக்கிரம சோழனுலா, குலோத்துங்க சோழனுலா,
& இராசராச சோழனுலா /இராசேந்திர சோழனுலா)

டாக்டர் உ.வே. சாமிநாதையர்

நூல்நிலைய வௌியீடு எண் 6,

மூன்றாம் பதிப்பு 1992

டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம்,

பெசன்ட் நகர், சென்னை 600 090

3. இராச ராச சோழனுலா /இராசேந்திர சோழனுலா

புயல்வண்ணன் பொற்பதுமப் போதிற் புவனச்
செயல்வண்ணங் காட்டிய சேயோன் – உயிரனைத்தும்
1
காட்டும் பதின்மரினுங் காசிப னேழ்புரவி
பூட்டுந் தனியாழிப் பொற்றேரோன் – ஓட்டி
2
அறவாழி மைந்தன்மே லூர்ந்தோ னவனி
புறவாழி முட்டப் புரந்தோன் – மறையோற்குப்
3
பூவிற் கிழத்தியையும் பூமிக் கிழத்தியையும்
நாவிற் பழுதஞ்சி நல்கினோன் – வாவியிற்
4
புக்க துறையிற் பகைப்புலியும் புல்வாயும்
ஒக்க வொருகாலத் தூட்டினோன் – புக்கால்
5
Continue reading
Posted in சோழன் | Tagged | Leave a comment

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவருலா-2

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்
இயற்றிய மூவருலா
(விக்கிரம சோழனுலா, குலோத்துங்க சோழனுலா,
& இராசராச சோழனுலா /இராசேந்திர சோழனுலா)

டாக்டர் உ.வே. சாமிநாதையர்

நூல்நிலைய வௌியீடு எண் 6,

மூன்றாம் பதிப்பு 1992

டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம்,

பெசன்ட் நகர், சென்னை 600 090

2. குலோத்துங்க சோழனுலா

தேர்மேவு பாய்புரவிப் பாசடைச் செங்கமலம்
போர்மேவு பாற்கடற் பூத்தனையோன் – பார்மேல்
1
மருளப் பசுவொன் றின் மம்மர்நோய் தீர
உருளுந் திருத்தே ருரவோன் – அருளினாற்
2
பேராப் பெரும்பகை தீரப் பிறவேந்தர்
ஊராக் குலிர விடையூர்ந்தோன் – சோராத்
3
துயில்காத் தரமகளிர் சோர்குழைகாத் தும்பர்
எயில்காத்த நேமி யிறையோன் – வெயில்காட்டும்
4
அவ்வா னவர்கோ னொருமணி யாசனத்தில்
ஒவ்வாம லேத்த வுடனிருந்தோன் – கல்வை
5
Continue reading
Posted in சோழன் | Tagged | Leave a comment

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவருலா-1

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்
இயற்றிய மூவருலா
(விக்கிரம சோழனுலா, குலோத்துங்க சோழனுலா,
& இராசராச சோழனுலா /இராசேந்திர சோழனுலா)

டாக்டர் உ.வே. சாமிநாதையர்

நூல்நிலைய வௌியீடு எண் 6,

மூன்றாம் பதிப்பு 1992

டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம்,

பெசன்ட் நகர், சென்னை 600 090

1. விக்கிரம சோழனுலா

சீர்தந்த தாமரையாள் கேள்வன் றிருவுருக்
கார்தந்த வுந்திக் கமலத்துப் – பார்தந்த
1
ஆதிக் கடவுட் டிசைமுகனு மாங்கவன்றன்
காதற் குலமைந்தன் காசிபனும் – மேதக்க
2
மையறு காட்சி மரீசியு மண்டிலஞ்
செய்ய தனியாழித் தேரோனும் – மையல்கூர்
3
சிந்தனை யாவிற்கு முற்றத் திருத்தேரில்
மைந்தனை யூர்ந்த மறவோனும் – பைந்தடத்
4
தாடு துறையி லடுபுலியும்புல்வாயும்
கூடநீ ரூட்டிய கொற்றவனும் – நீடிய
5
Continue reading
Posted in சோழன் | Tagged | Leave a comment

சோழ மன்னர்களின் மெய்க்கீர்த்திகள்

சோழ மன்னர்களின் மெய்க்கீர்த்திகள்
(தமிழ் நாட்டில் மலைக் கல்வெட்டுகளிலும்,
தாமிர தட்டுகளிலும் எழுதப்பட்டவை.

2.1 முதலாம் இராசராசன் (கி. பி 985 – 1014)

2.1.1 (24)

    ஸ்வஸ்திஸரீ
    திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்
    தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக்
    காந்தளூர்ச் சாலை கலமருத் தருளி
    வேங்கை நாடும் கங்க பாடியும்
    நுளம்ப பாடியும் கடிகை பாடியும் – – – – – – – – -5

    குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்
    முரட்டொழில் சிங்களர் ஈழமண் டலமும்
    இரட்ட பாடி ஏழரை இலக்கமும்
    முந்நீர்ப் பழந்தீவு பன்னீரா யிரமும்
    திண்திறல் வென்றித் தண்டாற் கொண்டதன்-10

    எழில்வளர் ஊழியுள் எல்லா யாண்டும்
    தொழுதகை விளங்கும் யாண்டே
    செழியரைத் தேசுகொள் ஸரீகோஇராச கேசரி
    வன்மரான ஸரீஇராசராச தேவர்க்கு யாண்டு…
    Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

பாண்டிய மன்னர்களின் மெய்க்கீர்த்திகள்

பாண்டிய, சோழ
மன்னர்களின் மெய்க்கீர்த்திகள்
(தமிழ் நாட்டில் மலைக் கல்வெட்டுகளிலும்,
தாமிர தட்டுகளிலும் எழுதப்பட்டவை)

1.1. பராந்தக நெடுஞ்சடையன் (768-815)

1. வேள்விக்குடிச் செப்பேட்டுப் பகுதி.


1.1.1 (01)

    கொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர்க் குழாந்தவிர்த்த
    பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியென்னும் பாண்டியாதிராசனால்
    நாகமா மலர்ச்சோலை நளிர்சினைமிசை வண்டலம்பும்
    பாகனூர்க் கூற்றமென்னும் பழனக்கிடக்கை நீர்நாட்டுச்
    சொற்கணாளர் சொலப்பட்ட சுருதிமார்க்கம் பிழையாத
    5
    கொற்கைக்கிழா னற்கொற்றன் கொண்டவேள்வி முற்றுவிக்கக்
    கேள்வியந்த ணாளர்முன்பு கேட்கவென் றெடுத்துரைத்து
    வேள்விச்சாலை முன்புநின்று வேள்விக்குடி யென்றப்பதியைச்
    சீரோடு திருவளரச் செய்தார்வேந்த னப்பொழுதே
    நீரோடட்டிக் கொடுத்தமையா னீடுபுக்தி துய்த்தபின்

    Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

அருள்மிகு ராமநாத சுவாமி

வரலாற்று சிறப்பு மிக்க இத்திருத்தலம்  பனிரெண்டாம் நூற்றாண்டு   வரை ஒரு துறவியின்  பராமரிப்பில் இருந்து வந்ததாகவும் ,அதன் பின் கி.பி பன்னிரெண்டாம் நூற்றாண்டில்   இலங்கை

அரசர் பராக்கிராமபாகு என்பவர் இத்திருகோயில் மூலஸ்தானத்தை ( கர்ப்பக்கிரகம்   ) கட்டியும் , பதினைந்தாம் நூற்றாண்டில்  ராமநாதபுரம் அரசர் உடையான் சேதுபதி மற்றும் நாகூரை சேர்ந்த வைசியர் ஒரு

வரும் மேற்கு கோபுரத்தையும் , மதில்  சுவர்களையும் கட்டினார்கள் .

Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged | Leave a comment