Tag Archives: மறவர்

தென்னவன்(பாண்டியன்) மறவனே

“தன் கடற் பிறந்த முத்தின் ஆரமும், முனிதிறை கொடுக்கும் துப்பின்,தன் மலைத் தெறல் அரு மரபின் கடவுட் பேணிக், குறவர் தந்த சந்தன ஆரமும், இருபேர் ஆரமும் எழில்பெற அணியும் திருவீழ் மார்பின் தென்னவன் மறவன்” -பெருந்தலைச் சாத்தனார்(அகம்:13:5) பொருள்: தன்னுடைய தென்கடலிலே பிறந்த முத்தினை கொத்தாகயுடைய அந்த ஆரத்தை அணிந்தவன்; பகைவர் பணிந்து திறைக்கொடுக்கும் … Continue reading

Posted in பாண்டியன், மறவர் | Tagged , , | 2 Comments

வடகரை ஆதிக்கம் – சொக்கம்பட்டி ஜமீன்

இந்நாளில் சொக்கம்பட்டி ஜமீன் என்று அழைக்கபட்டது அன்றைய வடகரை பாளையம் ஆகும்.இது நெல்லை சீமையில்ல் அமைந்துள்ள பாளையமாகும். இவர்கள் மூதாதயர்கள் பெரிய குலசேகர பாண்டிய மன்னன் தெண்காசி நகரத்தினை ஆண்டு வரும்போது செம்பி(சோழ)நாட்டை துறந்து வந்தவர்கள். இவர்கள் பாண்டிய அரசனைக் கண்டு தன் வீரத்தால் மகிழச் செய்து ‘செம்புலி’ என்ற பட்டமும் பெற்று செம்புலி சின்னனைஞ்சாத்தேவர் … Continue reading

Posted in சொக்கம்பட்டி ஜமீன், மறவர் | Tagged , | 1 Comment

இலங்கையில் மறவர்குடியேற்றம் சோழ,பாண்டியர் காலத்தில்

நித்திலத்தீவென்று வித்தகரால் போற்றிப்புகழ்ந்த இலங்கை என்ற ஈழவள நாட்டிலே முத்தமிழ்காத்த முடி மன்னரின் கொடிபறக்கவும், குடை சிறக்கவும், கொற்றந்தழைக்கவும் வித்திட்ட பெருமை படைவீரர்களான மறவர்குலப் பெருங்குடிமக்களையே முதற்கண் சாரும்.வடஈழத்திலே, குறிப்பாகத் தீவகத்திலே குடிபதி களாக வாழ்ந்த மறவர்குலத்தவர்கள்.இவர்கள்“நெடுந்தீவு சஞ்சுவான் கோயில் கிறீஸ்தவர்கள் தமிழ் மன்னர் காலத்தில் போர் வீரர்களாக நெடுந் தீவில் இறக்கப்பட்டவர்களென்றும், இவர்கள் மறவர் … Continue reading

Posted in மறவர் | Tagged , , , | 1 Comment

மறவர் இனமே தொல்குடி and marava pandiyan in vijaynagar history

  “கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி” என்று புறநானூற்றில் தமிழ்குடியின் தொன்மை இவ்விழக்கியங்கள் கூறுகின்றது.இந்த மூத்த தமிழ்குடிகளில் முதன்மையான குடியினரில் மறவர்குடி மிக தொன்மையானது. இந்த இனத்தின் புகழை தமிழின் முதல் இலக்கியமான தொல்காப்பியத்திலிருந்து உலகில் விவிலியத்துக்கு அடுத்து அதிகமாக அச்சிட்ட திருக்குறள் வரை இக்குடியின் மேன்மையை புகழ்கின்றது. … Continue reading

Posted in மறவர் | Tagged , , | 2 Comments

குருக்கள்பட்டியின் மறைந்த ஜமின் வரலாறு

ஜமின் பற்றிய குறிப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் பல ஜமின் ஊர்களில் குருக்கள்பட்டியும் ஜமினாக இருந்துள்ளது, சங்கரன்கோவில் சங்கரநயினார் கோவிலில் இன்று வரை குருக்கள்பட்டி க்கு நல்ல மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது, ஜமின் ஆக இருந்த குருக்கள்பட்டி சில காரணங்களால் ஜமின் ஐ இழந்தது, நீலியம்மாள் என்ற பெண்ணின் கணவரை விசாரணை என்ற பெய ரில் அழைத்து … Continue reading

Posted in மறவர் | Tagged , , | 1 Comment

திருவரங்கக் கலம்பகம்

(மறவர் குலம் திருவரங்கப் பெருமாள் தோழன் அவதரித்த திருக்குலம் ) திருவரங்கக் கலம்பகம் பாடியவர் அழகிய மணவாளதாசராவர். திருவரங்கத்திலே அறிதுயில் கொள்ளும் ஸ்ரீ ரங்கநாதனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது  திருவரங்கக் கலம்பகம். இதனுள், சிறப்புப் பாயிரமாக இரு செய்யுள்களும்,  காப்பாக நான்கு செய்யுள்களும், பிற் சேர்க்கையாக ஒரு செய்யுளும், நூலாக 100  செய்யுள்களும் உள்ளன. அம்மானை … Continue reading

Posted in மறவர் | Tagged , | Leave a comment

மறவர்களின் முதல் போர் ஆயுதம் வளரி

வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர். மறவர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது. வைகை அணைக்கட்டுக்கு அருகிலுள்ள கூடலூர்ப் பகுதியில் … Continue reading

Posted in மறவர் | Tagged , , | Leave a comment

அருள்மிகு காதமறவர் காளி திருக்கோயில்

அருள்மிகு காதமறவர் காளி திருக்கோயில் துரையசபுரம், அறந்தாங்கி, புதுக்கோட்டை மாவட்டம். இங்கு சின்ன கருப்பர், பெரிய கருப்பர், முனீஸ்வரர், அடைக்கலம் காத்த அய்யனார், குறத்தி அம்மன், யானை குதிரை சிலைகள் உள்ளன.பிரார்த்தனை< திருமணம் தடைபடுபவர்கள், இங்குள்ள மரத்தில் மஞ்சள் கயிற்றைக் கட்டிப் பிரார்த்தனை செய்வார்கள். ஐஸ்வரியம் பெருக இங்கு வித்தியாசமான பிரார்த்தனை நடக்கிறது. பக்தர்கள், தங்கள் … Continue reading

Posted in மறவர் | Tagged , , | Leave a comment

கொண்டயங்க்கோட்டை மறவர்-பெயர்க்காரனம்

மறவரில் 38 பிரிவுகள் உண்டு.அவற்றில் ஒன்று கொண்டயங்க்கோட்டயார்.கொண்டயங்க்கோட்டை என்ற கோட்டை எங்கு உள்ளது என்று தமிழ்நாட்டில் தேடிப்பார்த்தால் அப்படி ஒரு கோட்டை எங்கும் இல்லை என்றே பதில் வரும் அப்போது கொண்டயங்க்கோட்டை என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?.இது சங்க இலக்கியத்தில் மறவர்கள் போருக்கும் ஆநிரை கவர்வதற்க்கும் வெவ்வேறு பூக்களை சூடுவர்.அதாவது வெட்சி பூ,கரந்தைப் பூ,தும்பை பூ,வாகை … Continue reading

Posted in மறவர் | Tagged , , | Leave a comment

“இளம்மக்கள்” என்ற இளம மறவர்கள்

சிவகங்கை மாவட்டம் பிரான்மலைக்குத் தெற்கே ‘இளமக்கள்’ என்ற இளம் மறவர்கள் சமூகத்தவர்கள் வாழ்கின்றனர்.இவர்கள் வாழும் பகுதி ஐந்து நிலைநாடு என அழைக்கபடுகிறது. திருமய நாட்டிற்கே மேற்கில் சேருங்குடி நாட்டிற்கு வடக்கே துவரங்குறிச்சி நாட்டிற்கு கிழக்கே பிரான்மலை பாதைக்கும், ஐந்துமுக நாட்டிற்கும் தெற்கே அமைந்துள்ள் பகுதி ஐந்துனிலைநாடு எனப்படுகின்றது. இந்நாடு சதுர்வேதிமங்கலம், கன்னமங்கலம்,சீர்சேந்தமங்கலம்,வேழமங்கலம் என ஐந்து மங்கலளாகப் … Continue reading

Posted in மறவர் | Tagged , | Leave a comment