இளையர் என்ற இளமறவர் என்ற ஐந்துநிலை நாட்டு மறவர் குறிப்புகள்

சிவகங்கை மாவட்டம் பிரான்மலைக்குத் தெற்கே ‘இளமக்கள்’ என்ற இளம் மறவர்கள்  சமூகத்தவர்கள் வாழ்கின்றனர்.இவர்கள் வாழும் பகுதி ஐந்து நிலைநாடு என அழைக்கபடுகிறது
. திருமய நாட்டிற்கே மேற்கில் சேருங்குடி நாட்டிற்கு வடக்கே துவரங்குறிச்சி நாட்டிற்கு
கிழக்கே பிரான்மலை பாதைக்கும், ஐந்துமுக நாட்டிற்கும் தெற்கே அமைந்துள்ள்
 பகுதி ஐந்துனிலைநாடு எனப்படுகின்றது. இந்நாடு சதுர்வேதிமங்கலம்,கன்னமங்கலம்,
சீர்சேந்தமங்கலம்,வேழமங்கலம் என ஐந்து மங்கலளாகப் பிரிக்கபட்டுள்ளன. ஒவ்வொறு மங்கலத்துக்கும் பல கிராமங்கள் உள்ளன.

இந்த ஐந்து மங்கலங்களிலும் இளமக்கள்(எ)இளம்மறவர் என்ற சமூகத்தவர்கள்
 பெருவாரியாக வாழ்கின்றனர்.அந்த இளம்மாக்கள் வம்சத்து இளம்மறவர்கள் இந்த
பகுதியின் ஐந்து மங்கலங்களிலும் தலைமை பதவிகளான ஐந்துநாட்டார்கள் என
 அழைக்கபடுகின்றனர்.இவர்களுக்கு இங்கு ‘அம்பலம்’ பட்டம்.பொதுவாக மறவர்களுக்கு
 தேவர் பட்டமே இருப்பினும் இவர்களுக்கு இங்கு அம்பலப்பட்டம் உள்ளது.இவர்கள்
 சிங்கம்புனேரி கோயில் திருவிழக்கலிலும் முதல்மரியாதை வாங்கும் இனமாகவும் உள்ளது.

சித்தன்னவாசல் தமிழிக் கல்வெட்டுமுனைவர் மா.பவானி
உதவிப் பேராசிரியர்
கல்வெட்டியல் துறை

அமைவிடம்: புதுக்கோட்டை மாவட்டம், ஏழடிப்பாட்டம் என்று அழைக்கப்படும் மலைப்பகுதியிலுள்ள சமணர் கல்வெட்டு
எழுத்து : சங்க காலத் தமிழ் எழுத்து (தமிழி)
காலம்: பொ.ஆ.மு 1ஆம் நூ. ஆம் நூற்றாண்டு

ஊர்ச் சிறப்பு :

புதுக்கோட்டையிலிருந்து 9 கல் தொலைவிலுள்ள இவ்வூர் தமிழக வரலாற்றில் சிறப்பு வாய்ந்தது. இங்கு மலையைக் குடைந்து தோற்றுவிக்கப்பட்ட குகைக் கோயில் ஒன்று உள்ளது. இதில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஓவியங்கள் இருக்கின்றன. இந்த ஓவியங்கள் பொ.ஆ. 8ஆம் நூற்றாண்டில் ஆண்ட ஸ்ரீமாற ஸ்ரீ வல்லபன் என்ற பாண்டிய மன்னன் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டவை. இது சமணக்குகையாகும். இதே மலையிலேயே இயற்கையாக அமைந்த குகைத்தளத்தில் பல சமணப் படுக்கைகள் உள்ளன. அவற்றில் ஒன்றின் பக்கவாட்டில் இக்கல்வெட்டு உள்ளது. இங்கு வேறுபல கல்வெட்டுக்களும் உள்ளன. இது சிறப்புவாய்ந்ததாகும்.

காலம்: பொ.ஆ.மு1 ஆம் நூற்றாண்டு (தோராயமாக)

கல்வெட்டுப் பாடம்எருமி நாடு குமுழூர் பிறந்த காவுடி ஈதென்கு சிறு போசில் இளயர்
செய்த அதிட்டானம்.

பொருண்மை:

இந்தப் படுக்கையானது எருமி நாட்டு இளயரால் செய்யப்பட்டது. எருமி நாட்டின் குமுழூரைச் சேர்ந்த காவுதிக்குச் சிறுபொசிலைச் சேர்ந்த இளயர் படுக்கை அமைத்துக் கொடுத்ததை கல்வெட்டுக் கூறுகிறது. காவுதி என்பது சமண, புத்த மதத்தின் பெண் துறவிகளைக் குறிக்கும். எருமிநாடு என்பது மைசூரைக் குறிக்கும். இளயர் என்பது பழந்தமிழ் போர் வீரர் இனத்தைக் குறிக்கும்.

இளமகன் கல்வெட்டுகளில் அவர்களை இளையர் என்று குறிப்பிடும் மிகவும் மூத்த கல்வெட்டு.

” எருமிநாடு குமிழ்ஊர் பிறந்த காவுடி ஈதேன்கு சிறுபோசில் இளயர் செய்த அதிட்அனம்”

எருமைநாட்டைச் சேர்ந்த குமிழூரில் பிறந்த காவுடி என்பவருக்கு சிறுபோசில் எனும் ஊரைச் சேர்ந்த இளயர் செய்து கொடுத்த இருக்கை. 

1.எருமைநாடு – மைசூர்.

2. காவுடி –  துறவி. ( சிலப்பதிகாரக் கவுந்தி அடிகள் நினைவுக்கு வரலாம்)

3. சிறுபோசில் – சித்தன்னவாசலின் பண்டைக் காலப் பெயர்.

4. இளயர் – படைவீரராகிய இளமக்கள் எனும் இளமகன்கள். (மறவர்)

5. அதிட்டானம் – உயரமான இருக்கையைக் குறிக்கும். ( உதாரணமாக கோயில் விமானத்தின் கீழ்பகுதியின் பெயரும் அதிட்டானமாகும். இது குன்றில் உயரமாக அமைந்ததால் இப் பெயர் ஏற்பட்டது) 

இடம்: சித்தன்னவாசல், புதுக்கோட்டை மாவட்டம்.

கல்வெட்டு 17:1

சிறுகுகைத்தளத்தின் சிறு பாறை ஒன்று வழவழப்பாக செதுக்கப்பட்டு உள்ளது. இச்சிறுபாறையின் உட்புறம் செதுக்கப்படாமல் மேடும்  பள்ளமுமாக  உள்ள பகுதியில் வலம் இடமாக தலைகீழாக இக்  கல்வெட்டு  வெட்டப்பட்டு உள்ளது.

நாகபேரூரதைய் முசிறி கோடன் எளமகன்

சேரர் துறைமுக நகரம் முயிற் கோடு   எனப்படடிருப்பதால் முசிறி கோடன் இவ்வூரன் எனக் கொள்கின்றனர் அறிஞர். இளமகன் என்பது போர் மறவனைக் குறிக்கும். நகரமெய் சேர்தது  நாகபேரூர் அந்தை என படிக்கவேண்டும். நாகப்பேரூரின் அந்தை முசிறிக்கோட்டு இளமகன் தந்த கொடை என்பது இதன் பொருள்.

இளையர் என்பவர் சங்க காலக் குடிகலில் ஒருவர். ஆதன், அழிசி மற்றும் சேந்தன் ஆகியோர் இளையர்
 குடியில் தோன்றியவர்கள்.கல்வெட்டுப் பாடம்

 இளையர் என்பவர் சங்க காலக் குடிகளில் ஒருவர். ஆதன், அழிசி மற்றும் சேந்தன் ஆகியோர் இளையர் குடியில் தோன்றியவர்கள்.[1] சேந்தனின் தந்தை அழிசியும், அழிசியின் தந்தை ஆதனும் ஆவர்.[2] இந்த இளையர் குடியினர் வெல்போர் சோழர் என்ற சோழரின் கிளைக் குடியினர் ஆவர்.[3]

ஆட்சிப்பகுதி[தொகு]

இவர்கள் ஆர்க்காடு என்னும் நாட்டை ஆண்டுவந்தனர். இந்த ஆர்க்காட்டை இளையர் குடியில் தோன்றிய அழிசி ஆண்டதால் இக்காட்டை அழிசியம் பெருங்காடு என்றும் அழைப்பர். இக்காட்டில் நெல்லிமரங்கள் அதிகம். இப்பகுதியை பற்றி குறிக்கும் சங்க இலக்கியங்கள் இந்நாட்டை நீர் வளம் (கழனி), நெல்லி மரங்கள், சோழர் குடியாட்சி போன்றவற்றொடு இணைத்துக் காட்டுவதால் இது தஞ்சை மாவட்டத்தின் ஆர்க்காட்டுக் கூற்றமே அன்றி வட தமிழக ஆர்க்காடு இல்லை என அறியலாம்.[4]

படை பலம்[தொகு]

  1. இந்த இளையர் குடியில் ஒருவனான அழிசி தேரில் ஏறி வந்தது கண்கொள்ளாக் காட்சி ஆகும்.[1]
  2. இவர்கள் யானை வேட்டையிலும் அதைக் கட்டுப்படுத்துவதிலும் சிறந்தவர். யானை வெட்டையாடி அதனின் கோட்டை (தந்தம்) தனதாக்கிக் கொள்வர்.[5][6]
  3. இவர்கள் வாட்போரில் வல்லவர்கள்.[7]
  4. இவர்கள் செய்த போரில் வெற்றி பெறுவார்கள்.[3]

பாண்டியர் தொடர்பு[தொகு]

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் அவையில் ஆதன் அழிசி என்ற ஒருவன் இருந்தான்.[8] இளையர் குடி அழிசி காவிரி ஆற்றின் மருதமரக் கரையில் கட்டி வைக்கப்பட்டான் என்ற செய்தியும் உள்ளது.[9] இந்த இரணடையும் இணைத்துக் காட்டி இருவரும் ஒருவரே என்றும் அழிசி சோழரோடு பகைமை கொண்டு ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் அவையில் இருந்ததால் அதை எதிர்க்கவே ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் மீது எதிரிகள் படை எடுத்தனர் என்று மயிலை சீனி. வேங்கடசாமி கூறுவார்.[10] அதனாலேயே சோழ நாட்டு கரையில் அழிசியும் கட்டி வைக்கப்பட்டான் என்றும் கூறுவர்.

இளையர் யார்[தொகு]

மேலே காட்டப்படுள்ள மேற்கோள் சான்றுகள் அனைத்தும் இளையர் என்போரை வாட்போர் வீரர் எனவே காட்டுகின்றன.

  • இளையர் என்போர் வாள் வீரர்கள்.[11]
  • சேந்தன் தந்தை அழிசியின் தலைநகர் ஆர்க்காடு [12]
  • உள்ளூர் மரத்திலிருந்த வௌவால் சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த அழிசிக்காட்டு நெல்லிக்கனியை விருரும்பியதாம்.[13]
  • ஆதன் அழிசி ஒல்லையூர் தந்த பூதப பாண்டியனின் அவைக்கள நண்பன்.[14]

இளமகன் நடுகற்கள்
—————————————–
வரலாற்றில் இளமக்கள் என்றும், இளமகன் என்றும், இளமையார் – இளமுகத்தார் என்றும் அறியப்படும் இளமறவர் எனும் வீரர்கள் மறக்குடியில் அங்கம் வகிக்கும் ஒரு பிரிவினராவர்.

மதுரை – சிவகங்கை- ராமநாதபுரம்- புதுக்கோட்டை சுற்றுவட்டாரங்களில் குறிப்பாக சிங்கம்புணரி பகுதியில் இன்றும் மேற்கண்ட இன அடையாளத்தைத் தாங்கி வாழும் மக்கள் இருக்கின்றனர்.

இம் மக்களைக் குறிக்கும் நடுகற்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் அனேகம் உண்டு. தமிழகமெங்கும் பரந்து வாழ்ந்த இவர்கள் பின்னாளில் ஒரு பகுதிக்குள் சுருங்கிப் போனதற்கு போர்களும் அதையொட்டிய இடப்பெயர்வுகளும் காரணமாக இருக்கலாம்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில், மகேந்திர வர்ம பல்லவனின் 39வது ஆட்சியாண்டின் காலத்தில், வாணகோ அரைசரின் படையினர் ( மருமக்கள்) பொற்றொக்கையார் எனும் படைத்தலைவர் தலைமையில் தங்கியிருந்த (சருக்கிருந்த) ஊரான போந்தை எனும் ஊரின் மீது சக்கரவரு( வளரிப் படையாக இருக்கலாம் வளரி சுழன்றுச் செல்லக்கூடியது), படை தாக்குதல் நடத்தியது . அப்போது நாக்கையார் எனும் படைத்தலைவனின் கீழ் போரிட்ட இளமகன் வத்தாவன் என்பவன் மகன் நந்தி என்பவன் அம்புத் தாக்குதலால் இறந்து விட்டான். அவனுக்கு இந் நடுகல் எடுபிக்கப் பெற்றுள்ளது. இந் நடுகல் தெரிவிக்கும் போந்தை எனும் ஊர் தண்டராம்பட்டு தாலுகாவிற்குட்பட்ட தானிப்பாடி எனும் ஊரின் அருகாமையில் 3 கி.மீ தொலைவில் உள்ளது.

வட்டெழுத்தில் பொறிக்கப்பட்ட இந்நடுகல் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம் அருகிலுள்ள சாத்தனூர் – மல்லிகாபுரத்தில் உள்ள வேடியப்பன் கோயிலில் காணப்படுகிறது.

1. கோவிசைய மகீந்திர பரு
2. மருக்கு முப்பத்தொன்பதாவது
3. வாணகோ அரைசரு மருமக்கள் பொ
4. றொக்கையார் சருக்கிருந்த ஊர் போ
5.ந்தை மேற் சக்கரவரு படை வந்த ஞா
6.ன்று ணாக்கையார் இளமகன் வத்தாவ
7.ன் மகன் னந்
8. [தி எறி]ந்து பட்டா
9. ன் கல்.

தரவு:

தொடர் எண்: 1968/ 35.
தமிழ்நாடு தொல்லியல் ஆய்வுத் துறை.
இளமகன் நடுகற்கள்.2~~~~~~~~~~~~~~~~~மகேந்திர வர்ம பல்லவனின் 38 வது ஆட்சியாண்டில், வாணகோ அரைசரின் மருமக்களில் கந்த விண்ணனார்(வாணரின் படைத் தலைவர்களில் ஒருவர்) என்பவர் கூடல் எனும் ஊரில் ஆநிரைகளை கவர்ந்தார். அந்தச் செயலைத் தடுத்துச் சண்டையிடும் போது, பொன்னம்பரணார் என்பவரின் கொல்லகச் சேவகரில் ஒருவனான ( கொல்லகம்- கருவூலம்; ஆநிரைச் செல்வத்தைக் காக்கும் சேவகராக இருக்கலாம்) காகண்டி அண்ணாவன் என்பவன் இறந்துவிட்டான். அவனுக்கு கூடல் எனும் ஊரைச் சேர்ந்த இளமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நடுகல் எடுப்பித்திருக்கின்றனர். சண்டையில் வீரமரணம் எய்திய காகண்டி அன்னாவன் இந்த இளமக்கள் கூட்டத்தில் ஒருவனாக இருக்கலாம். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகிலுள்ள தண்டராம்பட்டு தாலுகாவிற்குட்பட்ட செ. கூடலூர் எனும் ஊரின் சுடுகாட்டை ஒட்டிய ஏரிக்கரையில் இந் நடுகல் உள்ளது. இதன் காலம் 7ம் நூற்றாண்டு.{தரவு:-தமிழ்நாடு தொல்லியல் ஆய்வுத் துறை. தொடர் எண்: 1971/30.}கல்வெட்டு. 1.கோ விசை2. ய மஇந்திர பரு3. மற்கு முப்பத்தெட்டா4. வது வாணகோ அரைசரு மரு 5. மக்கள் கந்த விண்ண6. னார் கூடல் தொறுக் கொண்ட 7. ஞான்று தொறு இடுவித்துப் பட்டா8. ன் பொன்னம்பரணார் கொல்லகச் 9. சேவகன் காகண்டி அண்ணாவன் கல்10. கூடல் இள11. மக்கள் நடுவி12. த்த கல்இளமகன் நடுகற்கள்: 3முதலாம் மகேந்திரவர்மனின் 34 வது ஆட்சியாண்டுக் காலத்தில், வாண கோ அரைசரின் படைத்தலைவன் பொற்றொக்கையார் என்பவனின் படை வீரனான இளமகன் கருந்தேவகத்தி என்பவன் தனது எருமைகளைக் காக்கும் பொருட்டு சணடையிட்டு உயிர் துறந்துள்ளான். …” தன்னெருமைப் புறத்தே வாடி பட்டான்” …. -என வரும் வாக்கியம், அவன் தனது எருமையின் அருகில் வேதனையுடன் இறந்ததைச் சொல்லும். இந் நடுகல்லின் வலப்புறம் மேற்கண்ட இளமகனுடன் உயிர் நீத்த நாயின் பெயர் கோவிவன் என்றும் அது இரு கள்ளரைக் கடித்து உயிர் நீத்தது என்றும் குறிப்பிடப்பெற்றுள்ளது. இங்கு கள்ளன் என்று பயின்று வரும் வாக்கியம் வெட்சிப்போரான நிரை கவர்தல் பொருட்டு எழுந்த பெயராகும். மேற்கண்ட நடுகல் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகிலுள்ள எடத்தனூர் எனும் ஊரின் ஊமை வேடியப்பன் கோயிலில் அமைந்துள்ளது. வேலூர்- திருவண்ணாமலை- தருமபுரி- கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காணப்படும் வேடியப்பன் கோயில்கள் யாவும் மாண்டு போன வேடர்களுக்கு எடுப்பிக்கப்பட்டவையே ஆகும். வேட அப்பன் என்பதே வேடியப்பன் எனத் திரிந்து வழங்குகிறது. நடுகல் சாசனம்.1. கோவிசைய 2. மயிந்திர பருமற்கு3. முப்பத்தி நான்காவது வாணகோ4. அரைசரு மருமக்கள் பொற்றொக்கை5. ஆர் இளமகன் கருந்தேவகத்தி தன்6. னெருமைப்7. புறத்தே வா8. டி பட்டா9. ன் கல்.•நாய் உருவப் பொறிப்பின் அருகில்•1. [கோவிவ]2. ன்னென்னு3. ந் நாய் இ4.ரு கள்ள5. னைக் கடித்6. துக் காத்திரு7. ந்தவாறுதரவு:-தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுத் துறை. தொடர் எண்: 1971/ 59.
கி.ச. முனிராஜ் வாணாதிராயன்

•ஜென்ம பிராப்தம்•தமிழகத்தின் மிகப் பழைய போர்க்குடியினராக இளமகன் எனும் இளமறவர் கூட்டம் இருப்பதை ஆய்வியலாளர்கள் சற்று உரக்கவே கூறவேண்டும். மானுடவியலாளர்களின் பார்வைக்கும்- கல்வெட்டியியலாளர் பார்வைக்கும் ஒளிந்து கிடக்கும் இவர்களைச் சீராக ஆய்ந்ததில், ஒரு பெரும் அரிய உண்மையினை சமீபமாக நான் அறிய நேரிட்டது. வடதமிழக நடுகல் சாசனங்கள் கூறும் இளமகன்- இளமக்கள் என்போருக்கும், இதே பெயருடன் பாண்டிய நாட்டில் வாழ்ந்து வரும் இளமகன்- இளமக்கள் என்பாருக்கும் தொடர்பு உண்டா?.. என ஆராய்ந்து தேடியதில் சில ஆச்சரியம் அளிக்கும் செய்திகள் கிடைத்தன. முன்பு வடார்க்காடு மாவட்டத்திலும், செங்கம் தாலுக்காவிலும் இருந்த இந் நடுகல் சாசனங்கள் பலவும், மாவட்டப்பிரிவுகளுக்குப் பிறகு திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் அடங்கியுள்ளன.சாசனங்களின் கூற்றின்படி இப் பகுதியின் பூர்வ மறக் குடியாக இருந்த இவர்கள், நாளடைவில் தென்பகுதியில் இவர்களுக்கு இனமான மறவர் மக்களுடன் இணைந்து இன்று காணப்படுகின்றனர்.இந் நிலையில் தற்சமயம் இவர்களைத் திருவண்ணாமலை மாவட்டப் பகுதிகளில் தேடியலைந்ததில், தண்டராம்பட்டு வட்டாரங்களில் இவர்களைக் கண்டறிந்தேன். இவர்களில் சுமார் 30 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வாழ்கின்றனர். பலர் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி- காளாப்பூர் பகுதிகளில் இருந்து 40 வருடங்களுக்கு முன்பு குடி பெயர்ந்தவர்கள், ‌அதே போல காளாப்பூரிலுள்ள பலர் திருவண்ணாமலைப் பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும் திருவண்ணாமலை அண்ணாமலையாரைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள் என்பதையும் சின்னயாத் தேவர் அவர்களின் மனைவி தெய்வயானை என்பவர் மூலம் அறிய நேரிட்டது.சிவகங்கை மாவட்டம், காளாப்பூரில் உள்ள “வாண அம்பலார்” எனும் குடும்பத்தினருக்கு திருவண்ணாமலை பூர்வீகப் பகுதியாக உள்ளது. இவர்களுக்கு அண்ணாமலையார் பூர்வமாகவே குல தெய்வம். இவர்கள் குடும்பத்தவர் இக் கோயிலுக்கு முடி காணிக்கை செலுத்தி வருகின்றனர் என்பது மிகவும் முக்கியமான செய்தி. செங்கம் பகுதி இளமகன்- இளமக்கள் வாண கோ அரைசர்- வாணரையர்- எனும் தலைவர்களைச் சார்ந்தே செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். ‌வாண அம்பலார் எனும் பரம்பரைப் பெயரும் மேற்கண்டதை உறுதி செய்கிறது. வட தமிழகத்தில் இளமகன்- இளமக்கள் என்று கல்வெட்டுகளில் காணப்படும் இவர்கள் மீண்டும் தங்களது பூர்வப் பகுதியிலேயே வந்து குடியமர்ந்ததும், எங்கு சென்றாலும் அண்ணாமலையாரை வழிபடும் வழக்கம் மாறாமலும் இருப்பதும் மிகவும் ஆச்சரியமான தகவல் என்பதுடன் இது அவர்களின் ‘ஜென்ம பிராப்தம்’ என்றே நினைக்க வேண்டியிருக்கிறது.மறவர்கள் தென் தமிழகத்தை மட்டுமே சார்ந்தவர்கள், வட தமிழகத்திற்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை எனும் வாதங்கள் இவற்றின் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.தகவலாளி:-தெய்வயானை க/பெ. சின்னையாத்தேவர். கதவு எண்; 103/567.செங்கல்வராய செட்டி தெரு.தண்டராம்பட்டு. திருவண்ணாமலை மாவட்டம்.கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.

All reactions:150150
தகவலாளி. தெய்வயானை க/பெ. சின்னையாத்தேவர், தண்டராம்பட்டு

சிங்கம்புனரி இளமக்கள் என்னும் இளமறவர்கள் கல்வெட்டு:
இடம்:திருமையம் திருவுடைய நாயனார் கோவில்
காலம்::மாறவர்மன் சுந்தர பாண்டியன்(1308)
செய்தி:கடம்பராயன் எரிச்ச்லூர் உடையார்க்கு நிலம் வழங்கியது.

ஸ்வஸ்திஸ்ரீ கோமாரபன்மரான திரிபுவன சக்கரவர்திகள்…………மடப்புறமாக இளமக்கள் பற்றில் கொனர்ந்தது.

இடம்:திருமையம் திருவுடைய நாயனார் கோவில்
காலம்::மாறவர்மன் சுந்தர பாண்டியன்(1308)
செய்தி:சுந்தரபாண்டியன் தன் பெயரால் சந்ததி எடுத்ததில் இளமக்கள் நன்கொடை வழங்கியது.

ஸ்வஸ்திஸ்ரீ கோமாரபன்மரான திரிபுவன சக்கரவர்திகள்…………இளமக்களான தேவன் திருவாலவாயுடையான் குலோத்துங்க சோழ நாடாழ்வார்க்கும் இவன் தம்பியான உத்தமசோழ நாடாழ்வார்க்கும் பிள்ளான் பெருமா……………
…..
இளையர்:

  • செஞ்சி அருகே எசாலம் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ள கி.பி. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்துகளுடன் கூடிய கொற்றவை சிற்பம்.

https://www.dinamani.com/tamilnadu/2014/feb/12/6-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-838338.html
செஞ்சி, பிப்.11: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, வரிவடிவத்துடன் கூடிய கி.பி. 6ஆம் நூற்றாண்டு கொற்றவை கல் சிற்பம் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம் எசாலம் கிராமத்தில், கல்வெட்டு பாடத்துடன் கூடிய அரிய கொற்றவை புடைச்சிற்பம், மதுரையைச் சேர்ந்த வேதாச்சலம், காந்திராஜன் மற்றும் விழுப்புரம் சி.வீரராகவன், மங்கையர்க்கரசி வீரராகவன் ஆகிய வரலாற்று ஆய்வாளர்களால் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.முதலாம் ராஜேந்திரச் சோழனின் இராஜகுருவான சர்வசிவ பண்டிதரால் எசாலம் திருராமநாத ஈசுவரர் கோயில் எழுப்புவதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்பாகவே கொற்றவை, அய்யனார் வழிபாடு இவ்வூரில் இருந்துள்ளது.இந்த கொற்றவை (துர்கை) மற்றும் அய்யனார் சிற்பம், திருராமநாத ஈசுவரர் கோயில் தெற்குத் திருச்சுற்றுச் சுவருக்கு அருகிலுள்ள கணபதியார் கோயில் முன் நிறுத்தப்பட்டு மக்கள் வழிபாட்டில் இருந்து வருகின்றன.கொற்றவை எண்தோள்களுடன் மகிடன் மீது நேராக நின்ற நிலையில் காணப்படுகிறார்.வலது மேற்கரங்களில் சக்கரமும், அம்பு, நீண்டவாள், முன்கரத்தில் கண்டாமணி, இடக்கரத்தில் நாகமும் முன் இடக்கரத்தில் மணிக்கட்டுக்கு மேலாக கிளி ஒன்றும் அமர்ந்த நிலையில் உள்ளது.கேசங்கள் தூக்கி அள்ளி முடிந்த நிலையில் காது, கழுத்தில் ஆபரணங்கள், மார்பில் கச்சை, இடையில் அரையாடை, புஜங்களில் வாகுவளையங்கள், மணிக்கட்டில் வளையல்கள், கால்களில் சிலம்புகளுடனும் சிற்பம் அமைந்துள்ளது. இது பல்லவர்கால சிற்பக்கலைத் திறனை வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளன.இச் சிற்பத்தொகுதியில் இடப்பக்கம் சிறிய அளவில் மான் உருவமும், வலது பக்கம் வீரன் உருவமும் உள்ளது.வீரனின் கால்களில் கீழ் இரண்டு வரிகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. எழுத்தின் அமைப்பைக் கண்டு,இச்சிற்பம் கி.பி. 6-ஆம் நூற்றாண்டுக்குரியது என ஆய்வாளர் சி.வீரராகவன் கூறுகிறார்.கல்வெட்டு செய்தி: அக்காலத்தில் சமூகத்தில் பெருமக்கள், இளமக்கள் என்கிற இரு பிரிவினர்கள் வாழ்ந்துள்ளனர். கி.பி. 6-ம் நூற்றாண்டில் இளமக்கள் பிரிவை சார்ந்தவர்கள் எசாலத்தில், மக்கள் ஆன்மிகத்தில் சிறக்கவே கொற்றவை சிற்பத்தை நிறுத்தியதையே இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இத்தனை வரிவடிவங்களுடன் கூடிய கொற்றவை சிற்பங்கள் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றார் சி.வீரராகவன்.

முதலாம் இராஜேந்திர சோழன் கல்வெட்டு:

ஸ்வஸ்தி ஸ்ரீ………கங்கையும் கிடாரமுங்கொண்ட கோப்பரகேசரி………இலுப்பைக்குடி…..மூன்று ஜாடியும்………..எடலைக்குடி இளமகன்பற்று நாட்டின……….

முதலாம் இராஜ இராஜ சோழன் கல்வெட்டு:
ஸ்வஸ்தி ஸ்ரீ திருமகள் மருவிய செங்கோல் வேந்தன்………………..பூபாலைக்குடி கொற்றமங்கலத்து இளமகன் அத்தானிநாவற்கு என் தமயனார்

முதலாம் குலசேகர பாண்டியன் கல்வெட்டு:
ஸ்வஸ்திஸ்ரீ கோமாறுபன்மறான குலசேகர தேவர்க்கு யாண்டு…உறந்தூர் கூற்றத்து…இலுப்பையூர் இளயமக்களில் சுந்தன்மருதனான கொடும்பை நாடாள்வான்…………..

இளமறவர்கள் மறவர்களில் உள்ள மறவரையர்களுடன்

இளஞ்சார் அரையர்களாக இருந்துள்ள கல்வெட்டு

முதலாம் குலசேகர பாண்டியன் கல்வெட்டு:

ஸ்வஸ்திஸ்ரீ கோமாறுபன்மறான குலசேகர தேவர்க்கு யாண்டு…

…கானாட்டு ஊரவர்…………..இன்நாட்டு இளஞ்சார் அரையன் கண்டன்

நாட்டானான பாஞ்சாலராயரும் மெய்யன் மெயனும்……..

இளஞ்சார் புறவில் என்ற இளமறவர் நிலம்

இளமகன் குப்பை சுந்தரன் செருத்திமலை நாடாள்வான்:
இந்த குப்பை நாடாள்வான் இன்றும் குப்பச்சி அம்பல தேவர் என்ற பெயரில் சிங்கம்புனரி சேவுகபெருமாள் அய்யனார்கோவிலில் முதல் மரியாதை பெறும் இளமறவர் தலைவராக உள்ளார்.

சிங்கம்புணரி சாசனம்~~~~~~~~~~~~~~~~~சிவகங்கை சமஸ்தான கோயில்களில் ஒன்றான சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் கோயிலுக்கு முன்பாக உள்ள கல்வெட்டு இது.சின்ன மறவர் சீர்மையான சிவகங்கை ராஜ்யத்து அரசர் சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத்தேவரின் கீழ் அவரது பிரதானிகள் மருது பாண்டியர்கள் நிர்வாகம் செய்த காலத்தில், அவர்கள் சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் ஆலயச் சந்நிதானத்தில் நின்று, வெள்ளைச் சேவுக அம்பலக்காரன் மகனான சேவுகன் அம்பலக்காரன் என்பவர் விட்டுக் கொடுத்த விளைநிலத்தை, சேவுகப் பெருமாள் கோயிலைச் சார்ந்த ஊருணியான, “தடாகம்” (இன்றைய தெப்பக் குளம்) அருகிலுள்ள மடாலயம்” ( இந்த மடம் சிதைந்து காணப்படுகிறது) எனும் மடத்தின்‌ அன்றாட உணவு, மற்றும் பிற வகைச் செலவுகளுக்காக, விளைநில தானமும், வரியில்லாமல் நிலத்தில் விளைவித்துக் கொள்ளவும் வேண்டி தர்மம் அளித்துள்ளார்கள். இதில் வரும் சேவுகன் அம்பலக்காரன் என்பவர் சிங்கம்புணரியில் வாழ்ந்து வரும் இளமறவர் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த இளமறவர்களுக்கு அம்பலம் – சேர்வைக்காரர் – தேவர் என்பன பட்டங்களாகும். கல்வெட்டில் சிங்கம்புணரி ஊரின் பெயர் “வேள்குலராம நிலையான வீரபாண்டிய நல்லூர் சிங்கம்புணரி” என்றும், இது கேரள சிங்க வளநாடு எனும் நிர்வாகப் பகுதியின் கீழடங்கியது என்றும் தெரிய வருகிறது. இந்த கல்வெட்டு சாலிவாகன சகாப்த ஆண்டு 1722 ன்படி, பொ.யு.1800 ம் ஆண்டு, தைமாதம் 13 ம் தேதியின்படி ஆங்கில மாதம் ஜனவரி 27. அன்று பொறிக்கப்பட்டது. இக் கல்வெட்டு காட்டும் நில அளவைகள், மா, குறுக்கம், தடி, என்பனவாகும். இதில் வரிகள் 30ல் “கர அளவு குறுக்கம்” எனும் அளவு கூறப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். வரிகள் 27 ல் வரும் நிலஅளவுக் குறியீடுகள் (Land Measurement symbols) சிலவற்றை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!. ஆகவே அதை என்னால் இங்கு தர முடியவில்லை. அந்த குறியீடுகள் பயின்று வரும் இடத்தில் மட்டும் புள்ளிகளை வைத்துள்ளேன். சாசனத்தின் இறுதிப்பகுதியில், கல்லும் காவேரியும் – புல்லும் பூமியும்- சந்திர சூரியர் உள்ளவரை இந்த தர்மம் செல்லுபடியாகும் என்று முடிகிறது.இந்த சாசனத்தின் அடிப்பகுதியில் உள்ள எழுத்துக்கள் மண்ணில் புதையுண்டு இருந்தது. இதை வெளியில் எடுத்து முழுக் கல்வெட்டும் படிக்கும் அளவில், வெளியே தெரியுமாறு பீடம் கட்டி வைக்க நாம் விடுத்த கோரிக்கையை ஏற்று, உடனடியாக நடவடிக்கை எடுத்த சிவகங்கை சமஸ்தானத்தின் மேதகு மஹாராணி ஸ்ரீ மதி மதுராந்தகி நாச்சியார் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏. •கல்வெட்டு வரிகள் •1. ௳ சுவஸ்த்திஸ்ரீ சாலிவா2. கன சகாத்தம் ௲எள௨ய௨௹3. மேல் செல்லானின்ற ரவுத்4. திரி ௵ தையி ௴ ய௩ ௳ மகாரா5. ச மானிய ராச ஸ்ரீ அரசு நிலையி6. ட்ட விசைய ரெகுனாதப் பெரிய உ7. டையாத் தேவரவர்கள் காரி8. யத்துக்கு கற்த்தரான ராச மானிய ர9.π ச ஸ்ரீ மருதுபாண்டியரவர்கள்10. கேரள சிங்கை வளர் நாட்டு வேள்11.குலராம நிலையான வீரபாண்டி12. ய நல்லூர் சிங்கம்புணரி சேவு13. கப் பெருமாள் சுவாமியள் சன்14. னிதானத்தில் வெள்ளைச் சேவு15. கதி அம்பலக்காரன் குமாரன் சேவுக16.னம்பலகாரன் தடாகம் மடாலய17. யூர் தர்மத்துக்கு உபைய வினியோக18. ம் அமுதுபடிக்கு சர்வ மானி19. யமாக விட்டு குடுத்த நஞ்சை ஒரு20. மா னிலத்துக்கும் புஞ்சை அளவு21. குறுக்கம் னாலுக்கும் வகை குச்சு22. கட்டி வயலில் காலாங்கரைக்23. கு வடக்கு மேளி மடங்கன் ராம24. சாமி வயக்கல் ளகய௨௯ள இ25. துவும் இதனிடை ௨ய வடக்கு26. ௸ ௨ய யில் பெருமாள் வயக்க27. ல் [ .. . . . . . .. . ] ஆக தடி உள் நில28. ம ப இதுவும் மேல்படியான ஊற29. ணி தடாகத்துக்கு இடைவிட்[டு] தெற்கும30. ணல்ப் புஞ்சைக்கு கர அளவுக் கு31. றுக்கம் னாலு இந்த நஞ்சையூ பு32. ஞ்சையூ தர்மத்துக்கு சறுவ மானி 33. யம்பண்ணி குடுத்தபடியினாலேக34. ல்லுங் காவேரியும் புல்லும்35. பூமியூ சந்திராதிதியாளுள்36. ள் வரைக்கும் தர்மம் நடப்37.பிவட்சுக் கொள்ளவூ ௳நன்றி!கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.+2All reactions:9191

சிங்கம்புனேரி-அருள்மிகு ஸ்ரீ சேவுகபெருமாள் அய்யனார் கோயில்

சேர ராஜ வம்ச ஐந்துநிலை நாட்டார்(மறவர்) வரலாறு

(இளையன்)புதூர் செப்பேடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல்தேடல்இளையன்புதூர் செப்பேடுகள் எனப்படுபவை கி.பி.726 ஆம் ஆண்டு முற்கால பாண்டிய அரசனான அரிகேசரி பராங்குசன் மாறவர்மனின் 36 ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்ட செப்பேடுகள் ஆகும்.இந்த செப்பேடுகள்மதுரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த செப்பேடுகள் மூலம் முற்கால பாண்டியர் வரலாறு குறித்த செய்திகள் கிடைத்துள்ளன.

  • வடிவம்பலம்ப நின்ற பாண்டியன் வழி வந்த ஜயந்தவர்மன் என்ற மன்னன மகன் அரிகேசரி பராங்குசன் மாறவர்மன்  காடாக கிடந்த அந்த நிலங்களை கி.பி. 726 ஆம் ஆண்டு சீரமைத்துஇளையன்புதூர் என்று பெயரிட்டு பாரத்வாஜி நாராயணபட்ட சோமாயாஜி என்னும் அந்தணருக்கு கொடை வழங்கி செப்பெடும் வெட்டித்தந்தான் எனவும் அந்த நிலத்தின் நான்கு பக்க எல்லைகளும் இந்த செப்பெட்டில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
  • சேந்தன் மகனாகிய அரிகேசரி பராங்குசன் மாறவர்மனைசேந்தமாறன் என்றும் தேர்மாறன் என்று செப்பேடு கூறுகிறது. மேலும் இந்த செப்பேடு இரணியகற்பம், துலா பாரம் செய்து கொடை கொடுத்தான் எனவும், களக்குடி என்ற ஊரில் அரிகேசரி ஈஸ்வரம் என்ற சிவாலயத்தை கட்டி எழுப்பினான் எனவும் கூறுகிறது. பாண்டி பெரும்பணைக்காரன் மகன் அரிகேசரியே, சின்னமனுர் செப்பேட்டையும் எழுதி இருக்கலாம் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது

சங்க பாடல்களில் இளையர்————————————————-

253. கூறு நின் உரையே!பாடியவர்: குளம்பாதாயனார்திணை: பொதுவியல் துறை: முதுபாலை
என்திறத்து அவலம் கொள்ளல், இனியே;வல்வார் கண்ணி இளையர் திளைப்ப,‘நாகாஅல்’ என வந்த மாறே, எழாநெல்பைங்கழை பொதிகளைந்து அன்ன விளர்ப்பின்,வளைஇல், வறுங்கை ஓச்சிக்,கிளையுள்’ஒய்வலோ? கூறுநின் உரையே!
263. களிற்றடி போன்ற பறை!பாடியவர்பாடப்பாட்டோர்திணை: கரந்தை துறை: கையறுநிலை
பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண்இரும்பறை இரவல ! சேறி ஆயின்,தொழாதனை கழிதல் ஓம்புமதி; வழாது,வண்டுமேம் படூஉம், இவ் வறநிலை யாறே-பல்லாத் திரள்நிரை பெயர்தரப் பெயர்தந்து,கல்லா இளையர் நீங்க நீங்கான்,வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்,கொல்புனல் சிறையின் விலங்கியோன் கல்லே.

286. பலர்மீது நீட்டிய மண்டை!பாடியவர்: ஔவையார்திணை: கரந்தை துறை: வேத்தியல்
வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்தன்னோர் அன்ன இளையர் இருப்பப்,பலர்மீது நீட்டிய மண்டைஎன் சிறுவனைக்கால்வழி கட்டிலிற் கிடப்பித்,தூவெள் அறுவை போர்ப்பித் திலதே!

353. ‘யார் மகள்?’ என்போய்!பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்திணை: காஞ்சி துறை: மகட்பாற் காஞ்சி
ஆசில் கம்மியன் மாசறப் புனைந்தபொலஞ்செய் பல்காசு அணிந்த அல்குல்,ஈகைக் கண்ணி இலங்கத் தைஇத்,தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கித்,தவிர்த்த தேரை, விளர்த்த கண்ணை,வினவல் ஆனா வெல்போர் அண்ணல்!‘யார்மகள்? என்போய்; கூறக் கேள், இனிக்;குன்றுகண் டன்ன நிலைப்பல் போர்புநாள்கடா அழித்த நனந்தலைக் குப்பைவல்வில் இளையர்க்கு அல்குபதம் மாற்றாத்தொல்குடி மன்னன் மகளே; முன்நாள்கூறி வந்த மாமுது வேந்தர்க்கு. . . . . . . . . . . . . .

57. காவன்மரமும் கட்டுத்தறியும்!பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.பாடப்பட்டோர்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.திணை: வஞ்சி. துறை : துணை வஞ்சி.
வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன,உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற!நின்னொன்று கூறுவது உடையோன்; என்னெனின்,நீயே, பிறர்நாடு கொள்ளும்காலை, அவர் நாட்டுஇறங்கு கதிர் கழனிநின் இளையரும் கவர்க:நனந்தலைப் பேரூர் எரியும் நைக்க;மின்னு நிமிர்ந் தன்ன நின்ஒளிறு இலங்கு நெடுவேல்ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்கடிமரம் தடிதல் ஓம்பு! நின்நெடுதல் யானைக்குக் கந்தாற் றாவே.

72. இனியோனின் வஞ்சினம்!பாடியவர்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்திணை: காஞ்சி துறை: வஞ்சினக் காஞ்சி
நகுதத் கனரே, நாடு மீக் கூறுநர்;இளையன் இவன் என உளையக் கூறிப்படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்நெடுநல் யானையும், தேரும், மாவும்,படைஅமை மறவரும், உடையும் யாம் என்றுஉறுதுப்பு அஞ்சாது, உடல்சினம் செருக்கிச்சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரைஅருஞ்சமஞ் சிதையத் தாக்கி, முரசமொடுஒருங்கு அகப் படேஎன் ஆயின்; பொருந்தியஎன் நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது,கொடியன்எம் இறை எனக் கண்ணீர் பரப்பிக்,குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்விமாங்குடி மருதன் தலைவன் ஆக,உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்புலவர் பாடாது வரைக, என் நிலவரை;புரப்போர் புன்கண் கூர,இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே.
78. அவர் ஊர் சென்று அழித்தவன்!பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.பாடப்பட்டோன். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.திணை:வாகை. துறை: அரசவாகை.
வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்,அணங்குஅருங் கடுந்திறல் என்ஐ முணங்கு நிமிர்ந்து,அளைச்செறி உழுவை இரைக்குவந் தன்னமலைப்பரும் அகலம் மதியார், சிலைத்தெழுந்து,விழுமியம், பெரியம், யாமே; நம்மிற்பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது என,எள்ளி வந்த வம்ப மள்ளர்புல்லென் கண்ணர்; புறத்திற் பெயர,ஈண்டுஅவர் அடுதலும் ஒல்லான்; ஆண்டுஅவர்மாண்இழை மகளிர் நாணினர் கழியத்,தந்தை தம்மூர் ஆங்கண்,தெண்கிணை கறங்கச்சென்று, ஆண்டு அட்டனனே.
96. அவன் செல்லும் ஊர்!பாடியவர்: ஔவையார்.பாடப்பட்டோன்: அதியமான் மகன் பொகுட்டெழினி.திணை : பாடாண். துறை: இயன் மொழி.
அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்,திரண்டுநீடு தடக்கை, என்னை இளையோற்குஇரண்டு எழுந் தனவால், பகையே; ஒன்றே,பூப்போல் உண்கண் பசந்து, தோள் நுணுகி,நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றே,‘விழவு இன்று ஆயினும், படு பதம் பிழை யாது,மைஊன் மொசித்த ஒக்கலொடு, துறை நீர்க்கைமான் கொள்ளு மோ?’ எனஉறையுள் முனியும், அவன் செல்லும் ஊரே.
102. சேம அச்சு!பாடியவர்: ஔவையார்.பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினி.திணை: பாடாண். துறை: இயன்மொழி.
‘எருதே இளைய; நுகம் உண ராவே;சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே;அவல் இழியினும், மிசை ஏறினும்,அவணது அறியுநர் யார்?’ என, உமணர்கீழ்மரத்து யாத்த சேமஅச்சு அன்ன,இசை விளங்கு கவிகை நெடியோய்! திங்கள்நாள்நிறை மதியத்து அனையை; இருள்யாவண தோ, நின் நிழல்வாழ் வோர்க்கே?

104. யானையும் முதலையும்!பாடியவர்: ஔவையார்.பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.திணை: வாகை. துறை: அரசவாகை.
போற்றுமின், மறவீர் ! சாற்றுதும், நும்மை;ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்தாள்படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும்ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்ஐநுண்பல் கருமம் நினையாது,‘இளையன்’ என்று இகழின், பெறல் அரிது, ஆடே.
144. தோற்பது நும் குடியே!பாடியவர் : கபிலர்.பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.திணை: பெருந்திணை. துறை: குறுங்கலி.
அருளா யாகலோ கொடிதே; இருள்வரச்,சீறியாழ் செவ்வழி பண்ணி யாழ நின்கார்எதிர் கானம் பாடினே மாக,நீல்நறு நெய்தலிற் பொலிந்த உண்கண்கலுழ்ந்து, வார் அரிப் பனி பூண்அகம் நனைப்ப,இனைதல் ஆனா ளாக, ‘இளையோய்!கிளையை மன், எம் கேள்வெய் யோற்கு?’என,யாம்தன் தொழுதனம் வினவக், காந்தள்முகைபுரை விரலின் கண்ணீர் துடையா,‘யாம், அவன் கிளைஞரேம் அல்லேம்; கேள்,இனி;எம்போல் ஒருத்தி நலன்நயந்து, என்றும்,வரூஉம் என்ப; வயங்கு புகழ்ப் பேகன்ஒல்லென ஒலிக்கும் தேரொடு,முல்லை வேலி, நல்லூ ரானே!’
191. நரையில ஆகுதல்!பாடியவர்: பிசிராந்தையர்திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
‘யாண்டுபல வாக , நரையில ஆகுதல்யாங்கு ஆகியர்?’ என வினவுதிர் ஆயின்,மாண்டஎன் மனைவியோடு, மக்களும் நிரம்பினர்;யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்அல்லவை செய்யான், காக்க; அதன்தலைஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.
213. நினையும் காலை!பாடியவர்: புல்லாற்றூர் எயிற்றியனார்.பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.திணை: வஞ்சி: துறை: துணை வஞ்சி.குறிப்பு: கோப்பெருஞ்சோழன் தன் மக்கள்மேற் போருக்கு எழுந்தகாலைப்பாடிச் சந்து செய்தது.
மண்டுஅமர் அட்ட மதனுடை நோன்தாள்,வெண்குடை விளக்கும், விறல்கெழு வேந்தே!பொங்குநீர் உடுத்தஇம் மலர்தலை உலகத்து,நின்தலை வந்த இருவரை நினைப்பின்,தொன்றுறை துப்பின்நின் பகைஞரும் அல்லர்,அமர்வெங் காட்சியடு மாறுஎதிர்பு எழுந்தவர்:நினையுங் காலை, நீயும் மற்றவர்க்குஅனையை அல்லை; அடுமான் தோன்றல்!பரந்துபடு நல்லிசை எய்தி, மற்று நீஉயர்ந்தோர் உலகம் எய்திப்; பின்னும்ஒழித்த தாயும் அவர்க்குஉரித்து அன்றே;அதனால், அன்னது ஆதலும் அறிவோய்! நன்றும்இன்னும் கேண்மதி, இசைவெய் யோயே!நின்ற துப்பொடு நின்குறித்து எழுந்தஎண்ணில் காட்சி இளையோர் தோற்பின்,நின்பெரும் செல்வம் யார்க்கும்எஞ் சுவையே?அமர்வெஞ் செல்வ! நீ அவர்க்கு உலையின்,இகழுநர் உவப்பப், பழியெஞ் சுவையே;அதனால்,ஒழிகதில் அத்தை,நின் மறனே!வல்விரைந்துஎழுமதி; வாழ்க, நின் உள்ளம்! அழிந்தோர்க்குஏமம் ஆகும்நின் தாள்நிழல் மயங்காதுசெய்தல் வேண்டுமால். நன்றோ வானோர்அரும்பெறல் உலகத்து ஆன்றவர்விதும்புறு விருப்பொடு விருந்தெதிர் கொளற்கே.
242. முல்லையும் பூத்தியோ?பாடியவர்: குடவாயிற் தீரத்தனார்.பாடப்பட்டோன்: ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்.திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.குறிப்பு: கடவாயில் நல்லாதனார் பாடியது என்பதும் பாடம்.
இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார் ;நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்,பாணன் சூடான் ; பாடினி அணியாள் ;ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்தவல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றைமுல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?
254. ஆனாது புகழும் அன்னை!பாடியவர்: கயமனார்திணை: பொதுவியல் துறை: முதுபாலை
இளையரும் முதியரும் வேறுபுலம் படர,எதிர்ப்ப எழாஅய், மார்பமண் புல்ல,இடைச்சுரத்து இறுத்த, மள்ள ! விளர்த்தவளையில் வறுங்கை ஓச்சிக் கிளையுள்,‘இன்னன் ஆயினன், இளையோன்’ என்று,நின்னுரை செல்லும் ஆயின்,’ மற்றுமுன்ஊர்ப் பழுனிய கோளி ஆலத்துப்,புள்ளார் யாணர்த் தற்றே’ என் மகன்வளனும் செம்மலும் எமக்கு’ என , நாளும்ஆனாது புகழும் அன்னையாங்குஆ குவள்கொல் ? அளியள் தானே!
340. அணித்தழை நுடங்க!பாடியவர்: பெயர் தெரிந்திலது.திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி
அணித்தழை நுடங்க ஓடி, மணிப்பொறிக்குரலம் குன்றி கொள்ளும் இளையோள்,மாமகள் .. .. .. .. .. …. .. .. ..லென வினவுதி, கேள், நீஎடுப்பவெ .. .. .. .. .. .. …. .. .. .. .. மைந்தர் தந்தைஇரும்பனை அன்ன பெருங்கை யானைகரந்தையஞ் செறுவின் பெயர்க்கும்பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந் தனனே.
341. இழப்பது கொல்லோ பெருங்கவின்!பாடியவர்: பரணர்திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி
வேந்துகுறை யுறவுங் கொடாஅன், ஏந்துகோட்டுஅம்பூந் தொடலை அணித்தழை அல்குல்,செம்பொறிச் சிலம்பின் இளையோள் தந்தை,எழுவிட்டு அமைத்த திண்நிலைக் கதவின்அனரமண் இஞ்சி நாட்கொடி நுடங்கும்.. .. .. . .. .. … .. .. .. ..புலிக்கணத் தன்ன கடுங்கண் சுற்றமொடு,மாற்றம் மாறான், மறலிய சினத்தன்,‘பூக்கோள்’ என ஏஎய்க், கயம்புக் கனனே;விளங்குஇழைப் பொலிந்த வேளா மெல்லியல்,சுணங்கணி வனமுலை, அவளடு நாளைமணம்புகு வைகல் ஆகுதல் ஒன்றோ-ஆரமர் உழக்கிய மறம்கிளர் முன்பின்,நீள்இலை எ·கம் மறுத்த உடம்பொடுவாரா உலகம் புகுதல் ஒன்று- எனப்படைதொட் டனனே, குருசில்; ஆயிடைக்களிறுபொரக் கலங்கிய தண்கயம் போலப்,பெருங்கவின் இழப்பது கொல்லோ,மென்புனல் வைப்பின்இத் தண்பணை ஊரே!
353. ‘யார் மகள்?’ என்போய்!பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்திணை: காஞ்சி துறை: மகட்பாற் காஞ்சி
ஆசில் கம்மியன் மாசறப் புனைந்தபொலஞ்செய் பல்காசு அணிந்த அல்குல்,ஈகைக் கண்ணி இலங்கத் தைஇத்,தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கித்,தவிர்த்த தேரை, விளர்த்த கண்ணை,வினவல் ஆனா வெல்போர் அண்ணல்!‘யார்மகள்? என்போய்; கூறக் கேள், இனிக்;குன்றுகண் டன்ன நிலைப்பல் போர்புநாள்கடா அழித்த நனந்தலைக் குப்பைவல்வில் இளையர்க்கு அல்குபதம் மாற்றாத்தொல்குடி மன்னன் மகளே; முன்நாள்கூறி வந்த மாமுது வேந்தர்க்கு
பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்கெனத்தன்னறி யளவையின் தரத்தர யானும்என்னறி யளவையின் வேண்டுவ முகந்துகொண்டுஇன்மை தீர வந்தனென் வென்வேல்உருவப் ப·றேர் இளையோன் சிறுவன்       130
ஈற்றி யாமைதன் பார்ப்பு ஓம்பவும்இளையோர் வண்ட லயரவும் முதியோர்அவைபுகு பொழுதிற்றம் பகைமுரண் சொலவும்முடக் காஞ்சிச் செம் மருதின்மடக் கண்ண மயில் ஆலப்       190
61. மருதம் – தோழி கூற்று
தச்சன் செய்த சிறுமா வையம்ஊர்ந்தின் புறாஅர் ஆயினுங் கையின்ஈர்த்தின் புறூஉம் இளையோர் போலஉற்றின் புறேஎம் ஆயினும் நற்றேர்ப்பொய்கை யூரன் கேண்மைசெய்தின் புற்றனெஞ் செறிந்தன வளையே.     -தும்பிசேர் கீரனார்.
275. முல்லை – தோழி கூற்று
முல்லை யூர்ந்த கல்லுய ரேறிக்கண்டனம் வருகஞ் சென்மோ தோழிஎல்லூர்ச் சேர்தரும் ஏறுடை யினத்துப்புல்லார் நல்லான் பூண்மணி கொல்லோசெய்வினை முடித்த செம்ம லுள்ளமொடுவல்வில் இளையர் பக்கம் போற்றஈர்மணற் காட்டாறு வரூஉம்தேர்மணி கொல்லாண் டியம்பிய வுளவே.      -ஒக்கூர் மாசாத்தியார்.
களையும் இடனாற் – பாக! உளை அணிஉலகுகடப் பன்ன புள்இயற் கலிமாவகைஅமை வனப்பின் வள்புநீ தெரியத்தளவுப்பிணி அவிழ்ந்த தண்பதப் பெருவழி,ஐதுஇலங்கு அகல்இலை நெய்கனி நோன்காழ் 5வென்வேல் இளையர் வீங்குபரி முடுகச்,செலவுநாம் அயர்ந்தனம் ஆயிற், பெயலகடுநீர் வரித்த செந்நில மருங்கின்,விடுநெறி ஈர்மணல், வாரணம் சிதரப்,பாம்புஉறை புற்றத்து ஈர்ம்புறங் குத்தி, 10

வினைவலம் படுத்த வென்றியொடு மகிழ்சிறந்து,போர்வல் இளையர் தாள்வலம் வாழ்த்தத்,தண்பெயல் பொழிந்த பைதுறு காலை,குருதி உருவின் ஒண்செம் மூதாய்பெருவழி மருங்கில் சிறுபல வரிப்பப், 5பைங்கொடி முல்லை மென்பதப் புதுவீவெண்களர் அரிமணல் நன்பல் தாஅய்,வண்டுபோது அவிழ்க்கும் தண்கமழ் புறவில்,கருங்கோட்டு இரலைக் காமர் மடப்பிணைமருண்டமான் நோக்கம் காண்தொறும், ‘நின் நினைந்து 10″திண்தேர் வலவ! கடவு’ எனக் கடைஇ,இன்றே வருவர்; ஆன்றிகம் பனி’ என,வன்புறை இன்சொல் நன்பல பயிற்றும்நின்வலித்து அமைகுவென் மன்னோ – அல்கல்புன்கண் மாலையொடு பொருந்திக், கொடுங்கோற் 15கல்லாக் கோவலர் ஊதும்வல்வாய் சிறுகுழல் வருத்தாக் காலே! 17
104 வேந்துவினை முடித்த காலைத், தேம்பாய்ந்துஇனவண்டு ஆர்க்கும் தண்நறும் புறவின்வென்வேல் இளையர் இன்புற, வலவன்வள்புவலித்து ஊரின் அல்லது, முள்உறின்முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா 5நன்னால்கு பூண்ட கடும்பரி நெடுந்தேர்வாங்குசினை பொலிய ஏறிப்; புதலபூங்கொடி அவரைப் பொய்அதள் அன்னஉள்இல் வயிற்ற, வெள்ளை வெண்மறி,மாழ்கி யன்ன தாழ்பெருஞ் செவிய, 10புன்றலை சிறாரோடு உகளி, மன்றுழைக்கவைஇலை ஆரின் அங்குழை கறிக்கும்சீறூர் பலபிறக்கு ஒழிய, மாலைஇனிதுசெய் தனையால் – எந்தை! வாழிய!-பனிவார் கண்ணள் பலபுலந்து உறையும் 15ஆய்தொடி அரிவை கூந்தற்போதுகுரல் அணிய வேய்தந் தோயே! 17
வலம்சுரி மராஅத்துச் சுரம்கமழ் புதுவீச்சுரிஆர் உளைத்தலை பொலியச் சூடி,கறைஅடி மடப்பிடி கானத்து அலறக்,களிற்றுக் கன்று ஒழித்த உவகையர், கலிசிறந்து,கருங்கால் மராஅத்து கொழுங்கொம்பு பிளந்து, 5பெரும்பொழி வெண்நார் அழுந்துபடப் பூட்டி,நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்,நறவுநொடை நல்இல் பதவுமுதற் பிணிக்கும்கல்லா இளையர் பெருமகன் புல்லிவியன்தலை நல்நாட்டு வேங்கடம் கழியினும் 10சேயர் என்னாது, அன்புமிகக் கடைஇ,எய்தவந் தனவால் தாமே – நெய்தல்கூம்புவிடு நிகர்மலர் அன்னஏந்துஎழில் மழைக்கண்எம் காதலி குணனே!

நெடுவேள் மார்பின் ஆரம் போலச்,செவ்வாய் வானம் தீண்டி மீன் அருந்தும்பைங்காற் கொக்கினம் நிரைபறை உகப்ப,எல்லை பைப்பய கழிப்பிக், குடவயின்கல்சேர்ந் தன்றே, பல்கதிர் ஞாயிறு – 5மதர்எழில் மழைக்கண் கலுழ, இவளேபெருநாண் அணிந்த நறுமென் சாயல்மாண்நலம் சிதைய ஏங்கி, ஆனாதுஅழல்தொடங் கினளே – பெரும;- அதனால்கழிச்சுறா எறிந்த புண்தாள் அத்திரி 10நெடுநீர் இருங்கழி பரிமெலிந்து அசைஇ,வல்வில் இளையரொடு எல்லிச் செல்லாதுசேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ -பெண்ணை ஓங்கிய வெண்மணற் படப்பைஅன்றில் அகவும் ஆங்கண்சிறுகுரல் நெய்தல்எம் பெருங்கழி நாட்டே!

நாம்நகை யுடையம் நெஞ்சே!- கடுந்தெறல்இரும்பிழி மகாஅரிவ் அழுங்கல் மூதூர்விழவின் றாயினும் துஞ்சா தாகும்:மல்லல் ஆவணம் மறுகுடன் மடியின்,வல்லுரைக் கடுஞ்சொல் அன்னை துஞ்சாள்;பிணிகோள் அருஞ்சிறை அன்னை துஞ்சின். 5துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்;இலங்குவேல் இளையர் துஞ்சின், வைஎயிற்றுவலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும்;அரவவாய் ஞமலி மகிழாது மடியின்,பகலுரு உறழ நிலவுக்கான்று விசும்பின் 10அகல்வாய் மண்டிலம் நின்றுவிரி யும்மே;திங்கள் கல்சேர்வு கனைஇருள் மடியின்,இல்எலி வல்சி வல்வாய்க் கூகைகழுதுவழங்கு யாமத்து அழிதகக் குழறும்;வளைக்கண் சேவல் வாளாது மடியின், 15மனைச்செறி கோழி மாண்குரல் இயம்பும்;எல்லாம் மடிந்த காலை, ஒருநாள்நில்லா நெஞ்சத்து அவர்வா ரலரே; அதனால்அரிபெய் புட்டில் ஆர்ப்பப் பரிசிறந்து,ஆதி போகிய பாய்பரி நன்மா 20நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்கல்முதிர் புறங்காட் டன்னபல்முட் டின்றால் – தோழி!- நம் களவே. 23

52 நெஞ்சுநடுங்கு அரும்படர் தீர வந்து,குன்றுழை நண்ணிய சீறூர் ஆங்கண்செலீஇய பெயர்வோள் வணர்சுரி ஐம்பால்-நுண்கோல் அகவுநர்ப் புரந்த பேரிசைச்சினங்கெழு தானைத் தித்தன் வெளியன் 5இரங்குநீர்ப் பரப்பின் கானலம் பெருந்துறைத்,தனம்தரு நன்கலம் சிதையத் தாக்கும்சிறுவெள் இறவின் குப்பை அன்னஉறுபகை தரூஉம் மொய்ம்மூசு பிண்டன்முனைமுரண் உடையக் கடந்த வென்வேல், 10இசைநல் ஈகைக் களிறுவீசு வண்மகிழ்ப்பாரத்துத் தலைவன், ஆர நன்னன்;ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பிற்களிமயிற் கலாவத் தன்ன தோளே-வல்வில் இளையர் பெருமகன்; நள்ளி 15

203 ‘உவக்குநள் ஆயினும், உடலுநள் ஆயினும்,யாய் அறிந்து உணர்க’ என்னார், தீ வாய்அலர்வினை மேவல் அம்பற் பெண்டிர்,’இன்னள் இனையள், நின்மகள்’ எனப் பல்நாள்எனக்கு வந்து உரைப்பவும், தனக்குஉரைப்பு அறியேன், 5’நாணுவள் இவள்’ என, நனிகரந்து உறையும்யான்இவ் வறுமனை ஒழிய, தானே,’அன்னை அறியின், இவணுறை வாழ்க்கைஎனக்கு எளிது ஆகல் இல்’ எனக், கழற்கால்மின்னொளிர் நெடுவேல் இளையோன் முன்னுறப், 10பன்மலை அருஞ்சுரம் போகிய தனக்கு, யான்அன்னேன் அன்மை நன்வாய் யாக,மான்அதர் மயங்கிய மலைமுதல் சிறுநெறிவெய்து இடையுறாஅது எய்தி, முன்னர்ப்புல்லென் மாமலைப் புலம்புகொள் சீறூர் 15செல்விருந்து ஆற்றித், துச்சில் இருத்த,நுனை குழைத்து அலமரும் நொச்சிமனைகெழு பெண்டுயான் ஆகுக மன்னே! 18
245 ‘உயிரினும் சிறந்த ஒண்பொருள் தருமார்நன்றுபுரி காட்சியர் சென்றனர், அவர்’ எனமனைவலித்து ஒழியும் மதுகையள் ஆதல்நீ நற்கு அறிந்தனை ஆயின், நீங்கிமழைபெயன் மறந்த கழைதிரங்கு இயவில் 5செல்சாத்து எறியும் பண்பில் வாழ்க்கைவல்வில் இளையர் தலைவர், எல்லுற,வரிகிளர் பணைத்தோள், வயிறணி திதலை,அரிய லாட்டியர் அல்குமனை வரைப்பில்,மகிழ்நொடை பெறாஅ ராகி, நனைகவுள் 10
259 வேலும் விளங்கின; இளையரும் இயன்றனர்;தாரும் தையின; தழையும் தொடுத்தன;நிலம்நீர் அற்ற வெம்மை நீங்கப்பெயல்நீர் தலைஇ, உலவைஇலை நீத்துக்குறுமுறி ஈன்றன, மரனே; நறுமலர் 5வேய்ந்தன போலத் தோன்றிப், பலஉடன்தேம்படப் பொதுளின பொழிலே; கானமும்,நனிநன்று ஆகிய பனிநீங்கு வழிநாள்,பால்எனப் பரத்தரும் நிலவின் மாலைப்போதுவந் தன்று, தூதே; நீயும் 10கலங்கா மனத்தை ஆகி, என்சொல்நயந்தனை கொண்மோ- நெஞ்சுஅமர் தகுவி!தெற்றி உலறினும், வயலை வாடினும்,நொச்சி மென்சினை வணர்குரல் சாயினும்,நின்னினும் மடவள் நனிநின் நயந்த 15அன்னை அல்லல் தாங்கி,நின் ஐயர்புலிமருள் செம்மல் நோக்கி,வலியாய் இன்னும் தோய்க, நின் முலையே!
269 தொடிதோள் இவர்க! எவ்வமுந் தீர்க!நெறிஇருங் கதுப்பின் கோதையும் புனைக!ஏறுடை இனநிரை பெயரப்; பெயராதுசெறிசுரை வெள்வேல் மழவர்த் தாங்கியதறுக ணாளர் நல்லிசை நிறுமார், 5பிடிமடிந் தன்ன குறும்பொறை மருங்கின்,நட்ட போலும் நடாஅ நெடுங்கல்அகலிடம் குயின்ற பல்பெயர் மண்ணி,நறுவிரை மஞ்சள் ஈர்ம்புறம் பொலியஅம்புகொண்டு அறுத்த ஆர்நார் உரிவையின் 10செம்பூங் கரந்தை புனைந்த கண்ணிவரிவண்டு ஆர்ப்பச் சூட்டிக் கழற்கால்இளையர்பதிப் பெயரும் அருஞ்சுரம் இறந்தோர்,தைஇ நின்ற தண்பெயல் கடைநாள்,பொலங்காசு நிரைத்த கோடுஏந்து அல்குல்

310 கடுந்தேர் இளையரொடு நீக்கி நின்றநெடுந்தகை நீர்மையை அன்றி நீயும்தொழுதகு மெய்யை அழிவுமுந் துறுத்துப்பன்னாள் வந்து பணிமொழி பயிற்றலின்குவளை யுண்கண் கலுழ நின்மாட்டு 5இவளும் பெரும்பே துற்றனள் ஓரும்தாயுடை நெடுநகர்த் தமர்பா ராட்டக்காதலின் வளர்ந்த மாதர் ஆகலின்பெருமடம் உடையரோ சிறிதே; அதனால்குன்றின் தோன்றும் குவவுமணற் சேர்ப்ப! 10இன்றிவண் விரும்பா தீமோ! சென்றப்பூவிரி புன்னை மீதுதோன்று பெண்ணைக்கூஉம்கண் ணஃதே தெய்ய- ஆங்கண்உப்பொய் உமணர் ஒழுகையொடு வந்தஇளைப்படு பேடை இரியக் குரைத்தெழுந்து 15உருமிசைப் புணரி யுடைதரும்பெருநீர் வேலிஎம் சிறுநல் ஊரே. 17

338 குன்றேங்கு வைப்பின் நாடுமீக் கூறும்மறம்கெழு தானை அரச ருள்ளும்அறம்கடைப் பிடித்த செங்கோ லுடன்அமர்மறம்சாய்த்து எழுந்த வலன்உயர் திணிதோள்பலர்புகழ் திருவின் பசும்பூட் பாண்டியன் 5அணங்குடை உயர்நிலைப் பொறுப்பின் கவாஅன்’சினையொண் காந்தள் நாறும் நறுநுதல்துணைஈர் ஓதி மாஅ யோள்வயின்நுண்கோல் அவிர்தொடி வண்புறஞ் சுற்றமுயங்கல் இயையாது ஆயினும் என்றும் 10வயவுஉறு நெஞ்சத்து உயவுத்துணை யாகஒன்னார் தேஎம் பாழ்பட நூறும்துன்னருந் துப்பின் வென்வேற் பொறையன்அகலிருங் கானத்துக் கொல்லி போலத்தவாஅ லியரே நட்பே அவள்வயின் 15அறாஅ லியரே தூதே- பொறாஅர்விண்பொரக் கழித்த திண்பிடி ஒள்வாள்புனிற்றான் தரவின் இளையர் பெருமகன்தொகுபோர்ச் சோழன் பொருள்மலி பாக்கத்துவழங்கல் ஆனாப் பெருந்துறைமுழங்குஇரு முந்நீர்த் திரையினும் பலவே! 21
342 ஒறுப்ப ஓவலை நிறுப்ப நில்லலைபுணர்ந்தோர் போலப் போற்றுமதி நினக்குயான்கிளைஞன் அல்லனோ- நெஞ்சே- தெனாஅதுவெல்போர்க் கவுரியர் நல்நாட்டு உள்ளதைமண்கொள் புற்றத்து அருப்புஉழை திறப்பின் 5ஆகொள் மூதூர்க் கள்வர் பெருமகன்ஏவல் இளையர் தலைவன் மேவார்அருங்குறும்பு எறிந்த ஆற்றலொடு பருந்துபடப்பல்செருக் கடந்த செல்லுறழ் தடக்கைகெடாஅ நல்இசைத் தென்னன் தொடாஅ 10நீர்இழி மருங்கில் கல்லளைக் கரந்தஅவ்வரையர மகளிரின் அரியள்அவ்வரி அல்குல் அணையாக் காலே! 13

345 ‘விசும்புதளி பொழிந்து வெம்மை நீங்கித்தண்பதம் படுதல் செல்கெனப் பன்மாண்நாம்செல விழைந்தன மாக’ ஓங்குபுகழ்க்கான்அமர் செல்வி அருளலின் வெண்கால்பல்படைப் புரவி எய்திய தொல்லிசை 5நுணங்குநுண் பனுவற் புலவன் பாடியஇனமழை தவழும் ஏழில் குன்றத்துக்கருங்கால் வேங்கைச் செம்பூம் பிணையல்ஐதுஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும்சின்னாள் கழிக! என்று முன்னாள் 10நம்மொடு பொய்த்தனர் ஆயினும் தம்மொடுதிருந்துவேல் இளையர் சுரும்புண மலைமார்மாமுறி ஈன்று மரக்கொம்பு அகைப்பஉறைகழிந்து உலந்த பின்றைப் பொறையசிறுவெள் அருவித் துவலையின் மலர்ந்த 15கருங்கால் நுணவின் பெருஞ்சினை வான்பூச்செம்மணற் சிறுநெறி கம்மென வரிப்பக்காடுகவின் பெறுக- தோழி- ஆடுவளிக்குஒல்குநிலை இற்றி ஒருதனி நெடுவீழ்கல்கண் சீக்கும் அத்தம்அல்குவெயில் நீழல் அசைந்தனர் செலவே.
375 ‘சென்று நீடுநர் அல்லர்; அவர்வயின்இனைதல் ஆனாய்’ என்றிசின் இகுளை!அம்புதொடை அமைதி காண்மார் வம்பலர்கலனிலர் ஆயினும் கொன்றுபுள் ஊட்டும்கல்லா இளையர் கலித்த கவலைக் 5கணநரி இனனொடு குழீஇ நிணனருந்தும்நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசிவிரல்அத்த எருவைச் சேவல் சேர்ந்தஅரைசேர் யாத்த வெண்திரள் வினைவிறல்எழாஅத் திணிதோள் சோழர் பெருமகன் 10

“”’ஐந்து நிலை நாட்டு மறவத் தேவர் வரலாறு””” 
கொற்கை நகரை தலைநகரமாக கொண்டு , மன்னன் வெண்தோல் செழிய பாண்டிய மகன் கூலப்பாண்டியன் பன்னிரண்டு நாடுகளாக பிரித்து 2951B.Cமுதல் 2594B.C ஆண்டு வரை ஆட்சி செய்து வந்தார் , அப்போது பதிக்கோட்டை நாட்டை பொன்னன் – அமரன் ,என்போர் மன்னனுக்கு கட்டுப்படாமல் , கப்பமும் கட்ட மறுத்து , மன்னனோடு போர் செய்து , பாண்டிய மன்னனை தோல்வியடைய செய்தான் , அதன் பிறகு கரூரை தலைமையாக கொண்டு பேரரசு மன்னராக திகழ்ந்த சேர சிங்கவள நாட்டு அரசர் ஸ்ரீ இரவிகுப்த ராஜபாண்டியத்தேவன் சென்று முறையிட்டு உதவி செய்து நாட்டை மீட்டு தருமாறு கூறினான் , சேர மன்னர் தன்னுடைய இளைய மனைவி குமரியமையாரின் மைந்தர் ஐவரான 1.பராக்கிரம பாண்டியத் தேவர். 2,மாமமறைப் பாண்டியத் தேவர் .3 . வீரபாண்டியத் தேவர் .4. விக்கிரம பாண்டியத் தேவர் .5. ஜெயவேழத் தேவர் , ஐந்து மகன்களை அனுப்பி பொன்னன் , அமரன் இருவரையும் வெற்றி கொண்டு , பாண்டிய மன்னனுக்கு நாட்டை மீட்டு கொடுக்குமாறு ஆணை இட்டு , அதன்படி போர் செய்து வெற்றி அடைந்து பொன்னன் , அமரன் மாண்ட இடம் இன்றும் பொன்னமராவதி என்றும் , போர் நடந்த இடம் அமர்கண்டான் அழைக்கப்படுகிறது , அதன் பிறகு பாண்டிய மன்னன் , சேர மன்னனிடம் நேரடியாக முறையிட்டு , தன் கொற்கை நாட்டை ஐந்து பிரிவாக பிரித்து , தங்களுடைய ஐந்து மகனுக்கும் என் தாய்மாமன் மகள்களை திருமணம் செய்து கொடுத்து நாட்டை சிறப்பாக ஆட்சி செய்தார்கள் , இப்படித்தான் ஐந்து நிலை மறவத்தேவர் நாடு உருவாகியது .ஒவ்வொரு மன்னருக்கும் எல்லை உருவாக்கி , 1.முல்லை மங்கலம் , 2.சதுர்வேதமங்களம் , 3.கன்னமங்களம் , 4.சீர்சேந்தமங்கலம், 5.வேலமங்கலம் என 54 ஊரையும் பிரித்து கொடுத்தார்கள் . ஆனால் இன்று 150 ஊராக உள்ளது . இன்று வரை அரளிப்பாறை மஞ்சுவிரட்டு நடத்தி ஐந்து நிலை நாட்டு அம்பலத்துக்கும் மரியாதை கொடுக்கப்படுகிறது . இங்கு வாழும் தேவர் மக்கள் அனைவரும் இள மறத்தேவர் என்று அழைக்கபடுகிறார்கள் . இந்த ஐந்து நாட்டு மக்களும் கொண்டையகோட்டை மறத்தேவர் ஆவார்கள் ….//////

1. இதில் வருடம் தவறாக கொடுத்துள்ளார் ..
2. செழிய பாண்டிய மகன் கூலப்பாண்டியன்
3. அதன் பிறகு கரூரை தலைமையாக கொண்டு பேரரசு மன்னராக திகழ்ந்த சேர சிங்கவள நாட்டு அரசர் ஸ்ரீ இரவிகுப்த ராஜபாண்டியத்தேவன்

இந்த மூன்றுமக்களும் கொண்டையகோட்டை மறத்தேவர் ஆவார்கள்

மூலம்[தொகு]

சங்ககாலத் தமிழக வரலாறு – 2. சென்னை: மீனா கோபால் பதிப்பகம். 2007. பக். 135-138.

செய்தி விபரம்:
சிவகங்கை மந்திரி, ஐந்தினிலை நாட்டை வம்சம் பரம்பரை வரலாறு, இரா.சேது.
 பாரியது பறம்யு(கட்டுரை),சிங்கம்புனேரி,நிக்கோலஸ் டிரிக்ஸ்(இந்திய வரலாறு).

This entry was posted in தேவர். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *