தஞ்சை கீழை நரசிம்மர் வரலாறு

Photo: தஞ்சையில் உள்ள ஒவ்வொரு கோயிலுக்கு பின்னாலும் வரலாறு புதைந்து கிடக்கின்றது. பார்பதற்கு சாதாரணமாய் தோன்றும் இந்த கோயிலுக்கு பின்னும் அப்படி ஒரு வரலாறு உள்ளது. கி.பி 9 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்  "விஜயலாயச் சோழன்" என்கிற மன்னனால் புத்துயிர் பெற்று தஞ்சையை மீட்ட சோழர்கள், பின் மெல்ல மெல்ல வளர்ந்து ராஜ ராஜன், ராஜேந்திரன் போன்ற அரசர்களின் காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்து கடல் கடந்து கப்பல் படை உதவியுடன் கடாரம் வரை சென்று கொடி நாட்டினார்கள்.'எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது' என்ற கீதை வரிகளுக்கேற்ப மூன்றாம் ராஜ ராஜன் காலத்தில் சுந்தர பாண்டியன் படை எடுப்பினால் தஞ்சை செந்தழலுக்கு இரையாக்கப்பட்டது. சோழ நகரங்கள் ஒவ்வொன்றும் மண்மேடாக்கப்பட்டது, அங்கு இருந்த மாடமாளிகைகள் ஒவ்வொன்றும் இடித்து நொறுக்கப்பட்பட்டது.அவற்றிலுள்ள தூண்கள் எல்லாம் உடைத்துப் பொடியாக்கப்பட்பட்டது.சோழ தேசத்தையே தரைமட்டமாக்கிய பின், கழுதையைப் பூட்டி ஏர் உழுது, கவடி விதைத்துள்ளான் சுந்தர பாண்டியன்.காவிரி பாய்ந்து வயல்களெல்லாம் பச்சை பசேலென இருந்த தஞ்சை இனி எதற்கும் பயன்படாது என்ற நிலைக்கு வந்தது. பல வருடங்களாக பாழ்பட்டுக் கிடந்த தஞ்சைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டினான் பாண்டிய மன்னன் வல்லபன் (1308-1344)  என்ற மன்னனுக்கு சேனாதிபதியாய் இருந்த "சாமந்தன்" என்பவன்.பாழ்பட்டுக்கிடந்த தஞ்சை நகரை திருத்தி அங்கு "சாமந்த நாராயண விண்ணகரம்" என்ற பெருமாள் கோயிலை நிறுவி , அந்த கோயிலுக்கு "சாமந்த நாராயண குளம்" என்ற குளம் ஒன்றை வெட்டி, அங்கு ஒரு புதுக் குடியிருப்பையும் தோற்றுவிக்கிறான் "சாமந்தன்". அப்படி அவன் தோற்றுவித்த குடியுருப்பு மெல்ல மெல்ல வளர்ந்து நாயக்கர்கள், மராட்டிய மன்னர்கள், ஆங்கிலேயர்கள்  என பயணித்து இன்று தஞ்சை மாநகராய் வளர்ந்துள்ளது.அழிந்த தஞ்சையில் புதுக் குடியிருப்பு வரக் காரணாமாய் இருந்த கோயில் "கீழ வாசல்" பகுதியில் "கீழை  நரசிம்மர்" என்ற பெயரில் இன்றும் உள்ளது. கோயிலின் எதிரில் பெரிய குளமும் உள்ளது. தஞ்சை செல்லும் போது பெரிய கோயிலை மட்டும் பார்த்து விட்டு திரும்பாமல் வரலாற்றை தேடி பயணியுங்கள். ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.சோழ தேசத்தில் பயணிப்போம்...
தஞ்சையில் உள்ள ஒவ்வொரு கோயிலுக்கு பின்னாலும் வரலாறு புதைந்து கிடக்கின்றது. பார்பதற்கு சாதாரணமாய் தோன்றும் இந்த கோயிலுக்கு பின்னும் அப்படி ஒரு வரலாறு உள்ளது.

கி.பி 9 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் “விஜயலாயச் சோழன்” என்கிற மன்னனால் புத்துயிர் பெற்று தஞ்சையை மீட்ட சோழர்கள், பின் மெல்ல மெல்ல வளர்ந்து ராஜ ராஜன், ராஜேந்திரன் போன்ற அரசர்களின் காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்து கடல் கடந்து கப்பல் படை உதவியுடன் கடாரம் வரை சென்று கொடி நாட்டினார்கள்.

Posted in வரலாறு | Tagged , | Leave a comment

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மீட்டெடுத்த வீரம் செறிந்த போராட்டம்

madurai001
46 ஆண்டுகள் துளுக்கர்களால் அடைத்து வைக்கப்பட்டிருந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மீட்டெடுத்த தேவர்களின் வீரம் செறிந்த போராட்டம்
கி .பி 1334 முதல் 1378 வரை மதுரையை துளுக்கர்கள் -சுல்தான்கள் என்ற பெயரில் ஆண்டிருக்கிறார்கள் அவர்கள் உடெளசி -சலாலுதீன் -குப்தின் கியாஸ் உத்தின் -நாசீர் உத்தின் -அடில் பெக்ருதின் முபாரக்சா அல்லாவுதீன் ,சிக்கந்தர் ஆகிய இவர்கள் மிக கொடூரமான கொடுங்கோல் ஆட்சி செய்துள்ளனர் … இந்து கோவில்களை இடித்து தள்ளிவிட்டு அவற்றை பள்ளிவாசல்களாக மாற்றியுள்ளனர் .
இந்துகள் சாமிகும்பிட தடைசெய்யப்பட்டனர் இந்துக்களை கட்டாயப்படுத்தி அவர்களை துலுக்கர்களாக மதமாற்றம் செய்துள்ளனர் மீறி சாமி கும்பிட்ட இந்துக்களை அந்த இடத்திலேயே வெட்டி கொன்றுள்ளனர் இந்துக்கள் பலர் கழுவிலேற்றி கொல்லப்பட்டனர் இந்து மதத்தை விட்டு மாற மறுத்த பெண்களையும் அவர்களின் குழந்தைகளை அந்த பெண்களின் மார்பில் வைத்து வெட்டிகொன்றுள்ளனர் . இஸ்லாத்தில் சேர மறுத்தவர்களின் மண்டை ஓடுகளை  மதுரை வீதிகளில் தோரணமாக கட்டி தொங்கவிட்டனர்
Posted in தேவர்கள் | Tagged , | Leave a comment

முத்துராமலிங்கத் தேவரும் கள்ளுக்கடை மறியலும்

images

நாடு பூராவும் கள்ளுக்கடை மறியல் மிகத்தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. சட்டமறுப்பு இயக்கத்தின் ஒரு பிரிவாக கள்ளுக்கடை மறியல் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் நடந்தது ..

போலீசாரின் குண்டாந்தடிகள் காங்கிரஸ் தொண்டர்களின் மண்டைகளை உடைத்து ,ரத்தத்தை சிந்த வைக்கும் பயங்கரங்கள் மிகச் சாதரணமாக நடந்தது .மறியல் செய்யும் தொண்டர்கள் மிருகத்தனமாக தாக்கப்பட்டனர் .

முதுகுளத்தூர் பகுதியிலும் கள்ளுக்கடை மறியல் நடைப்பெற்றது .அந்த சமயம் தேவர் திருமகனார் கொடுமலூர் என்ற ஊரில் உள்ள குமரய்யா கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு சென்று கொடுமலூர் கிராம முன்சீப் வீட்டில் தங்கி இருந்தார் ..

 

Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged , | Leave a comment

தேவரினத்தின் எதிர்கால அரசியல் சக்தியை எப்படி உருவாக்குவது??..

thevar

இன்று தேவரின இளைஞர்கள் பெரும்பாலானோர் நம்முடைய அரசியல் தேவையை நன்குணர்ந்துள்ளனர் ஆனாலும் அவர்களுக்கு யாரை நம்புவது எந்த தலைமையை ஏற்பது எந்த கட்சிக்கு உழைப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர்.
படித்த இளைஞர்கள் திராவிடத்தை வெறுக்கின்றனர் ஆனால் தலைமைகள் நம்மை நம்ப மறுத்து அதை விட மறுக்கின்றனர் அவர்கள் விட நினைத்தாலும் திராவிடம் அவர்களை சும்மா விடாது. தற்போது திராவிடத்தை எதிர்ப்பேன் என்று கூறும் கட்சி சிறு நம்பிக்கையை கொடுத்தாலும் இது தற்காலிகமே, நம் இளைஞர்கள் அனைவரும் தற்போது இதை ஆதரித்தாலும் எதிர்காலத்தில் இதில் மாற்றம் இருக்காது என்று உறுதியாக சொல்லமுடியாது. இந்த கட்சி சிறு அரசியல் எழுச்சி பெற்றாலும் அடுத்த முறை திராவிடம் சூழ்ச்சியால் அதை முடக்கும் வாய்ப்பு அதிகம்.

அப்போது நம் இளைஞர்கள் மீண்டும் தொடங்கிய இடத்தில் வந்து நிற்கவேண்டிவரும். இது நமக்கு மட்டுமில்லாமல் நம் ஒட்டுமொத்த இனத்திற்கும் பெரும் பின்னடைவாக இருக்கும். அதன் பிறகு நாம் நம் இனத்தின் சிறு நம்பிக்கையை பெற முடியாது.

 

Continue reading

Posted in தேவர் | Tagged | 2 Comments

மதுரையை ஆண்ட பாண்டியர்கள் எங்கிருந்து வந்தனர்?

madurai

மதுரையை ஏன் தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தனர் என்பதை பார்ப்போம்.
பாண்டியர்கள் முதலில் ஆட்சி செய்த இடம் கொற்கை. லெமூரியா கண்டத்தின் நடுவே பழம் பாண்டியர்களின் கொற்கை அமைந்திருந்தது. அவர்களின் வாழ்விற்கும், செழிப்புக்கும் காரணமாக கொற்கை துறைமுகம் இருந்தது. கடல் வாணிபத்தால் இத்துறைமுகம் புகழ் பெற்றது. கடல் த…ங்களை வாழவைக்கும் கடவுளாக பாண்டியர்கள் கருதியதால், சின்னமாக மீனை வைத்துக் கொண்டனர். இரண்டு மீன்களின் இருபுறமும் உள்ள கண்கள் தெரிய வேண்டுமென்பதற்காக செங்குத்தாக நிற்பது போல் அமைத்தனர். எதிலும் தாங்கள் உறுதியாக நிற்பவர்கள் என்பதை காட்ட இச்சின்னத்தை தேர்ந்தெடுத்தனர்.

 

Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

பார்வர்ட் பிளாக் கட்சியை காங்கிரசுடன் இணைக்க நேரு செய்த முயற்சி

images (36)

1955 ஆம் ஆண்டு வாக்கில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொது செயலாளராக இருந்த சீலபத்ரயாஜி என்பவரை நேரு,தேவரிடம் தூது அனுப்பினார் . பார்வர்ட் பிளாக் கட்சியை காங்கிரசோடு இணைத்து விட வேண்டும் என்றும் அதற்கு பதிலாக தேவர் விரும்பும் பதவியை மத்தியிலோ,மாநிலத்திலோ வகிக்கலாம் என்றும் சீலபத்ரயாஜி ,தேவரை அவரது பசும்பொன் கிராமத்தில் வந்து சந்தித்து கூறினார் .

சீலபத்ரயாஜி கூறிய கருத்துக்கு தேவர் இணங்கவில்லை .மாறாக சீலபத்ரயாஜியை இம்மாதிரியான வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்று கண்டித்தார் .

உடனே சீலபத்ரயாஜி டில்லிக்கு சென்று நேருவிடம் தேவர் ஒத்துக்கொள்ளவில்லை என்ற விவரத்தை கூறினார் .

அன்று அகில இந்திய பார்வர்ட் பிளாக் தலைவராக இருந்த கேப்டன் மோகன்சிங் என்பவரை நேரு அழைத்து பேசி,அகில இந்திய பார்வர்ட் பிளாக் காங்கிரசுடன் இணைந்தது என்று அறிக்கை விடச் செய்தார் ,
Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

மலையமான் என்னும் மன்னிய சேர குலத்தோன்றல்

மலையமான் மன்னர் யார்? 

தென்னிந்திய அரச குலங்களில் மலையமான் குலமும் முக்கியமான ஒன்று. மூவேந்தரின் சதியால் ஏற்பட்ட பாரியின் மறைவிற்கு பின்,தந்தையை இழந்து நின்ற பாரிமகளிரை,புலவர் கபிலர் பெருமான் தனது முயற்சியின் மூலமாக மலையமான் திருக்கோவிலூரையாண்ட மலையமான் தெய்வீகன் என்ற அரசனுக்கு சங்கவை,அங்கவை இருவரையும் மணம் செய்விக்க முனைந்து;பாரியை சதியால் கொன்ற மூவேந்தரையுமே ஔவையாரின் உதவியுடன் அழைத்து, அவர்களின் முன்னிலையிலேயே பாரிமகளிருக்கும் மலையமான் தெய்வீகனுக்கும் திருமணம் செய்வித்தார். இவ்வாறு மூவேந்தர் முன்னிலையில் ஏற்பட்ட மண உறவின் காரணமாகவும், மூவேந்தரின் மக்களுடனும் உண்டான மண உறவின் காரணமாகவும் மலையமான் தெய்வீக ராஜனின் சந்ததியினர்.மலையமான் நாட்டின் தலைநகராக திருக்கோவலூர் இருந்திருக்கிறது. இப்போது, திருக்கோயிலூர் என்றும் திருக்கோவிலூர் என்றும் அழைக்கப்படுகிறது. ‘மலையமானாடு’ எனவும் ‘மலாடு’ எனவும் பெயர் பெற்றது விளங்கியது. இது தவிர வேறு பெயர்களிலும் திருமுனைப்பாடிநாடு, சேதிநாடு, மகதநாடு; சகந்நாதநாடு எனவும் அழைக்கப்பட்டது.
Posted in சேரர், பாரிவேந்தன் | Tagged , | Leave a comment

படைப்பற்று அரையர்களான விரயாச்சிலை மறவர்கள்

புதுகை மாவட்டத்தின் தெற்கு,தென்மேற்கு பகுதியில் குறிப்பாக வெள்ளாற்றின் தெற்கே கோட்டூர்,லம்பக்குடி வரையிலும் மறவர்குடியிருப்புகள் செரிவாக காணப்பட்டன.சிலம்பு கூறும் கோவலன் கண்ணகி பயணத்தில்,கொடும்பாளூரில் இருந்து மதுரை செல்லும் வழியில் இம்மக்கள் வாழ்ந்த குறிப்புகள் காணப்படுகின்றன.புறப்பொருள் வெண்பாமாலையில் “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி” என்பது மறவரை குறிக்கும் தொடராகும்.கொற்றவை வழிபாட்டினை பின்பற்றுபவராக இன்றளவும் புதுக்கோட்டை மறவரின் சடங்குகள் காணப்படுகின்றன.

 

Eluru_Naatar

Eluru_Naatar1

uruvatti_Nattar

சோழ,பாண்டியர் கல்வெட்டில் மறவர்கள் 

கோவனூர் கிராமத்தில் சோழர் கால சிலை  கண்டுபிடிப்பு –தினத்தந்தி செய்தி

 

ஜூன்-29

 

பொன்னமராவதி அருகே கோவணிக்கடன் அய்யனார் கோவிலில் திருப்பணி செய்த போது அதில் எழுத்துக்கள் இருப்பதாக தெரியவந்தது. இது குறித்து திருப்பணி குழு தெரிவித்த செய்தியை தொடர்ந்து மேலப்பனைய்யூர்  தொல்லியல் ஆய்வாளர் ராஜேந்தித்திறன் கள ஆய்வில் இறக்கின்றார்

 

அப்போது அய்யனார் சிலையடியில்

 

“இச் சிலை கோவனூர் மறவன் தர்மன் குரலான மூவாயிர பேரரையன் தன்மம்”

 

என பொறிக்கப்பட்டிருந்தது சோழர் கால கலைவடிவில் இது 900 ஆண்டு பழைமையான ஒன்றாக

 

கருதப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

 

 

 

நன்றி: தினதந்தி

 

 

காலம் :15 ஆம் நூற்றாண்டு 
இடம்:பனையூர் -காணாடு 
 
செய்தி :
பனையூர் மறவன் நயினான் எழுந்திர வென்றான் என்ற போர் வென்ற தேவன் வைத்தாய் திரு-நிலை கால் 
 
கல்வெட்டு:
இத்திரு நிலைக்கால் இரண்டுமே கீழ் படியும் உட்பட இவ்வூர் மறவரில் நயினான் எழுந்திர வென்றான் போரில் வென்ற தேவன் தன்மம் 

 

 

 

 

 


தமிழ் வேந்தர்கள் அனைவரும் மறவர் படைகளை கொண்டிருந்தனர். இதில் குலோத்துங்க சோழனின் குடுமியான்மலை கல்வெட்டுகளில்”பாண்டியரது மறவர் படையையும் ஏழகப்படையையும் வென்றதாக” க.என்.(163,166) கூறுகிறது.இரண்டாம் இராஜேந்திரனின் சிவகங்கை சோழபுரம் பகுதி கல்வெட்டில்”பாண்டிய மறமடக்கிய இராஜேந்திர சோழ மங்கலம்” என பெயரிட்டதாக கல்வெட்டு கூறுகிறது.பாண்டிய மன்னன் சடையவர்ம சுந்தரபாண்டிய தேவன் கல்வெட்டில்,”புக்கிலந்து தாக்கி விருதர் மூக்கிழந்து முகம்ழிய மறப் படையுடன் எழுக படை” என குடுமியான் மலை கல்வெட்டு கூறுகிறது. பாண்டிய மன்னன் சீவல்லவ தேவர் விராயச்சிலை கல்வெட்டுகளில் “முன்னள் குல சேகர தேவருக்கு இவ்வூர் மறவர் நம்பியான் ஐந்நூற்றுவ பெரியான் ” என்று க்ல்வெட்டு கூறுகிறது.இராஜராஜ சோழனின் கல்வெட்டும் மட மயிலாபூரில் உள்ள மறவரை பற்றி கூறுகிறது.குலோத்துங்கனின் குடுமியான் மலைக் கல்வெட்டும்,திருவேங்கை வாசல் சிவன் கோயில் கல்வெட்டும் அவ்வூரில் உள்ள மறவரை பற்றி குறிக்கிறது.மாறவர்மன் குலசேகரபாண்டியனின் கல்வெட்டில்(393)கான விராயச்சிலை கல்வெட்டில் மறவர்களான அரசமக்களும் ஊரவையர்களும் ஐந்நூற்றுவ தேவன், ஐந்நூற்றுவ பேரரையன் என்பார் சுட்டபட்ட செய்தி அரசமக்களுக்கும் வணிககுழுவினருக்கும் உண்டான தொடர்பை விளக்குகின்றன.

 

 

 

 

 

 

 

thurvaravathi_periyaraiyan

 

படைபற்றுகள்

படைப்பற்று குடியிருப்புகள் படையினருக்கு வழங்கப்பட்ட நிலக்கொடையாகும்.பெருவேந்தரின் மோதற்களமாகப் பயன்படுத்தப்பட்ட இப்பகுதியில் மறவர் மக்களுக்கு மட்டும் வேந்தர்கள் வழங்கிய படைப்பற்று கல்வெட்டுகள் விரையாச்சிலை,குருந்தன்பிறை க.என்க.என்(354,727,743),மலையாலங்குடி க.என்(402,403),பெருங்குடி க.என்(364,712).இளஞ்சார்,புலிவலம் க.என்(648,792).படைப்பற்றின் மக்களாக மறவர்களே அரையர்களாகவும்,ஊரவர்களாகவும் செயல்பட்டனர். க.எண்(393).இதை இரண்டாம் இராஜாதிராஜன் காலத்திய கல்வெட்டு செய்தி (1926:257) உறுதிப்படுத்திகிறது.

 

 

விராயச்சிலை மறவர்கள் அரையர்களாகவும்,ஊரவைராகவும் நாடாள்பவராகவும்

 

மறவர்கள் அனைவரும் தேவர் எனும் பட்டம்.இருப்பினும்.இவர்களே அரையர்களாகவும்,ஊரவையர்களாகவும்,நாடாள்பவராகவும் திகழ்ந்துள்ளனர். அரையர் எனும் சொல்லை அரசர் எனும் சொல்லிற்கு மாற்றாக கருதலாம்.அரையர்களை ஊர் அரையர்,பேரரையர்,நாட்டார்,நாட்டரையர்(அ)நாடாள்வான் என வரிசைப்படுத்தலாம்.ஒல்லையூர் மங்கலத்து ஊராயிசைந்த ஊரவராக மதுரை மறவரோம் என மாறவர்மன் சுந்தரபாண்டிய தேவன் இடையாத்தூர் கல்வெட்டில்(க.எண்309) மறவர்குழுக்களின் பேரரையர் 6 பேரும் நாடாள்வார்(மறவர்) இருவரும் இடம் பெற்றுள்ளனர்.இங்கு சுட்டப்படும் அரையர்களும் நாடாள்வாரும் மறவர்களே.இவர்களின் பெயர்களும் கல்வெட்டு என்னும் பின்வரும் தலைப்புகளில் கூறப்படும்.

ஏழூர் நாட்டார் செம்மநாட்டு மறவர்களின் குலதெய்வங்களில் ஒன்றே அரசுமகன்:

அரசுமகன்-குலதெய்வம் -கோவனூர்.

ஏழூர் செம்ம நாட்டு மறவர்களின் குலதெய்வங்களில் ஒன்றே அரசுமகன். இதுவே கல்வெட்டுகளில் வரும் அரசுமக்கள் என்னும் அரையர்களாகும். அரசமகன் என்பதுவே வட மொழியில் “ராஜ்புட்” என்பதாகும்.

எனவே இங்கு வாழும் அரையர்,பேரரையர்,நாடாழ்வார்,நாட்டார் இவர் யாவரும் அரச மக்களின் வழி வந்தோரின் வம்சாவளிகளே ஆகும். இது இன்னும் கல்வெட்டுகளில் உறுதிப்படுத்தப்படுகின்றது.

சிற்றரசர்கள்

 

இதைப்போல் வ.சூரக்குடி என்ற சிற்றரசு மறவர் இனத்தவரான பொன்னரசு கண்ட பராக்கிரம விஜயாலத்தேவர் என்பவர் ஆண்டது.இவர்கள் மறவர் இனத்தின் உட்பிரிவான வன்னிய மறவர் என்ற இனத்தை சார்ந்தவர்கள். இது 12-16ஆம் நூற்றாண்டு காலத்தில் புதுக்கோட்டைக்கு தெற்கு மற்றும் தென்மேற்கு பிரதேசமான கானாடு,ஒளிநாடு,இராஜேந்திரமங்கலம்,ஒளிநாடுக்கு தலைநகராக இருந்துள்ளது.இது கானாடு,கோனாடு மறவர் அரையர்களையும் வெள்ளாளர்களையும் குடிமக்களாய் கொண்டது.இவரை பற்றி 40-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் திருமயம்,விராச்சிலை பகுதியில் உள்ளதாக 40-கல்வெட்டையும் ஆராய்ந்த சுப்புராயுலு மற்றும் “புதுக்கோட்டை வரலாறு எழுதிய வீ.மானிக்கம். தம் நூலில் கூறுகிறார். கி. பி. 1399ம் ஆண்டுக் கல்வெட்டு28 சூரைக்குடித் திருமேனி அழகியாரான நாயினார் விசையாலயதேவர், இவ்வளாகத்தில் பெருமாளைப் புதிதாக எழுந்தருளச் செய்தமை பற்றிக் குறிப்பிடுவதால், அக்கால கட்டத்தில் நின்றருளியதேவரின் திருமுன் படிக்கட்டின் புறச்சுவராக இருந்த பெருந்தேவிக் கல்வெட்டு அகற்றப்பட்டிருக்கலாம் என்று கருத இடமுண்டு.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அரையர்கள்(அரசமக்கள்)

 

விரையாச்சிலை படைப்பற்றில் மறவர்களே ஊரவையர்களாகவும்,அரையர்களாகவும் ஆளும் வர்க்கத்தினராக செயல்பட்டுள்ளனர்.இதன் கல்வெட்டுகளில் குறிக்கும் அரசமக்களாகவும் நாடாள்பவர்களாகவும் கூறும் கல்வெட்டுகளில்.மாறவர்மன் குலசேகரபாண்டியதேவன்(க.என்.395,565) மற்றும் விரையாச்சிலை மாறவர்மன் குலசேகரபாண்டிய தேவன் கல்வெட்டுகளான க.எண்(346,421,455,534) குறிக்கிறது.

 

 



பேரரையர்கள்

 

கானாடு கோனாடு இருபெரும் பகுதிகளில் மறவர்களே அரையர்களாகவும் பேரரையர்களாகவும் இருந்துள்ளனர்.இவர்களது பெயர்கள் சடையன் சுந்தரபாண்டிய்ன் கல்வெட்டு(346)லில் குருந்தன் பிறை மீனவராயன்,இராசிங்க தேவன்,நாட்டான் உய்யவந்த தேவன் என தெரிகிறது. மற்றும் ஊரவராக நாட்டன் சோண்டன்,வீரசிங்க பேரரையன்,அத்திமாலையிட்டான்,பெரியநாட்டுப் பேரரையன்,கானாட்டு பேரரையன்,வையன் சொக்கனார்,நகளங்க பேரரையன்,நம்பு செய்வான்,செருத்திவனப்பெருமாள்,குன்றந்தேவனான தென்னவதரையன்,பொற்காரி சூரியதேவன்,விழிங்கைதரையன்,அண்ணல்வாயில் சேரபாண்டியதேவன்,அரியான் உடையான்,வளவதரையன்,தேவதரையன்,வளவன் பல்லவதரையன்,குலோத்துங்க பல்லவதரையன்,செம்பிய பேரரையன்,பில்லமங்கல கல்வெட்டில்(409),ஆதனூர் பூபாலராயன்,திருப்புவனமுடியான்,செழியதரையன் முதலிய மறவ அரையர்கள் கையொப்பமிட்ட செய்தி காணப்படுகின்றது.

 

நாடாள்வார்கள்(நாட்டரையர்கள்)

 

கானாடு கோனாடு இருபகுதிகளிலும் மறவர்களே நாடாள்வார் அல்லது நாட்டரையர்களாக இருந்துள்ளனர்.இதில் புதுக்கோட்டை விசுங்கிநாடு,தெங்கவி நாடு வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் கள்ளர் இனத்தவர்களே எண்ணற்ற அரையர்களாகவும் நாடாள்பவர்களாகவும் இருந்துள்ளனர்.மறவர்,கள்ளர் இனத்தவரே அரையர்களாகவும்,நாடாள்பவர்களாகவும்,பாடிகாப்போனாக வல்லாண்மை பெற்ற இனக்குழுக்களாக கல்வெட்டு செய்திகளில் இடம்பெற்றுள்ளனர்.இதில் மறவ நாடாள்பவர்களாக இராஜசிங்க நாடாள்வான்(இந்நாளில் அர்.எஸ்.மங்கலம்(இராம்நாடு)),அழகியநாடாள்வான்,சோதியாள்வான்,க.என்(512,693) கல்வாயில் நாடாள்வான்,அதளையூர் நாடாள்வான் என்பவர்கள் அரச பிரதிநிதிகளாக பனியாற்றியுள்ளனர்.இவர்களுடன் கீழக்குருந்தன்பிறை பெரியான் அரசனான ஏழகமிகாம நாடாள்வான்,கேரளன் கன்னிறைந்தனான அங்கராயன்,பெருமாள் அரச நாடாள்வான்,தில்லை சோண்டனான இலங்கேஸ்வர நாடாள்வான்,தேவன் காளயகால் நாடாள்வான் இவர்கள் யாவரும் மறவ அரசு நாடாள்பவராக விரயாச்சிலை குடுமியான் மலை கல்வெட்டுகளில் கையொப்பமிட்டுள்ளனர்.

விரையாச்சிலை மறவரின் இதர பொதுப்பணிகள்: 

 

செவலூர் கல்வெட்டில் மறவரில் கோவனூர் கூட்டத்து மாத்தன் நாட்டானான பொன்னம்பலங் காட்டிய கங்கன் எனும் குறிப்பு தென்படுகின்றது.13-ஆம் நூற்றாண்டு திருப்பூவாலக்குடி உடைய நாயனார் கோயிலில் தங்கள் பெயரால் மறமாணிக்கன் சந்நிதி ஏற்படுத்தி நிலக்கொடை வழங்கினர்(க.என்.444).கானாடு கோனாடு இரு பகுதி கரைமார்களாலும் மறவர்களுக்கு நாட்டரசுகட்டி,கோவனூர் கூட்டத்து விஜய அரசு நாராயண பெருமாள் எனும் குறிப்பு(566,565,268) வழங்குகிறது.மாறன் சுந்தர பாண்டியன் பேரையூர் கல்வெட்டில் மலையாளங்குடி மறவ அரசுமக்களான இராசராச நாடாள்வான்,உத்தமசோழ நாடாள்வான்,அஞ்சாதான் அரங்குளப்பெருமாள் தேவன் ஆகியோர் பூசலில் குழுக்களாக மோதிக்கொண்ட செய்தி வருகிறது. மறமானிக்கம் என்பது மறவர்குலத்தின் சிறப்பு பெயராகவும் அலயங்களில் சன்னதியும் ஏற்படுத்த பட்டது.இவர்களை அண்டி வாழ்ந்த பிறமக்களான ஆயர்,மறமாணிக்ககோன்,மறமாணிக்க மாராயன் எனவும்,கம்மாளர்கள்..மறமாணிக்க தட்டான்,கைக்கோளன் எனும் சிறப்பை பெற்றனர்(க.என்.278).புலவன் ஒருவனுக்கு மறச்சக்கரவர்த்தி பிள்ளை என பட்டம் கொடுத்துள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


உயர் திரு.அமரர் மாணிக்கம் அவர்கள்

மாங்குடி மறவன் அவையன் சாத்தனான அதளையூர் நாட்டு பேரைரையன் ஆலயப்பணி செய்ததாக ஆரியூர் கல்வெட்டில்(505)கூறப்படுகிறது.தேக்காட்டூர் மறவனேரி மறவரால்(637) அமைக்கப்பட்டது .இராஜராஜன் கலிங்கு இரும்பாலி மறவனால் அமைக்கப்பட்டது.

 

நன்றி:

புதுக்கோட்டை வரலாறு.வீ.மாணிக்கம்.

புதுக்கோட்டை மற்றும் தென்-இந்திய கல்வெட்டு ஆராய்ச்சி-க.ரா.சீனிவாசன்,194,1946,

தென்பாண்டிய செப்புபட்டய வரலாறு.-சென்னை.

சுப்ரமனிய அய்யர் “பழங்கால இந்திய அரசாங்கத்தின் அடித்தலம்”

புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு,சோழ அரசியல் ஆவணம்-சுப்புராயலு.

குறிப்புகள் 27. கே. வி. செளந்தரராஜன், மு. கு. நூல், ப. 103; பெரும்பிடுகுப் பெருந்தேவி, கோயிலைப் புதுப்பித்துக் கொடையளித்த செய்திகளைக் குறிப்பிடும் கல்வெட்டு, என்று எழுதும் ஜெ. ராஜாமுகமது, அக்கல்வெட்டின் அடிப்படையில், ‘குகை இக்காலத்திற்கு முன்பே இருந்திருக்கவேண்டும்’ என்றும் எழுதியுள்ளார். மு. கு. நூல், ப. 240. சு. இராசவேல், அ. கி. சேஷாத்திரி இவர்கள் இக்கல்வெட்டு குடைவரைக் கோயிலிலேயே இருப்பதாகவும் பெருந்தேவியே குடைவரையைக் குடைந்து அமைத்ததாகவும் எழுதியுள்ளனர். மு. கு. நூல், ப. 186. 28. New Indian Eகpress, 30. 5. 2006. 29. IPS: 439; என். சேதுராமன், பாண்டியர் வரலாறு, ப. 154. 30. The Hindu, 17. 8. 2003. 31. IPS: 735. 32. IPS: 459; என். சேதுராமன், மு. கு. நூல், ப. 194. 33. IPS: 460. 34. IPS: 685. 35. IPS: 792. 36. IPS: 872. 37. IPS: 873. 38. IPS: 967. 39. IPS: 687. 40. IPS: 692. 41. IPS: 764. 42. தினமணி, 5. 8. 2003. 43. IPS: 764. 44. IPS: 800. 45. IPS: 893. 46. IPS: 923. 47. தினமணி, 5. 8. 2003. 48. The Hindu, 17. 8. 2003. 49. தினமணி, 5. 8. 2003. 50. மேற்படி. 51.

Posted in கல்வெட்டு, தேவர், மறவர் | Tagged | Leave a comment

வழுதி (பாண்டியர்)

pandian012

வழுதி என்பது பாண்டியரின் குடிப்பெயர்களில் ஒன்று.

இயல்தேர் வழுதி என்று வடபுல மன்னர் வாடப் போருக்கு எழுந்த பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியும்  தகைமாண் வழுதி என்று பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனும்  போற்றப்படுகின்றனர்.

கூடல் , மருங்கை , கொற்கை ஆகிய இடங்களில் இருந்துகொண்டு வழுதி அரசர்கள் ஆண்டுவந்தனர்.

வழுதி பல கோட்டைகளை வென்றவன்.வழுதிக்கு அரசர் பலர் திறை தந்தனர் [8] தன் வேல் கொண்டு பகைவரை ஓடச் செய்தவன்  புலமாண் வழுதி தன் அரசியல் சுற்றத்துடன் திருப்பரங்குன்றத்தை வழிபடச் சென்றான்

வழுதி பொன்னணிகளை வாரி வழங்கும் வள்ளல்.[11] இவன் நாட்டின் சிறுகுடியில் பண்ணன் [12] வாணன் [13] என்னும் வள்ளல்கள் வாழ்ந்துவந்தனர்.

Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

பஞ்சவர்

pandian012

பஞ்சவர் என்னும் சொல் பாண்டியரை உணர்த்தும். இப்பெயரில் இலங்கையை பொதுக்காலத்திற்கு சற்று முன்னர் ஆண்ட ஐந்து பாண்டியர்களும் குறிக்கப்படுகின்றனர். சங்ககாலத்திலும் பிற்காலத்திலும் பாண்டியரை பஞ்சவர் என்னும் பெயருடன் அழைப்பது மரபாகவே ஆனது.

சங்ககாலக் குறிப்புகள் :

  1. சிலப்பதிகாரத்தில் வரும் நெடுஞ்செழியனை வாயில்காவலன் ‘பழியொடு படராப் பஞ்சவ வாழி’ என்று வாழ்த்தி விளிக்கிறான்.
  2. பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியை, காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் ‘செருமாண் பஞ்சவர் ஏறு’ என்றும், ‘தமிழ் கெழு கூடல் தண்கோல் வேந்து’ என்றும் குறிபிடுகிறார்.
  3. முத்தொள்ளாயிரம் பாண்டியரைப் பஞ்சவர் எனக் குறிப்பிடுகிறது.
  4. பஞ்சவன், வானவர்கோன் ஆரம் பூண்டவன் வானவர்கோன் ஆரம் வயங்கியதோள் பஞ்சவன் எனப் பாராட்டப்படுகிறான்.
  5. கூடல் நகரம் ‘பசிவு இல் உயர் சிறப்பின் பஞ்சவன் கூடல்’ எனப் போற்றப்படுகிறது.

Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment