ஸ்ரீவில்லிபுத்தூர் – வரலாறு

ஸ்ரீவில்லிபுத்தூர், வில்லி என்ற மன்னன்
ஆண்டதால் வில்லிபுத்தூர் என்றும், ஆண்டாள் பிறந்த
ஊராதலால், ‘ஸ்ரீ’ என்னும் திருநாமத்தோடு ஸ்ரீவில்லிபுத்தூர்
என்றும் அழைக்கப்படுவதாக, பள்ளி நாட்களில் படித்திருக்கிறேன்.
ஆனால் எனக்குத் தெரியாத விஷயங்களை சமீபத்தில் நாளிதழில்
படித்தேன்.


மதுரையைக் கைப்பற்றிய கான்சாகிப் என்ற மருதநாயகம்,
ஆங்கிலேயருக்கு வரி கொடுக்க மறுத்த ‘நெற்கட்டுச் செவ்வல்’
பாளையக்காரர் பூலித்தேவரை வெல்ல, ஸ்ரீவில்லிபுத்தூரில்
முகாமிட்டார். 1756 மே 6 -ல் நடந்த போரில் அவரை வெல்ல
இயலாமல், ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டையைக் கைப்பற்றினார்.
பின், அதை தரைமட்டமாக்கினார். இப்போது எந்தத் தடயமும்
இல்லாத அந்த இடம் ‘கோட்டைத்தலைவாசல்’
என்றழைக்கப்படுகிறது.

Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment

தென்னாட்டுப்புலி சிங்கம்பட்டி ஜமீன்

கி.பி. 1100-ம் ஆண்டு சிங்கம்பட்டி ஜமீன் உதயம் ஆனது. சிற்றரசேயாயினும் தமிழ் வித்வான்கள், கவிஞர்களையும் போற்றிப் பரந்த பெருமை கொண்ட ஜமீன். ராமநாதபுரம் மாவட்டத்தில் திருஉத்திரகோசமங்கையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் கலைகள் செழித்தோங்கிய காலம் அது.

மதுரை நகரில் அப்போது பாண்டியர் மன்னராட்சி புரிந்தனர். அரசக் குடும்பத்தில் சிற்றப்பனுக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட பூசலால் மகன் குலசேகரபாண்டியன் சோழ மன்னனிடம் தஞ்சம் புகுந்தான். பாண்டியர் வம்சத்தில் வந்த சிற்றப்பன் ஈழ நாட்டரசனிடம் அபயம் புகுந்தான். இலங்கேசன் உதவியால் பராக்கிரம பாண்டியன் ஈழவேந்தன் படை துணையுடன் ராமநாதபுரம் ராஜ்யத்தின் மீது
படையெடுத்து ஆக்கிரமித்தான்.

Continue reading

Posted in சிங்கம்பட்டி ஜமீன் | Tagged | 4 Comments

ஏன் பாளையக்காரர் தோற்றனர்?

சிவகங்கைச்சீமை வரலாறு பற்றி என்னுடைய பழைய குறிப்புகளைத் தோண்டிக்கொண்டிருக்கும்போது சில விஷயங்கள் தென்பட்டன. அவற்றைப் பார்த்தபோது ரொம்பவும் வியப்பாக இருந்தது.

18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்தான் பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனி(கும்பினி) தமிழ்நாட்டில் தன்னுடைய போர் நடவடிக்கைகளை அதிகரித்திருக்கிறது. அப்போதுதான் பாளையக்காரர்களை அடக்கும் போர்கள் ஆரம்பித்தன.

Continue reading

Posted in பூலித்தேவன் | Tagged | Leave a comment

பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

அரியலூர்:அரியலூர் அருகே பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுக்கப் பட்டுள்ளது.அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி அருகே பொய்யூர் கிராமத்தில் சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை திருப்பணி செய்யும் முயற்சியில், ஊர் மக்கள் ஈடுபட்டபோது, கருங்கல் பலகையில் எழுதப்பட்ட இரண்டு கல்வெட்டுகள் இருப்பது தெரியவந்தது.

அரியலூர் அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத் துறை தலைவர் மற்றும் கல்வெட்டு ஆராய்ச்சியாளருமான பேராசிரியர் தியாகராஜன் கூறியதாவது:இக்கோவிலில் இரண்டு கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. ஒன்று, பாண்டிய மன்னன் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் எழுதப்பட்டது.

Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

சிங்களவர்களை வென்ற பாண்டிய மன்னன்!

மெக்கன்ஸி சேகரித்த ஒரு வரலாற்று ஆவணம்

மெக்கன்ஸி காலத்திற்கு 200 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த வரலாறு (கி.பி.1594-1572-ல் நடந்தவை) ஒரு ஏட்டில் எழுதப்பட்டிருந்தது. அந்த விவரங்களை மெக்கன்ஸி தருகிறார்:

அந்த நாளில் பரமக்குடியில் ஒரு பாளையக் காரர் இருந்தார். அவர் பெயர் தும்பிச்சி நாயக்கர். பரமக்குடி பாளையத்திற்கு எதிராக வந்த பல யுத்தங்களில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.
Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

நீதி காத்த பாண்டிய மன்னர்கள்


இந்திய உபகண்டத்தின் தென் பகுதியில் மூன்று தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். இவர்களில் பாண்டிய மன்னர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை வளர்க்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமுடையவர்களாக விளங்கினர். சங்கம் அமைத்துப் புலவர்களுடன் தாங்களும் உடனிருந்து ஆராய்ந்து இவர்கள் தமிழ் வளர்த்தனர் என்பதைத் தமிழ் உலகம் நன்கறியும்.

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

லெமூரியா கண்டம் – பாண்டிய நாடு ஒரு ஆய்வுப்பயணம்

இன்றிலிருந்து சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் இது தொடங்குகின்றது. அதாவது கிமு 1000 வது முன்னால் இருந்து என்று வைத்துக் கொள்ளலாம். இந்தியா என்ற துணைக்கண்டம் பெரும் பகுதியாக இருந்தது. இந்தியா என்று இன்று சொல்லப்படும் நிலப்பரப்புக்குக் கீழே தான் லெமூரியா என்ற ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்தது. இன்றைய இந்திய துணைக்கண்டம் போலவே லெமுரியாவும் மூன்று பகுதிகளிலும் நீரால் சூழப்பட்டு இருந்தது. நிலத்தின் வளத்தைப் போலவே மக்களின் மாண்பும் வனப்பாக இருந்தது.

Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்

Post

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவனுடைய பெயர் ஸ்ரீமாறன். தமிழில் இதை திருமாறன் என்று சொல்லலாம். வியட்னாமில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைய சமஸ்கிருத கல்வெட்டு இவனை ஸ்ரீமாறன் என்று குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டில் ஆட்சி, ஆண்டு முதலிய விவரங்கள் கிடைக்கவில்லை. கல்வெட்டின் பெரும்பகுதி அழிந்துவிட்டது. ஆனால் எழுத்து அமைப்பின் அடிப்படையில் இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர்.

வியட்னாமில் வோ-சான் என்னும் இடத்தில் ஒரு பாறையின் இரண்டு பக்கங்களில் (VO–CHANH ROCK INSCRIPTION) இது செதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமாறன் என்ற அரசனின் குடும்பம் செய்த நன்கொடையை (தானத்தை) கல்வெட்டு குறிப்பிடுகிறது. பாறையின் ஒரு பக்கத்தில் 15 வரிகளும் மறு பக்கத்தில் ஏழு வரிகளும் உள்ளன. ஆனால் ஒன்பது வரிகள் தவிர மற்றவை தேய்ந்து அழிந்துவிட்டன. சமஸ்கிருத பாட்டுப் பகுதி வசந்த திலகா அணியிலும் ஏனைய வரிகள் உரைநடையிலும் உள்ளன. கிடைத்த வரிகளிலும் கூட சில சொற்கள் அழிந்துவிட்டன. கல்வெட்டின் சில வரிகள்:-
.
Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

தமிழ்ச் சமூக வரலாறு -4,பாண்டியர் காலம் (கி. பி. 13ம் நூற்றாண்டு)

பாண்டியர் காலம் (கி. பி. 13ம் நூற்றாண்டு)

சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் உருவான பாண்டியப் பேரரசு சோழப் பேரரசைப் போன்றே மண்டலம், நாடு, கூற்றம் ஆகிய ஆட்சிப் பிரிவுகளைக் கொண்டிருந்தது. பல்லவர் காலத்தைப் போன்றே சோழர் காலமும் வேளாண்மையை மையமாகக் கொண்ட பெருமளவிலான கிராமங்களை அடிப்படை அலகாகக் கொண்டிருந்தது.

வேளாண்மை முக்கியத் தொழிலாக இருந்தது. நெசவு, எண்ணெய் எடுத்தல், வெல்லம் தயாரித்தல், உப்பு விளைவித்தல் கிய தொழில்கள் நிகழ்ந்தன. பாண்டியர் ஆட்சியில் சிறப்புமிக்க தொழிலாக முத்து குளித்தல் விளங்கியது. உரோம் நாட்டிற்கு இம்முத்துக்கள் ஏற்றுமதியாகி தங்கத்தைக் கொண்டு வந்தன.

Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment

தமிழ்ச் சமூக வரலாறு -3, சோழர் காலம் (கி.பி. 10 கி.பி. 13)

சோழர் காலம் (கி.பி. 10 கி.பி. 13)

பல்லவர் காலத்துக்குப் பின் தமிழ்நாட்டில் உருவான ஒரு வலிமையான அரசு சோழப் பேரரசு கும். சோழர் ஆட்சியிலும் மன்னனே ஆட்சி மையமாக அமைந்தான். சோழநாடு மண்டலங்கள் என்ற பெரும் பிரிவுகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு மண்டலத்துள்ளும் வளநாடுகள் பல இருந்தன. பல கிராமங்களின் தொகுப்பாக கூற்றம் என்ற அமைப்பு இருந்தது.

இதை கோட்டம் அல்லது நாடு என்றும் குறிப்பிட்டனர். பல கூற்றங்களை உள்ளடக்கியதாக வளநாடு அமைந்தது. சுப்பாராயலுவின் கருத்துப்படி 10 முதல் 300 சதுரம் வரை பரப்பைக் கொண்ட நிருவாகப் பிரிவாக நாடு இருந்தது. நாடுகளின் பொருப்பாளர்களாக நாட்டார், நாடுகண்காணி என்போர் இருந்தனர். வேளாண்மை காவல் வரிவசூல் ஆகிய பணிகளை இவர்கள் மேற்கொண்டனர்.

Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment