சேற்றில் முளைத்தவனா வெள்ளையத்தேவன்?

உள்ளே புகுமுன், முதலில் புரட்டையும், புனைவுக் கதையையும் பார்ப்போம்.
“அடர்ந்த மரங்கள், அணியணியாகச் செழித்திருந்தது ஒரு காடு. அங்கு சேரும் சகதியும் நிறைந்த ஒரு பள்ளத்தில் ஒரு சிறு குழந்தை சிக்கி இருந்தது. அன்றைய தினம் பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபா

ண்டிய கட்டபொம்மு நாயக்கர் அந்தப் பகுதியில் வேட்டையாடிக் கொண்டிருந்தான். குரைத்துக் கொண்டு ஓடிய வேட்டை நாயைப் பின் தொடர்ந்து சென்றான். சேற்றில் குழந்தையைக் கண்டான். அந்தக் குழந்தையை கண்டு வாரி அழைத்துக் கொண்டான். திரும்பினான் அரண்மனை.

“காட்டில் கண்டிபிடிக்கப்பட்ட குழந்தை ஒன்று அரண்மனையில் வளர்ந்து வருகிறது என்பது தெரிந்து குழந்தையின் பெற்றோர்கள் மன்னருடன் விவரம் சொல்லி குழந்தையை தரும்படியாக வேண்டினர். மறுத்துவிட்டான் மன்னன். பிள்ளை பாசம் பெற்றவர்களுக்கு அல்ல, வளர்த்தவனுக்கு. பயனில்லாததால் திரும்பிவிட்டனர் பெற்றோர்கள்”
குழந்தை யார்?
ஒரு நாள் மங்களத்தேவர் அவர்களின் மனைவி விறகு வெட்டுவதற்காக காட்டிற்குப் புறப்பட்டார். போகும் போது தமது கைக்குழந்தையையும் எடுத்துச் சென்றார்.  ஒரு மரத்தடியில் குழந்தையைப் படுக்க வைத்துவிட்டு காட்டிற்குள் சென்றுவிட்டாள். போனவள் வெகு நேரமாகியும் திரும்பவில்லை. இருட்டிவிட்டது. தூங்கி எழுந்த குழந்தை தாயைக் காணாது தவழ்ந்து சென்று அந்தச் சேற்றில் சிக்கிக் கொண்டது.
Posted in வெள்ளையத்தேவன் | Tagged | 7 Comments

மருதுபாண்டியர் ஆக்கிரமித்துக் கொண்டனரா?

‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்னும் நூல் எழுதியுள்ளார் ம.போ.சி. அவர்கள. அதில் சின்ன மறவர் நாட்டின் செங்கதிராகத் திகழ்ந்த மான மறத்தமிழ் மாமன்னர் மருதுபாண்டியர்களையும் குறை கூறாமல் விட்டு விடவில்லை.
வழக்கம் போல் இங்கயும் வரலாற்றை திசை திருப்பிவிட்டு இருக்கின்றார். முரண்பாடான செய்திகளையே எடுத்துக்காட்டி இருக்கின்றார் என்பதை சுட்டிக்காட்ட வருந்துகின்றோம்.
ம.போ.சி கூறியதாவது:
“முத்துவடுகநாதர் ஒரு போரில் வீரமரணம் அடைந்தார். களத்திலே அவருடைய வீர மனைவி வேலுநாச்சியாரும், தளபதிகளான மருதுபாண்டியர்களும் இருந்தும் அவரைக் காப்பாற்ற தவறிவிட்டனர்”
இவ்வாறு உறுதியாகச் சான்று கூறிய ம.போ.சி அவர்கள்.
மேலும் தொடர்கிறார்:-
“அவர் மனைவி வேலுநாச்சியார் சிவகங்கைப் பாளையத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். வேலுநாச்சியார் திடீரென்று மரணமுற்றதும் அதுவரை தளபதியாக இருந்துவந்த மருதுபாண்டியர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர்”

என்று தமது நூலின் பக்.62 ல் குருப்பிட்டுள்ளார். இதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
Posted in மருது பாண்டியர்கள் | Tagged | Leave a comment

கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்தது யார்?

“ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியது” என்பது பழமொழி. வணிகராக வந்த வெள்ளையர் முதன் முதலாக வங்கத்தில் கால் பதிய வைத்தனர். பின்னர் ஆற்காடு நவாப்பின் கையாலாகாதத்தனத்தால், தண்டமிழ் கிழவர் நாட்டில் ஆட்சியுரிமையைப் பெற்றனர். 1790 ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 7ம் நாள் முதல், நாடு ஏகாதிபத்தியரின் முழு ஆட்சிக்குட்பட்டது.

தளபதி டொனால்ட் என்பவன் மதுரை ஆட்சித் தலைமை ஏற்றான். நிலவி இருந்த 72 பாளையங்களையும் சிதைத்தான். அவர்களிடம் இருந்த ஆயுதங்கள், போர்க்கருவிகள் அனைத்தையும் கொண்டு வந்து தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென்று 03.10.1801ல் ஆணை பிறப்பித்தான்.

இதனால் தமிழகம் ஆங்கிலேயருக்கு முழு அடிமையாகிவிட்டது. இவ்வகையில் மருதுபாண்டியர்கள் இறுதி மன்னர்களாவார்கள்.

Continue reading

Posted in தொண்டைமான் | Tagged | 1 Comment

பசும்பொன் தேவரின் சிந்தனை மொழிகள்

ஆன்மீக ஞானி,
தேசியத் தலைவர்,
பொதுவுடைமைத் தலைவர்,
வலது சாரி உள்ளம் கொண்ட இடதுசாரி அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட
அய்யா பசும்பொன் திரு. உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் சிந்தனை மொழிகள் சிலவற்றை நீங்கள் தெரிந்து கொள்ள, தெரிந்தவற்றை அனைவரோடும் பகிர்ந்து கொள்ள இங்கே பதியப்படுகிறது.

பசும்பொன் தேவரின் சிந்தனை மொழிகள்

ஞானிகள் அடக்காமாயிருப்பர். அவர்களின் நிலை, சோம்பேறிகளின் நிலை என்று எண்ணுவது தவறு. ஞானியாரின் அறிவு அரசுக்கு பயன்படும் காலத்தில் தான் உண்மையான அரசு ஆட்சியை வகுக்கும்.

Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

தேவர் – காமராஜர் ஆரம்பகாலத்தில்

1936-ல் நகரசபை தேர்தல் நடைபெற்ற இருந்த சமயம், அன்று காமராஜர் விருதுநகரில் ஒரு சாதாரண காங்கிரஸ் தொண்டர். சிறந்த தேச பக்தராகத் திகழ்ந்தார். அன்று வாக்குரிமை உள்ள நாடார் சமூகத்தில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் ஜஸ்டிஸ் கட்சியில் இருத்தால் நகரசபை தேர்தலில் காமராஜரை நிற்க வைக்க வேண்டுமென பசும்பொன் பெருமகனார் நினைக்கிறார்

ஆனால் காமராஜருக்கு ஓட்டுரிமை இல்லை. காரணம் அவர் பெயரில் எந்த ஒரு சொத்தும் இல்லை. காமராஜரின் தாயார் சிவகாமி அம்மையாரைப் பார்த்து “உங்கள் மகனை தேர்தலில் நிற்க வைக்கப் போகிறேன். உங்கள் பெயரில் உள்ள வீட்டை காமராஜ் பெயரில் எழுதி வையுங்கள்” என்று பசும்பொன் பெருமகனார் கேட்கிறார்.

Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி


வீரமும் மானமும் விஞ்சியவர் தமிழ் மறவர். இவர்களது தொன்மையையும், வாழ்க்கைச் சிறப்பையும் சங்க இலக்கியங்களான அகநானுhறு , புறநானுhறு, நற்றினை, பெரும்பாணாற்றுப்படை ஆகியவை ஏற்றிப் போற்றுகின்றன. விழுடககொடை மறவர், பினைகழல் மறவர், பெருந்தொடை மறவர் என்பன அந்த இலக்கியங்கள்மறவர்களுக்குச் சூட்டியுள்ள புகழாரங்கள்.
எதிரி எமனாக இருந்தாலும் அவனை அழித்து ஒழிப்பவர் மறவர் என, பகை என கூற்றம் வரினும் தொலையான் என்பது மறவர்களுக்குக் கூலித் தொகை கூறும் கட்டியமகும். பத்தாம் நுhற்றாண்டில் சோழர்கள் பெரும் நிலை எய்துவதற்கும், பதின்மூன்றாம் நுhற்றாண்டில் பிற்காலப் பேரரசர்களாகப் பாண்டியர் பெருமிதம் கொள்வதற்கும் அரசப்படையாக நின்று உதவியவர்கள் இந்த மறவர்கள்.

இவர்கள் மிகுதியாகவும் தொகுதியாகவும் வாழ்ந்த நாடு (இன்றைய இராமநாதபுரம், சிவகங்கைச் சீமைகள்) மறவர் சீமை என வாலாற்றில் குறிக்கப்படுகிறது.

Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged | Leave a comment

விடுதலைப் போரின் முதல்வன் யார்?

இக்கேள்விக்கு பெரிய விளக்கம் எதுவும் தேவையில்லை.
மாவீரன் பூலித்தேவன் தான் அவர். ஆனால் இதை மறைக்க செய்யப்பட்ட துரோக செயல்களை பட்டியலிடுவது அவசியம் ஆகிறது.
“திருநெல்வேலி மாவட்டத்தில் பாஞ்சாலங்குறிச்சி என்னும் சின்னஞ்சிறு பாளையப்பட்டார் தான் முதன்முதலில் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்டனர்”
“வெள்ளையரை எதிர்த்து முதல் முழக்கம் முழங்கியவன் வீரபாண்டிய கட்டபொம்மன் தான்

என்று ம.பொ.சி. அவர்கள் முதல் முழக்கம் என்னும் தமது நூலில்((பக்.11) குறிப்பிட்டுள்ளார். மேலும் அதே பக்கத்தில்,

“பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்துப் பாளையக்கார்கள் நிகழ்த்திய போர் இன்று உலகும் போற்றுகின்ற வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முன்பே தொடங்கி விட்டதெனலாம்” என்று உண்மையை எடுத்துக் கட்டியுள்ளார்.இது உண்மையானால்…
Posted in பூலித்தேவன் | Tagged | Leave a comment

மறவர் போற்றும் வீரப்போர்

தமிழர் திருமகனாம் தொல்காப்யிர் வாழ்ந்த காலம் வீரயுகக்காலம். உலகோர் போற்றும் மறக்காலம். அந்த சங்ககால மக்கள் வாழ்க்கை முறை அம்மக்களின் நாட்டுணர்வு, அவர் தம் வீரச்சிறப்பு, வாணிகம், அக்காலப் புலவர்களின் ஆழ்ந்த புலமை, மகளிரின் வீரப்பண்பு போன்ற செய்திகளையும் தொல்காப்பியம் தௌ;ளத் தெளிவாக காட்டுகிறது.

படை பலம்

அன்று ஒரு நாட்டின் வீரத்தினை நிலை நிறுத்திக் காட்டியது, நால்வகைப் படைபலங்களே ஆகும்.
தனி ஒரு வீரரும் தம் வீரத்தை தயங்காது முன்னேறிக் காட்டினர். அவர்களின் போர்ப்படைகளிலே தேர்ப்படை, யானைப்டை, குதிரைப்படை, காலாட்படை என்ற நால்வகைப் படைகளும் இருந்தன என்பதை,

Continue reading

Posted in மறவர் | Tagged | Leave a comment

சேர மன்னர்களின் பட்டியல்

சேர மன்னர்களின் பட்டியல்

முற்காலச் சேரர்கள்

சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் —கி.மு 1200 – (?)

கடைச்சங்க காலச் சேரர்கள் :

உதியஞ்சேரலாதன் கி.பி. 45-70
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கி.பி. 71-129
பல்யானைச் செல்கெழுகுட்டுவன் கி.பி. 80-105
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் கி.பி. 106-130
செங்குட்டுவன் கி.பி. 129-184
அந்துவஞ்சேரல் இரும்பொறை (காலம் தெரியவில்லை) Continue reading
Posted in சேரர் | Tagged | Leave a comment

சோழ மன்னர்களின் பட்டியல்

சோழ மன்னர்களின் பட்டியல்

முற்காலச் சோழர்கள்

இளஞ்சேட்சென்னி கரிகால் சோழன்
நெடுங்கிள்ளி நலங்கிள்ளி
கிள்ளிவளவன் …………………………………………………………………….கோப்பெருஞ்சோழன்
கோச்செங்கண்ணன் பெருநற்கிள்ளி
மாற்றார் இடையாட்சி
கி.பி. 200-848

இடைக்காலச் சோழர்கள்

Continue reading
Posted in சோழன் | Tagged | 2 Comments