பாண்டியர் கால மறவர் கல்வெட்டுகள்

பாண்டியர் கால மறவர் கல்வெட்டுகள்

தேனி திருநெல்வேலி மாவட்டங்களில் மறவர்கள் கல்வெட்டு சில
கிடைத்துள்ளன.

தேனி(பழைய மதுரை) மாவட்டமான பெரியகுளம்
கைலசநாதர் கோவில் கல்வெட்டில்,

மன்னன் : மாறவர்மன் சுந்தரபாண்டியன் 17 ஆம் ஆண்டில்
காலம் : 12- ஆம் நூற்றாண்டு
இடம் : கைலாசநாதர் கோவில், பெரியகுளம்,பெரியகுளம் தாலுகா மதுரை மாவட்டம்

செய்தி:
மறவர் தலைவன் ஒருவன் கைலாசநாதர் கோவில் இறைவனுக்கு 
எடுத்த முழம் கல் ஒன்று

கல்வெட்டு:
இது தெற்கில் நிலை மறவரில் பெற்றான் சொக்கன் செய்வித்த
கல் முழம் ஒன்று


திருநெல்வேலி மாவட்டமான திருநெல்வேலி
நெல்லையப்பர் கோவில் கல்வெட்டில்,

மன்னன் : கோனிரின்மை கொண்டான் பாண்டியர்
காலம் : 13- ஆம் நூற்றாண்டு
இடம் : நெல்லையப்பர் கோவில்,திருநெல்வேலி,திருநெல்வேலி மாவட்டம்

செய்தி:
திருநந்தவனத்திற்காக நிவந்தனமாக விடப்பட்ட நிலம் பற்றிய செய்தி.
இதை அமைத்தவர் ஆண்டார் மறவர் நெறிகட்டினார்.


கல்வெட்டு:
திரிபுவன சக்கரவர்திகள் கோனிரின்மைகொண்டான் ...கீழ் வெம்ப
நாட்டு... சுந்தரபாண்டியன் நந்தவனம் செய்யும் ஆண்டார்
மறவர் நெறிகட்டினார் உள்ளிட்ட...


கன்னியாகுமரி கேரளா வட்டங்களிலும் மறவர்கள் கல்வெட்டு
அரிதாக சில கிடைத்துள்ளது.
அவையில் கேரளா கொட்டாரக்கரையில் கிடைத்த கல்வெட்டு
6-ஆம் நூற்றாண்டு கல்வெட்டாகும். அதே போல் கன்னியாகுமரி
மாவட்டத்தில் கிடைத்துள்ள மறவர் கல்வெட்டு 10-ஆம் நூற்றாண்டு 
கல்வெட்டாகும்.

இடம்: கன்னியாகுமரி,விளவங்கோடு
காலம் : 10- ஆம் நூற்றாண்டு


செய்தி :
கோவிலில் உள்ள துவாரபாலகர் சிலை செய்த முஞ்சிறை என்னும்
ஊரை சார்ந்த மறவன்.

கல்வெட்டு
.......முஞ்சிறை மறவன் தன்மம்

இடம்: மனிகுண்டேஸ்வரர் கோவில்,கொட்டாரக்கரை,கேரளா திருவிதாங்கூர்
காலம் : 6- ஆம் நூற்றாண்டு

செய்தி :
கோவிலில் உள்ள கல் செய்த மறவன்.

கல்வெட்டு:

.......கல் மறவன் பிள்ளான் தன்மம்

நன்றி:
தென் இந்திய கல்வெட்டுகள்
This entry was posted in கல்வெட்டு, மறவர். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *