Tag Archives: பாண்டியன்

சடையவர்மன் சீவல்லபன் பாண்டியன் -கி.பி. 1145-1150

சடையவர்மன் சீவல்லபன் கி.பி. 1132 முதல் 1162 வரை பாண்டிய நாட்டில் ஆண்ட மன்னனாவான். சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்த இம்மன்னனது மெய்க்கீர்த்திகள் ‘திருமடந்தையும் சயமடந்தையும்’ எனத்துவங்குவது குறிப்பிடத்தக்கது. இவனைப் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ள கல்வெட்டுக்கள் பல நெய்வேலி,மதுரை போன்ற இடங்களில் காணப்படுகின்றன.

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

வீரகேசரி பாண்டியன் -கி.பி. 1065-1070

வீரகேசரி கி.பி. 1065 முதல் 1070 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி புரிந்த மன்னனாவான். சீவல்லப பாண்டியனின் மகனான இவன் சோழ மன்னனான வீரராசேந்திரனுடன் 1065 ஆம் ஆண்டளவில் போர் செய்து இறந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. வீரகேசரியின் இறப்பிற்குப் பின்னர் வீரராசேந்திரன் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தான். இவனது ஆட்சிக்குப் பின்னர் இவன் மகனான அதிராசேந்திரனும் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

அமர புயங்கன் பாண்டியன்-கி.பி. 930-945

அமர புயங்கன் கி.பி. 930 முதல் 945 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். இவன் ஆட்சி புரிந்த வேளையிலே சோழ மன்னனான முதலாம் இராசராச சோழன் சேர நாட்டின் மீது படையெடுத்திருந்தான் அச்சமயம் வழியில் எதிர்த்த அமர புயங்கனை போரில் தோற்கடித்தான் என திருவாலங்காட்டுச் செப்பேடு கூறுகின்றது. முதலாம் இராசராசன் பாண்டிய நாட்டைக் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

மூன்றாம் இராசசிம்மன் பாண்டியன்-கி.பி. 900-945

மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் கி.பி. 900 முதல் 946 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். பராந்தகப் பாண்டியனின் மகனான இவன் கி.பி. 900 ஆம் ஆண்டில் முடிசூடிக்கொண்டான். சடையன் மாறன்,இராச சிகாமணி,சீகாந்தன்,மந்தரகௌரவமேடு போன்ற பட்டங்களினை உடையவனாவான். பிரம்மதேயம்,தேவதானம்,பள்ளிச்சந்தம் ஆகிய அறச்செயல்களை அதிக அளவில் செய்தவன் என்ற பெருமையினை உடையவனும் ஆவான்.   … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

வரகுண வர்மன் பாண்டியன் -கி.பி. 862-880

வரகுண வர்மன் கி.பி. 862 முதல் 880 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான்.சடையவர்மன் என்ற பெயரையும் பெற்றிருந்த இம்மன்னன் இரண்டாம் வரகுண பாண்டியன் எனவும் அழைக்கப்பட்டான்.பாண்டியன் சீவல்லபனின் முதலாம் மகனான இவன் தனது தந்தை கி.பி. 862 ஆம் ஆண்டு இறந்த பின்னர் பட்டம் பெற்றான்.பல்லவ மன்னனான நிர்மதுங்கவர்ம பல்லவனுடனான நட்பின் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

சீவல்லபன் பாண்டியன் -கி.பி. 835-862

சீவல்லபன் கி.பி.835 முதல் 862 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான்.வரகுணன் மகனான சீமாறன் சீவல்லபன் கி.பி.835 ஆம் ஆண்டு ஆட்சியை ஏற்றான்.மாறவர்மன்,ஏகவீரன்,பரசக்கர கோலாகலன்,அபனிபசேகரன் ஆகிய சிறப்புப் பெயர்களையும் பெற்றவனாவான்.வரகுண வர்மன்,பராந்தகப் பாண்டியன் இருவரும் சீவல்லபனின் மகன்களாவர்.இவனது சிறப்புப்பெயரால் அவனிப சேகரமங்கலம் என்ற ஊர் திருச்செந்தூர் அருகில் உள்ளது என அவ்வூர்க் கல்வெட்டில் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

வரகுணன் பாண்டியன் -கி.பி. 792-835

வரகுணன் கி.பி. 792 முதல் 835 வரை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான்.இரண்டாம் இராசசிம்மனின் மகனான இம்மன்னன் இவன் பாட்டன் பெயரான சடையவர்மன் என்ற பெயரை சிறப்புப்பெயராகப் பெற்று சிறப்புற்றவன்.முதல் வரகுணப் பாண்டியனுமான வரகுணனைக் “கொற்றவர்கள் தொழுகழற்கால் கோவரகுண மகாராசன்” என சின்னமனூர் செப்பேட்டில் இவனைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.நந்திவர்மன் சோணாட்டை ஆட்சி செய்த பொழுது வரகுணப் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

இரண்டாம் இராசசிம்மன் பாண்டியன் -கி.பி. 790-792

இரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790 முதல் 792 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்து வந்த மன்னனாவான்.இரண்டு ஆண்டுகளே ஆட்சி செய்த இம்மன்னன் இராசசிம்மன் நெடுஞ்சடையன் என அழைக்கப்பெற்ற பாண்டிய மன்னன் பராந்தகனுடைய மகனாவான்.இவனது ஆட்சியில் எப்போரும் நிகழவில்லை இத்தகைய காரணங்களினால் இவனைப் பற்றிய வரலாறுகள் செப்பேடுகள்,பட்டயங்கள் எவற்றுள்ளும் குறிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

பராந்தகன் பாண்டியன் -கி.பி. 765-790

பராந்தகன் கி.பி 765 முதல் 790 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். அரிகேசரியின் மகனான இவன் நெடுஞ்சடையன் என்ற அடைமொழியினைப் பெற்றவன். கங்க அரசன் மகள் பூதசுந்தரி இவன் தாயாவாள் கி.பி. 765 முடிசூடிக் கொண்ட இவன் சடையவர்மன் என்ற பட்டத்தினைப் பெற்றவன். இவனைப் பற்றிய தகவல்கள் வேள்விக்குடிச் செப்பேடுகளிலும், சீவர … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

பராங்குசன் பாண்டியன் -கி.பி. 710-765

  பராங்குசன் கி.பி. 710 முதல் 765 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான்.ரணதீரன் மகனான இவன் தனது பாட்டனின் பெயரான அரிகேசரியைப் பட்டமாகப் பெற்றிருந்தான்.மாறவர்மன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்த இவன் தேர்மாறன் எனவும் முதலாம் இராசசிம்மன் எனவும் அழைக்கப்பட்டான்.   பொருளடக்கம் : 1 பராங்குசன் ஆற்றிய போர்கள் 1.1 நந்திவர்மனுடனான … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment