மறப்படை பாண்டியன் என்ற முத்தரையன் கல்வெட்டு

சங்கம்  மறுவிய தமிழ் கூறும் நல் உலகத்தை ஆண்ட வேந்தரில் பண்டையோன்,செழியன்,வழுதி,மீனவன் போன்ற புகழ் மொழிக்கு உரியவன் தென்னவன்பாண்டியன் ஆவான். அவனை "மறப்போர் பாண்டியன் மறக்களிறு மறப்போர் ஏறு" என சங்க இலக்கியங்கள் குறிக்கின்றது. அவன் மறக்குடியை சார்ந்தவன் என நாம் பல சான்றுகள் காட்டினாலும்
சில பொறாமைகொண்ட விஷமிகளால் பொறுக்க முடியாமல் நம்மில் சில சிகண்டிகளை
முன்னிறுத்தி அம்பெரிந்து வருகின்றனர். அந்த அறியாமையை நீக்க மேலும் ஒரு சான்றாக
தஞ்சையை சோழர்களுக்கு முன் ஆண்ட முத்தரையன் கல்வெட்டு பாண்டியனை சங்க இலக்கியம் கூறும் "மறப்படை பாண்டியன்" என்பதை போல் "மறப்படை மீனவன்" என்று முத்தரையன் கல்வெட்டு கூறுகின்றது.

Continue reading
Posted in தேவர் | Tagged , , | Leave a comment

நஞ்சன்கோட்டை கட்டிய தூங்கானை மறவன்

Thanks:vikatan
https://www.google.com/amp/s/www.vikatan.com/amp/story/oddities%252Fmiscellaneous%252F150815-did-you-know-about-perambalur-ranjankudi-fort

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூரிலிருந்து 13 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோட்டை. இது, பல போர்கள் நடந்ததற்கான சுவடுகளைத் தாங்கி நிற்கும் வரலாற்றுச் சின்னம். இந்தக் கோட்டையின் பெயரைக்கொண்டே ஊரும் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு. 

வரலாறு 

பிற்கால பாண்டிய மன்னனின் வம்சாவளியில் வந்த தூங்கானை மறவன், 1,600 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோட்டையைக் கட்டினார். பாண்டிய மன்னன் காலத்தில் கட்டப்பட்டதற்குச் சான்றாக மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக அந்தக் காலத்தில் அகழியும் மதில்சுவர்களும் வைத்து, சுமார் 57.5 ஏக்கர் அளவில் இந்த ரஞ்சன்குடி(நஞ்சன்கோட்டை) கோட்டை அமைந்துள்ளது. தூங்கானை மறவன் நோய்வாய்ப்பட்டிருந்ததால் (குஷ்டம்)  இந்தக் கோட்டையின் வேலை முடிக்கப்படாமல் இருந்துள்ளது. கோட்டை முற்றுபெறாத நிலையில் மன்னன் இறந்துவிட்டான். அவருடைய சமாதி இங்கு உள்ளது.
சோழர்காலத்தில் தட்டுப்போர்

Continue reading
Posted in தேவர் | Tagged , , , | Leave a comment

பாண்டியர் கால மறவர் கல்வெட்டுகள்

பாண்டியர் கால மறவர் கல்வெட்டுகள்

தேனி திருநெல்வேலி மாவட்டங்களில் மறவர்கள் கல்வெட்டு சில
கிடைத்துள்ளன.

தேனி(பழைய மதுரை) மாவட்டமான பெரியகுளம்
கைலசநாதர் கோவில் கல்வெட்டில்,

மன்னன் : மாறவர்மன் சுந்தரபாண்டியன் 17 ஆம் ஆண்டில்
காலம் : 12- ஆம் நூற்றாண்டு
இடம் : கைலாசநாதர் கோவில், பெரியகுளம்,பெரியகுளம் தாலுகா மதுரை மாவட்டம்

செய்தி:
மறவர் தலைவன் ஒருவன் கைலாசநாதர் கோவில் இறைவனுக்கு 
எடுத்த முழம் கல் ஒன்று

கல்வெட்டு:
இது தெற்கில் நிலை மறவரில் பெற்றான் சொக்கன் செய்வித்த
கல் முழம் ஒன்று


திருநெல்வேலி மாவட்டமான திருநெல்வேலி
நெல்லையப்பர் கோவில் கல்வெட்டில்,

மன்னன் : கோனிரின்மை கொண்டான் பாண்டியர்
காலம் : 13- ஆம் நூற்றாண்டு
இடம் : நெல்லையப்பர் கோவில்,திருநெல்வேலி,திருநெல்வேலி மாவட்டம்

செய்தி:
திருநந்தவனத்திற்காக நிவந்தனமாக விடப்பட்ட நிலம் பற்றிய செய்தி.
இதை அமைத்தவர் ஆண்டார் மறவர் நெறிகட்டினார்.


கல்வெட்டு:
திரிபுவன சக்கரவர்திகள் கோனிரின்மைகொண்டான் ...கீழ் வெம்ப
நாட்டு... சுந்தரபாண்டியன் நந்தவனம் செய்யும் ஆண்டார்
மறவர் நெறிகட்டினார் உள்ளிட்ட...


கன்னியாகுமரி கேரளா வட்டங்களிலும் மறவர்கள் கல்வெட்டு
அரிதாக சில கிடைத்துள்ளது.
அவையில் கேரளா கொட்டாரக்கரையில் கிடைத்த கல்வெட்டு
6-ஆம் நூற்றாண்டு கல்வெட்டாகும். அதே போல் கன்னியாகுமரி
மாவட்டத்தில் கிடைத்துள்ள மறவர் கல்வெட்டு 10-ஆம் நூற்றாண்டு 
கல்வெட்டாகும்.

இடம்: கன்னியாகுமரி,விளவங்கோடு
காலம் : 10- ஆம் நூற்றாண்டு


செய்தி :
கோவிலில் உள்ள துவாரபாலகர் சிலை செய்த முஞ்சிறை என்னும்
ஊரை சார்ந்த மறவன்.

கல்வெட்டு
.......முஞ்சிறை மறவன் தன்மம்

இடம்: மனிகுண்டேஸ்வரர் கோவில்,கொட்டாரக்கரை,கேரளா திருவிதாங்கூர்
காலம் : 6- ஆம் நூற்றாண்டு

செய்தி :
கோவிலில் உள்ள கல் செய்த மறவன்.

கல்வெட்டு:
Continue reading
Posted in கல்வெட்டு, மறவர் | Leave a comment

அரிய மறவர் கல்வெட்டுகள் சில….

அரிய மறவர் கல்வெட்டுகள் சில….

எண்: 1972/16
ஆண்டு: 8- ஆம் நூற்றாண்டு
அரசு மண்ணன் : கொங்கணி சிவமாறன்
இடம்: தர்மபுரி ஊத்தங்கரை

செய்தி:
மாவலி வாணராயரான மறவனார் சேவகன்
கமியதழுமன் போரில் இறந்தது.

கல்வெட்டு:
சிவமாறவர்மருக்கு யாண்டு
மாவலி வாணராயர் கங்கநாடாள
இந்திரன் தகடூர் மேல் வந்து மறவனார்
சேவகன் ……… Continue reading

Posted in கல்வெட்டு, மறவர் | Leave a comment

மீனாட்சி ஆண்டாளாக மாறிய கொற்றவை கோவில்கள்

கிளியும் கொற்றவையும்

சங்ககாலத்திற்கும் முன்னும் சங்கம் மறுவிய காலத்தில் பின்னும் கொற்றவையே முதன்மையான தெய்வமாக தமிழ் கூறும் நல்லுலகத்தில் மன்னர்களாலும் மறவர்களாலும்

வழிபடப்பட்டுள்ளது.

இதன் பின்பு சைவ,வைணவ பக்தி எழுச்சியினால் நிறைய கொற்றவை தெய்வம் சங்கு,சக்கரம் ஏந்திய திருமாலாகவும்,சிவனின் மனைவியாக மாற்றபட்டுள்ளது. இதற்காக போலியான பல கதைகள் சொல்லபட்டு வைதீக சடங்குகள் பின்பற்றபட்டுள்ளது. Continue reading

Posted in தேவர், மறவர் | Leave a comment

சாணார் அகிலதிரட்டும் தினத்தந்தி புரட்டும்

இந்த பதிவு மறவர்களை தினத்தந்தியிலும் அகிலதிரட்டு அம்மானையில்

தேவையில்லாமல் பொய்யான வதந்தி செய்தியாக போட்ட நாடார்களுக்கு ஒரு பதில் கட்டுரையாகும். Continue reading

Posted in நாடார், பள்ளர் | Leave a comment

திரையன் தேவர்கள்-who are thirayyars?

திரையர் என்பார் இன்னொரு பழந் தமிழ் வகுப்பார். திரை கடலின்

வழியாக வந்தவராதலின் அவர் அப்பெயர் பெற்றார் என்பர். தொண்டை

நாட்டை யாண்ட பண்டை யரசன் ஒருவன் இளந்திரையன் என்று பெயர்

பெற்றான். காஞ்சி மாநகரத்தில் தொண்டைமான் என்னும் பட்டமெய்தி

அரசாண்ட இளந் திரையைனைத் தலைவனாக வைத்து உருத்திரங்

கண்ணனார் பெரும் பாணாற்றுப் படையினைப் பாடியுள்ளார்.

Continue reading

Posted in கள்ளர், தேவர்கள், மறவர் | Leave a comment

சேத்தூர் ஜமீன்தார்கள் 

பாரம்பரிய சிறப்பு மிகுந்தவர்கள் சேத்தூர் ஜமீன்தார்கள். சேத்தூர் மற்றும் அவர்கள் ஆட்சிக்குட்பட்ட தேவதானம் பகுதியில் மிக அதிகமாக கோயில்கள் அவர்கள் அரவணைப்பில் தற்போதும் பொலிகின்றன. அந்த கோயில்களுக்கான திருவிழாக்கள் மற்றும் பூஜைகளை அவர்களது வாரிசுகள் முன்னின்று செம்மையாக நடத்தி வருகிறார்கள்.

Continue reading

Posted in சேத்துர் ஜமீன் | Leave a comment

கொல்லங்கொண்டான் ஜமீன்தார்கள் 

-முத்தாலங்குறிச்சி காமராசு

ஜமீன் கோயில்கள் 

கொல்லங் கொண்டான், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அமைந்திருந்த ஜமீன்.  இயற்கை வனப்புடன், மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள சிற்றூர். தற்போதும் காணப்படும் பிரமாண்டமான அரண்மனை, சிறந்து விளங்கிய ஜமீனுக்குச் சான்றாக நிற்கிறது. மேற்குகடற்கரைப் பகுதியில் பிரசித்திபெற்ற நகரம் கொல்லம். இவ்விடத்தினை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தவன் கேரள சிற்றரசன் மாறவர்மன். இவன் போர்புரிந்து பல பகுதிகளில் தன் ஆட்சியை விஸ்தரித்தான். 

இவனால் பாதிக்கப்பட்டவர்கள், ராஜபாளையத்தின் அடுத்தப் பகுதியை ஆண்ட வாண்டையத்தேவன் என்ற சிற்றரசனிடம் வந்து முறையிட்டார்கள். வாண்ைடயத்தேவன் பெரும்  படை திரட்டி கொல்லத்துக்கு சென்று போரிட்டு வென்றான்; இதனால் ‘கொல்லங்கொண்டான்’ என்றழைக்கப்பட்டான். கொல்லத்து அரசனிடமிருந்து மீட்ட நிலங்களை, அந்தந்த சிற்றரசர்களிடமே ஒப்படைத்தான். Continue reading

Posted in வாண்டாயத் தேவன் | Leave a comment

ஊத்துமலை ஜமீன்தார்கள்

தங்கக் கொடிமரம் நிறுவிமங்காத புகழ் பெற்றவர்

சிங்கம்பட்டி – நெல்லை மாவட்டம்

ஊத்துமலை ஜமீன்தார்கள் கோயில்களை பராமரிப்பதில் ஆர்வம் கொண்டவர்களாக திகழ்ந்தனர். தமிழுக்கும் சிறந்த தொண்டாற்றிய அவர்கள்  தாங்கள் வழிபடும் ஆலயத்தில் தங்கக் கொடிமரத்தை நிறுவி வணங்கி வருகின்றனர். கோயில்களை புனரமைப்பதிலும் திருவிழா  நடத்துவதிலும் முன்னணியில் நிற்பர். கோமதி அம்மனை தங்களது வீட்டில் பிறந்த மகளாக எண்ணி அவரது திருமணத்தை தங்கள் இல்லத்  திருமணம்போல் விமர்சையாக நடத்தி வருகின்றனர். 

ஜமீன்தார்கள் தென்பகுதிகளில் ஒரு குறுநில மன்னர்கள்போல ஆண்டு வந்தனர். அவர்கள் பாளையக்காரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.  ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் மறவர் பாளையமும், கிழக்குப் பகுதியில் நாயக்கர் பாளையமும் சிறப்புற்று  விளங்கின. 

  Continue reading

Posted in ஊற்றுமலை ஜமீன் | Leave a comment