கடம்பூர் ஜமீன்தார்கள்

கடம்பூர், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வானம் பார்த்த பூமி. மிகப்பெரிய கரிசல் காடு. ஒருகாலத்தில் கடம்ப மரங்கள் அடர்ந்த காடாக காணப்பட்டது இவ்வூர். இம்மரங்களை அழித்து உருவாக்கப்பட்ட ஊரே, (கடம்ப + ஊர்) கடம்பூர் என்றழைக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகில் உள்ள நகரம் இது. நெல்லை-சென்னை ரயில்பாதையில் அமைந்துள்ளது. அனைத்து ரயில்களும் இங்கே நின்று செல்கின்றன.

Continue reading

Posted in கடம்பூர் ஜமீன் | Leave a comment

சுரண்டை ஜமீன்தார்கள்

குற்றால மலையில் இருந்து ஓடி வரும் சிற்றாறும், சொக்கம்பட்டி வழியாக ஓடி வரும் கருப்ப நதியும் சங்கமிக்கும் அற்புத பூமி, சுரண்டை. இங்கு விவசாய விளைச்சலுக்குப் பஞ்சமில்லை; பக்தி விளைச்சலுக்கும் குறைவில்லை. சுரண்டை ஜமீன்தார்கள் கோயில் கட்ட இடம்கொடுத்தனர். மண்டகப்படி திருவிழாவை ஏற்படுத்தினர். கஷ்டம் பல வந்தாலும், ஆங்கிலேயர் காலத்தில் தங்களால் பலமுறை கப்பம் கட்ட முடியாமல் தங்கள் ஜமீன் ஏலத்துக்கு சென்றபோதும் தாங்கள் உருவாக்கிய கோயில்களை மறக்கவில்லை. தாங்கள் செய்யும் பணிவிடைகளை இன்றளவும் அவர்களுடைய வாரிசுகள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். 

Continue reading

Posted in சுரண்டை ஜமீன் | Leave a comment

சங்க இலக்கியத்தில் மறவர்கள்

சங்க இலக்கியத்தில் பல இடத்தில் போர்மரபினராகவும்

வேந்தர் மரபினராக காட்சியளிக்கும் மறவர்களை பற்றிய

குறிப்புகள்.

சங்க இலக்கியத்தில் மறவர்கள்

Continue reading

Posted in மறவர் | Leave a comment

மணியாச்சி ஜமீன்

இதுவரை வணக்கம் மும்பை என்னும் மும்பையில் இருந்து வெளிவரும் வார இதழலில் 146 வாரம் நட்டாத்தி, சாத்தான்குளம், குளத்தூர், சேத்தூர், இளையரசனேந்தல் ஜமீன்தார்கள் குறித்த வரலாறு எழுதி வந்தேன். தற்போது மணியாச்சி ஜமீன்தார் குறித்து எழுதப்போகிறேன். அந்த வரலாற்றை எனது வெப்சைட் மூலமாக உங்களோடு வாரம் வாரம் பகிர்ந்து கொள்ளப்போகிறேன். ஆதரவு தாருங்கள். நன்றி.

147. மறைந்த ஜமீன்களும் மறையாத நினைவுகளும்

&முத்தாலங்குறிச்சி காமராசு

மணியாச்சி ஜமீன்தார்

நான் பல ஆண்டுகளாகவே மணியாச்சி ஜமீன் வரலாற்றை பற்றி அறிவதற்காக பல முயற்சிகள் எடுத்து வந்தேன். வசந்த் தொலைக்காட்சியில் மணியாச்சி ஜமீன் வரலாறு படமெடுக்கும் போது நெல்லையில் வைத்து மணியாச்சி ஜமீன்தாரை சந்தித்தார்கள் நமது குழுவினர்.

அவர் நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் தான் ஜமீன்தார் வாரிசுதாரர் பணியாற்றுகிறார் என்ற தகவல் கிடைத்தது. நான் ஒருமுறை சென்ற போது அவரை நான் சந்திக்க முடியவில்லை Continue reading

Posted in மணியாச்சி ஜமீன் | Leave a comment

காரண மறவர்

கல்தேர் ஓட்டிய காரண மறவர்

உத்திரகோசமங்கையில் கல் தேர் ஒட்டிய காரண மறத்தி என்னும் “பொன்னாச்சி அம்மன்” பற்றி கதையும் ஆதாரபூர்வமான சுவடியும் இருக்கும் அது காரண மறவர்களை குறிக்கின்றது. இவர்களை சக்கரவர்த்தி மறவர் எனவும் கூறுவர். மதுரை பூர்வீகமான மறவர்களில் இவர்களும் ஒருவர். மதுரை நெடுங்குளம்,பனங்காடி,கோச்ச்டை இன்னும் மதுரையில் பல இடங்களில் இருக்கும் மறவர்களில் இவர்கலும் ஒருவர். இதேப்போல் கொற்க்கை என்னும் தூத்துக்குடி பகுதியிலும் பரதவர் அருகே வாழும் இவர்கள் “பொன்னாச்சி அம்மன்” வழிபாடு உள்ளவர்கள். மதுரை பகுதிகளிலே “பொய்சொல்லா பாண்டியன்” மற்றும் “முத்தையா கருப்பையா” என்னும் இரட்டை தெய்வத்தை வழிபடுகின்றனர்.இவர்களில் பலருக்கு கிளைகள் அறியாது சிலருக்கும் மட்டுமே கிளை முறைகள் அறிந்தவர்கள் அது…..

காரன[சக்கரவர்த்தி] மறவர்.

1.தேவன்
2.ராயர்
3.பண்டையோன்
4.பருவச்சான்
5.முருகதினி
6.வளத்தான்
Continue reading

Posted in மறவர் | Leave a comment

திருவிதாங்கூர் மறவர் படை

Travancore Maravar Army – A historical views with evidences

==============================================

மார்த்தாண்ட வர்மா

திருவிதாங்கூர் சமஸ்தானம்  மார்த்தாண்ட வர்மாவால் நிர்மாணிக்கப்பட்டது.மிகவும்திறமையானவரும் ராஜதந்திரியான அரசர் மார்த்தாண்ட வர்மா தொடர்ந்து பல்வேறு போர்களில்வென்று கன்னியாக்குமரி முதல் கொச்சி வரை சமஸ்தானத்தை விரிவுபடுத்தியவர்.(1)

Continue reading

Posted in தேவர், தேவர்கள், மறவர் | Leave a comment

மதுரை சித்திரை திருவிழாவில் மறவர் மண்டகப்படிகள்

கோவில் மாநகரம் விழாக்கள் மாநகரம் என   அழைக்கப்படும் மதுரை மாநகரம் சித்திரை திருவிழாக்கள்

மிகவும் பிரசித்தம் .

மதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும் , வைணவமும் இணைந்த்த் திருவிழா ஆகும். இரு சமயங்கள் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன.

இதனால் வைகை ஆற்றின் வட கரையில் அமைந்த ஊரான தேனூரில் ஆற்றில் இறங்கும் விழா, வெகுகாலமாகவே நடைபெற்றுவருகிறது. பின்னாளில் இத்திருவிழா மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும்படியான விழாவாக மாற்றியமைக்கப்பட்டது. இதற்காக, மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது. உண்மையில் மண்டூக மகரிசிக்கும் நாரைக்கும் சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம்.

Posted in சேதுபதிகள், தேவர், மறவர் | Leave a comment

சேதுபதிகளின் சித்திரக்கூட ஓவியங்கள்

சேதுபதி பட்டாபிஷேக காட்சி

☆•☆•☆•☆•☆•☆•☆•☆•☆•☆•☆

சேதுபதிகளின் சித்திரக்கூடம் என்று அழைக்கப்படும் இராமநாதபுரம் இராமலிங்க விலாச உட்புறத்தில் சேதுபதி காலத்தில் இராமாயணம், பாகவதம், திருமால் அவதாரங்கள், தஞ்சை மராட்டிய மன்னர் சரபோஜிக்கும் முத்துவிஜய ரகுநாத சேதுபதிக்கும் இடையே நடைபெற்ற போர்க் காட்சிகள், சேதுபதி மன்னரின் பள்ளியறைக் காட்சிகள் ஆகியவை ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இராமர் பீட மண்டப மேல் வளைவுகளில் சேதுபதி மன்னர் உருவங்கள் பல்வேறு நிலைகளில் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. இதில் இரகுநாத சேதுபதி தமது குலதெய்வமான இராஜராஜேஸ்வரி அம்மையிடமிருந்து செங்கோல் பெறும் நிகழ்வும் காணப்படுகிறது. ஆனால் தொல்லியல் குறிப்பு மீனாக்ஷியிடமிருந்து செங்கோலை சேதுபதி தனது இருகரங்களையும் ஏந்தி பெற்றுக்கொண்டாதாக பதிவு செய்துள்ளது.

இவ்வோவியத்தில் இராஜராஜேஸ்வரி அம்மன் அமர்ந்த கோலத்திலிருந்து செங்கோலை முத்து

விஜய ரகுநாத சேதுபதிக்கு வழங்க, அவர் இரு கையை நீட்டிப் பெறுகிறார். அருகில் அரசியும் இளவரசரும் சாமரம் வீசும் பெண்டீரும் காட்டப்பட்டுள்ளனர். மன்னரும் இளவரசரும் ராஜபுத்திர பாணியில் ஆடை அணிகலன்களை அணிந்துள்ளனர். சேதுபதி மன்னர் முடிசூட்டுவிழாவிற்கு பல்வேறு நாட்டிலிருந்து பல மன்னர்கள் -72 பாளையக்காரர்கள்-மதுரை நாயக்கர் முதலானோர் கலந்துகொண்ட குறிப்புகளைக்காண்கிறோம். மதுரை, தஞ்சை அரசர்கள் சரியாசனத்திலும்,பாளையக்காரர்களில் சில்லவார், மறவர்கள் முதலானோர்கள் அதற்கடுத்த வரிசையிலும், தொட்டியர் கம்பளத்தார் அதற்கடுத்து பணிவுடன் நின்ற நிலையிலும் அவரது பேரவையில் இருந்தமையை வரலாறு சொல்கிறது. முடிசூடல் வைபவத்திற்கு தனுஷ்கோடியிலிருந்து தீர்த்தம் வரவழைக்கப்பட்டு, அபிஷேகம் செய்யப்பட்டு ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தினாலானமணிமுடியை அணிந்தபின் பாரம்பரிய வாளைத்தாங்கியபடி போகலூரிலுள்ள மறவர்தலைவரிடம் ஆசிபெறுதலோடு முடிசூட்டு வைபவம் நிறைவு பெறுகிறது. 

Continue reading

Posted in சேதுபதிகள், தேவர், தேவர்கள் | Leave a comment

தமிழக போர்குடிகளிடம் ஆயுதபரிமுதல் செய்த ஆங்கிலேயர்

விடுதலை போராட்டம் உச்சகட்டத்தை அடைந்து 19 நூற்றாண்டின் தொடகக்த்தில் முத்துராமிலிங்க சேதுபதி,கட்டபொம்மன்,மருதுகள் என்று தென்னக பாளையக்காரர்கள் அனைவரும் தோற்ற தருனம்.

தளபதி அக்கினியூவின் அந்த ஆலோசனையை ஆங்கிலேய கம்பெனித்தலைமையை அப்படியே ஏற்றுகொண்டது. திருநெல்வேலி,மதுரை,இராமநாதபுரம்,சிவகங்கை,திண்டுக்கல் சீமைகளில் உள்ள அமில்தார்கள்,குடிகளிடம் எஞ்சி இருந்த ஆயுதங்களைப்பறித்து கைப்பற்றும் பணியில் ஈடுபட்டனர்.சிவகங்கை சீமையில் இந்த பணிக்கு வைகுந்தம் பிள்ளை என்பவரை புதிய  நியமனம் செய்து இருந்தனர்.பரங்கியர்களது திட்டத்தின் வெற்றியை குறிப்பதுடன் அந்த சீமை மக்கள் மீண்டும் ஒரு ஆயுத போராட்டத்திற்க்கு ஆயத்தமான நிலையில் இருந்தனர் என்பதையும் புலப்படுத்துகின்றன.

இப்படி மூன்று மாவட்டங்களான இராமநாதபுரம்,சிவகங்கை,திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மறவர்,கள்ளர்,அகம்படியார்,கம்பளத்தார் போன்ற போட்குடிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் அறிக்கை இதுவே.

Lord Agnew’s ban carrying weapon Continue reading

Posted in சிவகங்கைச் சீமையின் மன்னர், தேவர்கள், வரலாறு | Leave a comment

Remembering the first freedom fighters banished from India

http://www.thehindu.com/news/national/tamil-nadu/remembering-the-first-freedom-fighters-banished-from-india/article22718009.ece

Vengum Periya Wodaiyana Tevar of Sivaganga, who was deported by the British in 1802  

Continue reading

Posted in சிவகங்கைச் சீமையின் மன்னர், மருது பாண்டியர்கள், மறவர் | Leave a comment