மகாபாரதப் போரை நினைவு கூரும் உடப்பு திரௌபதை அம்மன் திருவிழா

கோவனூர் கிராமத்தில் சோழர் கால சிலை கண்டுபிடிப்பு –தினத்தந்தி செய்தி
ஜூன்-29
பொன்னமராவதி அருகே கோவணிக்கடன் அய்யனார் கோவிலில் திருப்பணி செய்த போது அதில் எழுத்துக்கள் இருப்பதாக தெரியவந்தது. இது குறித்து திருப்பணி குழு தெரிவித்த செய்தியை தொடர்ந்து மேலப்பனைய்யூர் தொல்லியல் ஆய்வாளர் ராஜேந்தித்திறன் கள ஆய்வில் இறக்கின்றார்அப்போது அய்யனார் சிலையடியில்
“இச் சிலை கோவனூர் மறவன் தர்மன் குரலான மூவாயிர பேரரையன் தன்மம்”
என பொறிக்கப்பட்டிருந்தது சோழர் கால கலைவடிவில் இது 900 ஆண்டு பழைமையான ஒன்றாக
கருதப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.
“கோவனூர் மறவன் தர்மன் குரலான மூவாயிர பேரரையன் தன்மம்”
நன்றி: தினதந்தி
வேளிர் பற்றி இது நாள் வரை பல அறிஞர்கள் கூற்றில் வேளிர்கள் துவாரகையில் இருந்து வந்தவர்கள்
எனவும் வேற்று மொழியினர் எனவும். பிறங்கடை மரபினர் எனவும் பல திரிபுகள் செய்தனர்.மலை ஆண்ட அரசர்களை வட இந்தியர் எனவும் புறநானூறு இடைசொருகள் பாடலான கபிலர் பாடியதுபோல் ஒரு பாடலை ஜோடித்து “நீயே வடபால் முனிவன்………” என அதற்க்கு ஒரு வந்தேரியான
நச்சினார்கினியரை வைத்து உறை எழுதினர்.
இது அத்தனையும் இலங்கை தமிழ் பிராமி கல்வெட்டு முன் பொய்யாய் போனது இது இந்தியாவில்
இருந்தால் மறைக்கபட்டிருக்கும். இது இலங்கை அதனாலே வெளிவந்து விட்டது.
இலக்கியவாதிகளும் சரி வரலாற்று ஆசிரியர்களும் சரி நடுநிலைமை என்றால் என்ன விலை என்றே கேட்பார்கள் போல. சிலப்பதிகாரத்துக்கு ஆளுக்கு ஆள் உறை எழுதி தள்ளுபவர்கள் இதில் மறவர்கள் எந்த பகுதியில் குறிப்பிடபடுகிறார்கள் என்றால் வேட்டுவ வரியாம். அந்த வேட்டுவ வரியில் விளிம்பு நிலை மக்களாக மறவர்களும் எயினர்களும் குறிப்பிடபடுகிரார்களாம். விளிம்பு நிலை மக்கள் கொலை,கொள்ளையில் ஈடுபடுகின்றனராம். அப்போது வேறு எந்த இடத்திலும் மறவர்களை பற்றி குறிப்பிடபடவில்லை அப்படித்தானே.
மகாவித்துவான் தமிழறிஞர் இராகவ அய்யங்கார் தமிழக குறுநில மன்னர்கள் என்னும் தலைப்பில் வேளிர்வரலாறு,கோசர்,பல்லவர் வரலாறு,சேதுநாடு என்னும் தலைப்புகளில் சேதுபதிகள் என்னும் தலைப்பில் மறவர்கள் என்ற இனம் தொன்றுதொட்டே தமக்கியல்பாயுள்ள வீரச் செயலாலும் வில்-வாள் முதலாய படைத்தொழில் வலியாலும் தம் உயிர் வாழ்தலிற் சிறந்த தமிழ்நாட்டு மறவர் குடியினராவர் . அகம் வில்லுழுவர்,வாளுழவர்,மழவர்,வீரர் முதலிய பெயர்களில் இவர்களை கூறுவர் முன்னோர். இவர் திரைகவர்ந்ததால் வெட்சி மறவர் எனும் பெயர் பட்டனர்.
நிரைகளை மீட்கும் மறவரை கரந்தை என கூறுவர்.
வெட்சி மறவர்க்கு ஆறலைப்பார்,கள்வர் முதலிய பெயர்களும் கரந்தை மறவர்க்கு வயவர்,மீளியர் முதலிய பெயர்களும் நன்று பொருந்தனுவாகும்.
திருநெல்வேலியிலுள்ள பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள நடுகள் கல்வெட்டு வடுகப்படையுடன் வந்த வெங்கலராசனுக்கும் பாண்டியன் வெட்டும் பெருமாளுக்கும் இடையே நடந்த போர். இதன் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. இதை அரசு ஆவணகாப்பகமே வெளியிட்டுள்ளது.
படைப்பற்று குடியிருப்புகள் படையினருக்கு வழங்கப்பட்ட நிலக்கொடையாகும்.பெருவேந்தரின் மோதற்களமாகப் பயன்படுத்தப்பட்ட இப்பகுதியில் மறவர் மக்களுக்கு மட்டும் வேந்தர்கள் வழங்கிய படைப்பற்று கல்வெட்டுகள் விரையாச்சிலை,குருந்தன்பிறை க.என்க.என்(354,727,743),மலையாலங்குடி க.என்(402,403),பெருங்குடி க.என்(364,712).இளஞ்சார்,புலிவலம் க.என்(648,792).படைப்பற்றின் மக்களாக மறவர்களே அரையர்களாகவும்,ஊரவர்களாகவும் செயல்பட்டனர் க.என்(393).இது இரண்டாம் இராஜாதிராஜன் காலத்திய கல்வெட்டு செய்தி (1926:257) உறுதிப்படுத்திகிரது
அரசமக்களும் மறமுதலிகளும் அரசமக்கள்: மறவர்களில் அரையர்,பேரரையர்,நாடாள்வார் போன்றவர் இருந்தனர். இவர்களே அரசமக்கள். அரையர் பற்றிய கல்வெட்டுகள்
அச்சுதராய அப்யுக்தம் என்னும் நூல் மற்றும் பட்டயங்களின் செய்தி தொகுப்பு விஜயநகர வரலாறு.
SOURCES OF VIJAYANAGA HISTORY
JB. KRISHNASWAMI AIYANGAR, m.a.J
Professor of Indian History and Archeology, University of Madras
Fellow of the University of Madras;
Member of the Royal Asiatic Society
of Great Britain and Ireland ;
Fellow of the Royal Historical Sociely ;
Professor and Fellow of the Mysore University ;
Reader, Calcutta University.
இந்த நூல் சாக்கோட்டை ஜே.பி.கிருஷ்னசாமி அய்யங்கார் இந்திய வரலாறு தொல்லியல்துரை ஆய்வாளராகவும் தலைசிறந்து விளங்கியவர். முன்னாள் மெட்ராஸ் பல்களைகழகத்தின் துனைவேந்தரும் ஆவர். இவரது புத்தகமான இது பிரிட்டன் ஐயர்லாந்து மற்றும் கல்கத்தா பல்கலைகழக்த்தில் உள்ளது. அமெரிக்க கொலம்பியா நூலகத்தின் பிரதியே இது. இது இந்தி அரசால் தொல்லியல் துரை ஆவனமாக பதியபட்டுள்ளது .இதன் ஆண்டு 1921.
“தென் இந்தி முகமதிய படையெடுப்புகள்” என்னும் நூலில் சாக்கோட்டை
சுவாமிநாத அய்யரால் 1921 இல் படி எடுக்கப்பட்ட கண்டதேவி கல்வெட்டு தேவகோட்டை ஜமீன் பங்களா அருகே உள்ள மரத்திற்கு அருகே இருந்த கல்வெட்டு கல்வெட்டு ஆண்டு 1334 ஹிஜிரா 771
மன்னன்:இராசாக்கள் தம்பிரான் சூரத்தான்(சுல்த்தான்)
கிருஷ்ன சாமி அய்யங்காரால் எழுதப்பட்ட நூலில் உள்ள அரசு கல்வெட்டு.
ஹிஜிரா கல்வெட்டு எண் : 771(கிபி 1300 இல் இருந்து 1330 க்குள்)
இடம் : கண்டதேவி படி எடுக்கப்பட்ட ஆண்டு அல்லது பதியப்பட்ட ஆண்டு -1921